Wednesday, October 8, 2014

ஜோதிடருக்கான இணைவுகள்.


ஜோதிடருக்கான இணைவுகள்.


        பல பாரம்பரிய ஜோதிட நூல்களில், ஜோதிடர்களுக்கான இணைவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி இந்தப் பகுதியில் காண்போமா .?

       பிருகத்   பராசர    ஹோரா  சாஸ்திரா “ -- எனும் நூலில் -- ஜோதிடம்,  கல்வி,   கணிதம்,  நடனம், விஞ்ஞானம், நகைச்சுவை, மற்றும் சிற்பக்கலை ஆகியவற்றுக்குக் காரகன் புதன் என்று குறிப்பிடப்பட்டு ள்ளது.

1.       ஜோதிடத்திற்கும் ,  8  ஆம்     டத்திற்கும்   கண்டிப்பாக   சம்பந்தம்   இருப்பதாக மகரிஷி    பராசரர்     குறிப்பிடுகிறார்.     ஏனெனில்,   ம்   வாழ்க்கையில்,  கடந்த காலத்தையும், வருங்காலத்தையும் 8 ஆம் இடமே குறிப்பதாக பராசரர் கருதுகிறார்.

2.       பல்வேறு   ராசிகளில்   லக்னம்   அமையும்போது   ஏற்படும்  பலன்களைப்பற்றி குறிப்பிடுகையில், பராசரர், லக்னாதிபதி 8 ல் இருந்தால், ஒருவரை மறைபொருள் பற்றிய விஞ்ஞான நிபுணராக ஆக்கிவிடுகிறது என்றும் குறிப்பிடுகிறார்.

3.       மேலும் ஐந்தாமிடம்  யந்த்ர,   மந்த்ரம்    முதலியவற்றைக்    கற்றுக்   கொள்ளுதல் மற்றும் உருவாக்கும் இடம் என்கிறார். ஐந்தாமிடம், தொழில்  ஸ்தானமான பத்தாமிடத்துக்கு, 8 ஆம் டமாதலால் , மறைபொருளுடன்  தொடர்பு இருக்கலாம், அது ஏனெனில் லக்னத்துக்கும் 8 ஆம் டத்திற்கும் தொடர்பு இருப்பதே காரணம் எனக் கருதுகிறார்.

4.       சத்யாச்சார்யா  தனது   சத்ய  ஜாதக” -- எனும் நூலில் -- ஜோதிடம், சிற்பக் கலை, கவிதைகள் போன்றவற்றிற்கு புதனே காரகன் என்கிறார்.

5.       வராகிமிகிரர் தனது பிருகத் ஜாதகம்” -- எனும் நூலில் --  இரு இணைவுகளைக் குறிப்பிடுகிறார்.

() சூரியன் மிதுனத்தில் இருக்க, ஒருவர் கற்றறிந்த ஜோதிடராகவும், செல்வந்தராகவும்  ஆகிறார்.
() சிம்மத்தில்  சந்திரனிருந்து புதனால் பார்க்கப்பட ஒருவர் மிகச் சிறந்த ஜோதிர் ஆகிறார்.

6.       பித்துயசாஸ் -- தனது  ஹோரா  சாஸ்த்ரா” - எனும் நூலில் -- கடகத்தில்  சந்திரன் இடம்பெற ஒருவர்  ஜோதிடர் ஆகிறார்  என்றும், வேறு சில ரிஷிகள், கடக சந்திரன் மற்றும் மிதுன சூரியனும்  ஒருவர்  ஜோதிடராகக்  காரணமாகிறது -- எனக் குறிப்பிடுகின்றனர்.

7.       கல்யாணவர்மா,   தனது    சாராவளி” -- எனும் நூலில் -- மிதுனச் சூரியன் மற்றும் கடக சந்திரனும்   ஒருவரை    ஜோதிடர் ஆக்குவதாகக்   குறிப்பிடுகிறார். கன்னியில் சந்திரன் இருந்து புதனால் பார்க்கப்பட திறமைமிக்க ஜோதிடர் ஆகிறார். அதே போல் தனுசுவில் சந்திரன் இருந்து, புதனால் பார்க்கப்பட  ஜோதிடக் கலை, மற்றும் சிற்பக்கலையில் நிபுணர் ஆக்கிவிடுகிறது. 
    
         (   ஜோதிஷ, ஷில்பக் க்ரியாதி நிபுணக  ).

8.       மேலும், கல்யாணவர்மர்” - கூறுவதாவது-  சந்திரன், சுக்கிரன் மற்றும் சனி ஆகிய மூவரின்,  பலம் மிக்க கூட்டு, மிகப் பிரசித்தி பெற்ற ஜோதிடர் ஆக்குகிறது என ஸ்லோகம் 25 அத்தியாயம் 16 ல் குறிப்பிடுகிறார்.

9.       மற்றுமொரு இணைவாக அவர் கூறுவது - சந்திரனிலிருந்து 10 ஆம் இடத்தில், சூரியன், செவ்வாய் இணைவைக் குறிப்பிடுகிறார். மேலும், சந்திரனில் இருந்து 10 ல் அசுபர் இருந்து சுபரால்  பார்க்கப்பட  ஒருவர்  மருத்துவராகவோ, மதபோதகராகவோ, ஜோதிடராகவோ  ஆகலாம் என்று குறிப்பிடுகிறார்.   அதேபோல், செவ்வாய், குரு இணைவு ஒருவரை வேத அங்கங்களில் நிபுணர் ஆக்கிவிடும் -- ன்றும் செவ்வாய், சுக்கிரன் இணைவு  ஜாதகரை கணிதம் மற்றும் ஜோதிடத்தில் நிபுணர் ஆக்கிவிடுகிறது என மேலும் குறிப்பிடுகிறார்.

10.    சிம்ம நவாம்சத்தில்  சந்திரன் இருக்க, புதன் பார்க்க, செவ்வாய், மிதுன நவாம்சம் அல்லது கன்னி நவாம்சத்தில் இருக்க, புதனால் பார்க்கப்பட அல்லது குரு மிதுனம் அல்லது கன்னியில் இருந்து புதனால் பார்க்கப்பட, திறமையான ஜோதிடர் ஆகிறார்.

11.    ஜாதக சந்திரிகா” - எனும் நூலில் -- “ஜயதேவா, -- பல முனிவர்கள் குறிப்பிட்டது போல் மிதுன சூரியன்   அல்லது  கடக சந்திரன் உள்ள ஜாதகர் திறமைமிக்க ஜோதிடர் ஆவார் என்கிறார்.

12.    மனசாகரி  -- எனும் நூலில் --  (). செவ்வாய், சுக்கிரன் ().  2 ம்  அதிபதி  11 ல், () உச்ச சுக்கிரன் () மிதுனத்தில்  சூரியன்  ஆகிய  இணைவுகள்  ஒருவரை ஜோதிடர் ஆக்குகிறது.

13.    செவ்வாய், சுக்கிரன் இணைவு – திறமைமிக்க ஜோதிடர் என காசிநாத்”- குறிப்பிடுகிறார்.

14.    பலபத்ரா, தனது  ஹோரா  ரத்னா” - எனும் நூலில் --   () கடகத்தில் சந்திரன்  ()  கன்னியில் சந்திரன், புதனால்  பார்க்கப்படவும்  ()  தனுசுவில் இருக்கும்  சந்திரனை புதன் பார்க்கவும் ()  மிதுனத்தில் குரு இருக்க, புதன் பார்க்கவும் திறமைமிக்க ஜோதிடர் ஆகிறார்.

15.    மந்தரேஸ்வரர் தனது பலதீபிகை” - எனும் நூலில் --  சிம்ம சந்திரனை புதனை பார்க்கவும்.

16.    ராமானுஜாச்சார்யாதனது பாவார்த்த ரத்னாகரா” -- எனும் நூலில் --   கீழ்க்கண்ட ணைவுகளைக்  குறிப்பிடுகிறார்—  () 4 ல் புதன்.   ()   2 ல் சூரியன், புதன். () அவர்களே, கேந்திரம் அல்லது  கோணம்  அல்லது    11 ல் இருக்க கணிதத்தில் மற்றும் நிபுணத்துவம் உண்டாகிறது.  ()  சூரியன்  அல்லது புதன் மற்றும் ராகு 5 ல் இருக்க திறமை மிக்க ஜோதிடர் ஆவார்..

17.    வெங்கடேசா  தனது   சர்வார்த்த    சிந்தாமணி” -- எனும் நூலில் --  10 ம் அதிபதி புதனின் நவாம்சத்தில் இருக்க, வானியல் மற்றும் ஜோதிடம் மூலம் வருமானம் வரும் எனக் குறிப்பிடுகிறார்.

18.    காளிதாசர் --  தனது   உத்திரகாலமிர்தம் எனும் நூலில் --, குரு மற்றும் புதனையே ஜோதிடத்திற்கு  முதன்மையான  காரகர்களாக்  குறிப்பிடுகிறார். ஆயினும், சூரியனுக்கும் முக்கியத்துவம் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார். ஏனெனில், இந்திய ஜோதிடம், சூரிய  சித்தாந்தாத்தின்   அடிப்படையிலானது   மற்றும்   அவன் அறிவுக்கும் விஞ்ஞானத்துக்கும்  தந்தை, அவனே   ஆத்மாவும்,    என்பதேயாம்.  நமக்கு உள்ளுணர்வை ஏற்படுத்தக் கூடிய சூரியன், குரு மற்றும் கேது ஆகியோர் ஆவர். இவர்களுடன் சந்திரன் இணைய அதற்குத் தூண்டுதலாக   அமைந்து விடுகிறது.

19.    சுக்கிராச்சார்யா –   புதன் மற்றும் சுக்கிரனை ஜோதிடர்களுக்கான காரகர்களாக ஏற்றுக்கொள்கிறார். ஆனால், அவர் குருவை ற்றுக் கொள்ளவில்லை.

20.    பாஸ்கராச்சார்யா  தனது  பாவதீபிகா” -- எனும் நூலில்  --  லக்னத்தில்  குருவும், 2 ஆம் இடத்தில் உச்ச புதனும், 6 ஆம் இடத்தில் சனியும் இருக்க ஒருவர் கணிதத்திலும், வானியலிலும், ஜோதிடத்திலும் நிபுணராக இருப்பார்.

21.    கேரள   சாஸ்த்திரம்எனும் நூலில் --   லக்னத்தில்  புதன் இருக்க, ஒருவர் நுண்கலைகளிலும்,  கணிதத்திலும், வானியலிலும்  மற்றும்  ஜோதிடத்திலும்  நிபுணத்துவம் பெறுவார்.

22.    மகாதேவர்” – தனது, ஜாதக தத்துவா”  -- எனும் நூலில் --

() புதன் மற்றும் சுக்கிரன் இணைவு 2 அல்லது 3 ஆம் டத்தில் இருக்க மிகப்பெரிய  ஜோதிடர்.
() 2 ம் அதிபதி பலம் பெற்று கேந்திர, கோணம் அல்லது 11 ல் இருக்க.
() உச்ச குரு 2 ம் இடத்தில் வக்கிரம் பெறாமல் இருக்கவும்.
() குரு கேந்திர, கோணத்திலிருந்து சுபர் பார்வை பெற, வருமுன் உரைப்பவராக இருப்பார்.

23.    முகுந்த தெய்வஞ்ஞர் தனது பாவ மஞ்சரி” -- எனும் நூலில் --   ஜோதிடக்  கலைக்குக் காரகராக புதன், குருவைக்  குறிப்பிடுகிறார்.  அவர்  சூரியனை  நட்சத்திரக் கல்விக்கும், ஆகாய   திருஷ்டிக்கும்,   ஞானோதயத்திற்கும்   காரகராகக்  குறிப்பிடுகிறார். கேதுவை, பிரம்ம  ஞானத்திற்கும், ஆத்ம   ஞானத்திற்கும் காரகராகக் குறிப்பிடுகிறார்.   புதனும், குருவும் ஜோதிடரை உருவாக்கினாலும், சூரியனும், கேதுவும் இணைந்து, தனித்திறமை மிக்க ஜோதிடரை உருவாக்குவதாகக் குறிப்பிடுகிறார்.

24.    தற்கால  ஜோதிட  மேதையான  ஜே. என். பசின், லக்னம் அல்லது லக்னாதிபதி, 4 மற்றும் 12 ம் அதிபதிகளுடனோ  அல்லது அந்த இடத்துடனோ சம்பந்தம் பெற ஜாதகர் ஒரு புகழ் பெற்ற ஜோதிடராவார்.

25.    ஹெச். என். கத்வே --   பலனுரைக்க 2 ஆம் இடத்தைப் பார்க்கச் சொல்கிறார். மேலும்,   5 ஆம் இடம் மற்றும் 5 ம் அதிபதி ஆகியோரை, நூல் வெளியிடவும், 3 ம் அதிபதி, 3 ம் வீடு   ஆகியவை  மொழி பெயர்த்து   எழுதுதல், பிரதி எடுத்தல், சரி பார்த்தல், எழுத்தாளர், பத்திரிக்கைத் துறை,  அஞ்சல் வழிக்கல்வி  ஆகியவற்றிற்கு பொறுப்பாகும்  -- என  உரைக்கிறார். மேலும், 4 ம் அதிபதி அல்லது    5 ம் அதிபதி லக்னத்திலும்,  4 ம் அதிபதி  5 ல் அல்லது  2 ல் இருக்கவும், 5 ம் அதிபதி 9 ல் அல்லது 9  ம்  அதிபதி லக்னத்திலோ அல்லது 5 ல் இடம் பெற ஜோதிட நிபுணர் க்கிவிடுகிறது.

26.    மேலும், அவர் திறமைமிக்க ஜோதிடர் ஆவதற்குக் காரணமாக, கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகள் லக்னமாகி, அதிலிருந்து 1, 2, 3, 8 மற்றும் 9 ஆம் இடங்களில் சூரியன், புதன்  இணைந்திருப்பதைச்  சுட்டிக் காட்டுகிறார். சூரியன், செவ்வாய் அல்லது செவ்வாய், சனி இணைவு 10       ஆம் டத்தில் ஏற்படவும் மற்றும் புதன், ராகு சேர்க்கை       5 ஆம் இடத்திலும்  மற்றும்  சூரியன், செவ்வாய், குரு அல்லது சந்திரன், குரு சுக்கிரன் அல்லது சந்திரன், சுக்கிரன், சனி  அல்லது சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய  இணைவுகள், பொதுவாக  5 ல்  ஏற்படத் திறமை மிக்க ஜோதிடர் உருவாக்கப்படுகிறார் என்றும் குறிப்பிடுகிறார்.

27.    இனி   ஜோதிட  மேதை   பீ. வி. இராமன் அவர்கள், என்ன சொல்கிறார் ? -- என்றும் வரிசையாகப் பார்ப்போம்.

ராசி முக்கியத்துவம் –   விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு மாயா ஜாலங்களில் ஆர்வம் இருக்கும்.  தனுசு   லக்ன ஜாதகருக்கு, மந்திரம், தத்துவத்தும், மாயாஜாலம் மற்றும் விஞ்ஞானத்திலும் ஆர்வம் இருக்கும்.

28.    பூடகமான ராசியான விருச்சிக இராசி ஜாதகர்கள்   தத்துவவாதிகளாகவும், மந்திர ஜால நிபுணர்களாகவும், மறைபொருள் தனை உணர்பவர்களாகவும், ஜோதிடர்களாகவும்,  உருவாகிறார்கள். ஒன்றாம்  டமும், பத்தாமிடமும் விருச்சிக இராசியோடு தொடர்பு கொள்ளும் போது மட்டுமே இந்த நிலை  ஏற்படுகிறது.  மேலும்,  லக்னாதிபதி,          10 ம் அதிபதி அல்லது அவர்களின்  நவாம்சம்   விருச்சிகத்தோடு   தொடர்புற   மேலே  சொன்ன  நிலை ஏதுவாகிறது.  கும்ப  லக்ன ஜாதகர்,  லக்னம் பலம் பெறும் போதோ, அல்லது 10 ஆம் இடம் பலம் பெறும் போதோ ஜோதிடராகிறார்.

29.    மிதுனத்தில் சூரியன்,   கன்னியில்  சந்திரன்,  சிம்மத்தில் செவ்வாய் இருக்கச் சிறந்த வானியல் நிபுணர் அல்லது ஜோதிடர் ஆகிறார்.  துலாச் சுக்கிரன், கன்னி புதன் உள்ளுணர்வை அறியும்  சக்தியை  ஏற்படுத்துகிறது. லக்னம் அல்லது 10 ஆம் இடம் விருச்சிகமாகி, சூரியன், சந்திரன், குரு, சனி, புதன் ஆகிய கிரகங்கள் விருச்சிகத்தில் இருக்க ஜோதிடத்தில் ஆர்வம் ஏற்படும். ரகசிய ராசியான விருச்சிகத்தில், ஜோதிட காரகன் புதன் இருந்து, குரு பார்க்க, உள்ளுணர்வு மிக்கவராகவும், மிகச் சிறந்த ஜோதிடருமாகவும் உருவெடுக்கிறார்.

30.    பாவ முக்கியத்துவம் –

() கேந்திரத்தில் புதன்,  2 ம் அதிபதி பலமிக்கவராக – சிறந்த ஜோதிடர்.
() கேந்திரத்தில் புதன், 2 ல் சுக்கிரன்,3 ல் சந்திரன் அல்லது குரு இருக்க – மிகப் பெரிய ஜோதிடர்.
      () லக்னத்தில் புதன் – கற்றறிந்த வானியலாளர்.
 () 7 ல் புதன் – கற்றறிந்த ஜோதிடர், கணிதர், வானியலாளர்.
      (11 ல் புதன் --  சிறந்த ஜோதிடர்.
 () 4 ல் புதன் அல்லது 10 ல் புதன் அல்லது குருவும், சந்திரனும் இருக்க திறமைமிகு ஜோதிடர்.

       எனவே,  இந்தப் பகுதி மூலமாக, ஜோதிடருக்கான இணைவுகள், நாம் அறிந்திராத , பல  பண்டைய   ஜோதிடர்களின் பெயர்கள், அவர்தம் படைப்புகள் ஆகியவற்றை ல்லாம் அறிந்து  மகிழ்ந்தோம் ல்லவா ?    











 

சனியின் நகர்வும், பலன்களும்.

சனியின் நகர்வும், பலன்களும்.

      சனி  30 ஆண்டுகளுக்கு ஒருமுறை 12 இராசிகளையும் நிதானமாகக் கடக்கிறார். இதில் அவர் 3, 6, 11 ஆகிய இராசிகளில் தான் சுப பலன் தருகிறார். மற்ற 9 இராசிகளில் அசுப பலன்களே ஏற்படுகின்றது. 5, 9, 10 ஆகிய இராசிகளில் சாதாரண அசுப பலன் தருகிறது.

       4 இல் உள்ள சனி அர்த்தாஷ்டமச் சனி என்று அசுப பலனும், 7 இல் சனி  கண்டச் சனி என்று மேலும் சிறிது அசுப பலனும், 8 இல் உள்ள சனி அட்டமச் சனி என்று அதைவிட அதிக அசுப பலனும், இராசி மற்றும் இராசிக்கு இரு புறமும் ( 12 ஆம் இடம், 1 ஆம் மற்றும் 2 ஆம் இடம் ) ஆகியவற்றில் இருக்க ஏழரைச் சனி என்று கொடிய பலனும். ஜென்மத்தில் அதிகக் கொடிய பலனையும் தருகிறார்இந்த இரண்டரை வருடம் மட்டுமே மிக அதிக அசுப பலன் தருகிறார்.

       முதல் முறையாக வரும் சனியை மங்கு சனி என்றும், இரண்டாம் சுற்று பொங்கு சனி என்றும், மூன்றாம் சுற்று குங்கு சனி என்றும், 4 ஆம் சுற்று மரணச் சனி என்றும் அழைக்கிறோம்.

       மங்கு சனிஅரசால் கஷ்டம், படிப்பில் தடை, சோதனைகள், ஆரோக்கியக் குறைவு மற்றும் துயரமே மிஞ்சும்.

       பொங்கு சனிதிருமணம் மற்றும் மங்கள காரியங்கள், கடைசிப் பகுதியில், முற்பகுதியின் இழப்பைச் சரிக்கட்டும். பெற்றோருக்கு மாரகம் ஏற்படலாம்,

       குங்கு சனி ( குமுங்கு சனி ) – மன சஞ்சலம், கவலை, துயரம் மிகும். ஆயுர்தாயம் முடியுமென்றால், ஜாதகருக்கே மாரகம் ஏற்படலாம்.

       மரணச் சனிஎதற்கும் பயனில்லை. வயதுக்கு முற்றுப் புள்ளி வைக்க மரணமே வரும்,
       புலிப்பாணிச் சித்தர் சர இராசிக்கு அதிகக் கெடுதியும், அதைவிடக் குறைவாகவும், உபய இராசிக்கு மிகவும் குறைவாகவும் அசுப பலன் தருவதாகக் குறிப்பிடுகிறார்.  
 
மூர்த்தி நிர்ணயம்
 
       சனியின் கோசார பலன்களை நிர்ணயம் செய்ய பாரம்பரிய ஜோதிடர்கள், “மூர்த்தி நிர்ணயம்என்ற முறையைக் கடைப்பிடித்தனர். சனி ஒரு இராசியிலிருந்து பெயர்ச்சி ஆகும் போது, எந்த நட்சத்திரத்தில்இராசியில் இருப்பாரோ, அது ஒருவரின் ஜென்ம இராசிக்கு எத்தனையாவதாக வருகிறதோ, அந்தக் கணக்குப்படி  சனி சுவர்ணம், (தங்கம்), ரஜதம் (வெள்ளி), தாமிரம் (செம்பு) மற்றும் உலோகம் (இரும்பு) என்ற மூர்த்திகளாக மாறி பலன் தருகிறார். இதையே மூர்த்தி நிர்ணயம் என்கிறோம்.

       இந்த வரிசைப்படி ஒரு கிரகம் அதிக சுப பலன்சாதாரண சுப பலன், சுப பலன், அசுப பலன்  எனத் தரவல்லது. இதை எங்ஙனம் நிர்ணயம் செய்வது ?

1.   ஒரு கிரகத்தின் பெயர்ச்சியன்று சந்திரன் ஒருவரின் ஜென்ம இராசிக்கு 1, 6, 11 ஆவது இராசிகளில் இருந்தால் அவர் சுவர்ண மூர்த்தியாகிறார்.

2.   அதேபோல் 2, 5, 9 ஆம் இராசிகளில் இருக் ரஜத மூர்த்தி என்றும்,

3.   3, 7, 10 இல் இருக்க தாரிர மூர்த்தி என்றும்,

4.   4, 8, 12 இல் இருக்க உலோக மூர்த்தி என்றும் பெயர்பெற்று மேலே சொன்னபடி பலன் அளிக்கிறார்.

சுபர்களான வளர்பிறைச் சந்திரன், குரு, செக்கிரன் மற்றும் சுபத்துவம் பெற்ற புதன் ஆகியோர் தரும் பலத்தின் அளவும், அசுபக்கிரகங்களான சனி, செவ்வாய், சூரியன், தேய்பிறைச் சந்திரன் அசுபத்துவ புதன், இராகு, கேது  இவர்களின் அளவும் கொடுக்கப் பட்டுள்ளது. இதன் படி அனைத்து இராசிகளுக்கும் மூர்த்தி பேதப்படி பலன்கள் மாறுபடும்.

மூர்த்தி
சுபருக்கான அளவு
சுபருக்கான அளவு
சுவர்ண
முழு சுபம்
கால் சுபம்
ரஜத
முக்கால் சுபம்
முழு சுபம்
தாமிர
அரை சுபம்
முக்கால் சுபம்
உலோக
கால் சுபம்
அரை சுபம்

இந்த முறைச் சிறப்பு விதியாகவும், சனி பொதுவாக கொசாரத்தில் சுப பலன் தரும் 3, 6, 11 ஆம் இடங்களில் தரும் பலனைப் பொதுவிதி எனக் கருதி இரண்டையும் கூட்டி வரும் நல்ல, தீய பலன்களைக் கணக்கிட்டு பலன் காண்பதே சரியான முறையாகும்.

சனிக்குச் சிறந்த பரிகாரத் தலம்.
             சாதாரண மனிதன் கொள்ளும் ஆசையின் மூலமாக  நமது நல்ல தசா, புத்திக் காலத்தில் பல பெரிய தவறுகளைச் செய்ய வைத்துப் பின்னர்  ஏழரைச்சனிக் காலத்தில் சேர்த்து வைத்து அந்தத் தவறுகளுக்கு உரிய தண்டனையைத் தரும் விதமாகச் செயல்படுகிறார். எனவே, சனி தரும் துன்பங்களெல்லாம் நம் போன்ற  சராசரி மனிதர்களை மட்டுமே பாதிக்கும்.
                   வாதநோயால் வருந்திய சனியின் நிலை அறிந்து, அவரின் அன்னை சாயாதேவி  ஶ்ரீ காலபைரவரை தீவிரமாக வழிபாடக் கூறினார். சனியும் தவமிருந்து வழிபட்டார். சனியின் பக்தியை மெச்சிய பைரவர் மிருகண்ட முனிவரின் சாபத்தைப் போக்கினார். தனால் அகமகிழ்ந்த சனி,  ஸ்ரீகாலபைரவரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு மீண்டும் சனி நவக்கிரகப் பதவிபெற்றார். மனிதர்கள் ஒவ்வொருவருடைய தொழில் / வேலை மற்றும் ஆயுளை நிர்ணயிக்கும் பொறுப்பை ஸ்ரீகால பைரவப் பெருமான் சனியிடம் ஒப்படைத்தார்;
          எனவே, எவர் ஒருவர் தொடர்ந்து பைரவ வழிபாடு செய்கிறரோ, அவரை ஒருபோதும் துன்புறுத்தமாட்டேன் என்று பைரவரிடம் சனீஸ்வர் வாக்களித்தார்.
                       உயிர்களைத் தண்டிக்க வேண்டியிருப்பதை விரும்பாத சனீஸ்வரர், வசிஷ்ட மகரிஷியை சந்தித்து அவரின் ஆலோசனைப்படி,  திருக்கொள்ளிக்காடு வந்தடைந்தார்; அங்கே இருக்கும் அக்னீஸ்வரரை நினைத்து கடும் தவம் புரிந்தார்சிவ வழிபாடு செய்தமையால் பைரவப் பெருமானே நேரடியாக வந்து அவரை பொங்கு சனியாக மாற்றி அருள் புரிந்தார்;
           இங்கே  சனியானவர், சுப பலனை மட்டுமே தரும் பொங்கு சனீஸ்வரராக அருள் பாலித்து வருகிறார்.  சனிக்கிழமை சனி ஓரையில் அல்லது ராகு காலத்தில் வழிபடுபவர்களுக்கு பொங்கு சனீஸ்வரரின் அருள் முழுமையாகக் கிடைக்கும்.
                  சனிக்கிழமைகளில் இவருக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. இரும்புச் சட்டியில் நல்லெண்ணெய் நிரப்பி அதை தானம் செய்யலாம். கருப்பு ஆடையை பொங்கு சனீஸ்வரருக்கு அணிவிக்கலாம். நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, எள் சாதம் தானம் செய்யலாம். கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்து பரிகாரம் பெறலாம்.
           சனிக்கிழமையன்று திருக்கொள்ளிக்காடு பொங்குசனீஸ்வரை தரிசித்து வந்தால், சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம், திருக்கொள்ளிக்காடு சென்று  பொங்கு சனீஸ்வரை வழிபட்டு விட்டு, நேராக அவரவர் வீட்டிற்கு மட்டுமே செல்ல வேண்டும். இந்த ஸ்தலத்தைத் தவிர திருநள்ளாறு, குச்சனூர், திரப்பரங்குன்றம் ஆகிய தலங்கள் சென்று வழிபட்டும் பலன் அடையலாம்.





    


Tuesday, October 7, 2014

“நோபல் பரிசு” பெற்ற அமர்தியா சென்.


நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென்.

      சேத்ர சிம்மாசனம் என்பது மிகப் பெரிய இராஜ யோகம் ஆகும். இந்த யோகம் நோபல் பரிசு பெற்ற புகழ்மிக்க தத்துவவாதி அமர்தியா சென் அவர்களின் ஜாதகத்தில் உள்ளது. இந்த யோகமானது 10 ஆம் அதிபதி கேந்திரத்தில் இடம் பெறும் போது ஏற்படுகிறது. திரு. சென் அவர்களின் ஜாதகத்தில் 10 ஆம் அதிபதி தசம கேந்திரத்தில் தனது ஆட்சி வீட்டில் உள்ளார். தசம கேந்திரமானது சிறப்பு மிக்க கேந்திரமாகும். மேலும் 10 ஆம் அதிபதி சனி தனது ஆட்சி வீட்டில் இருப்பது பஞ்ச மகா புருஷ யோகமான சச யோகத்தை அளிக்கிறது. இதேபோல் செவ்வாயும் தனது ஆட்சி வீடான சப்தம கேந்திரத்தில் இருப்பது ருசக மகா யோகத்தை அளிக்கிறது. இந்த யோகங்கள் இவரின் வாழ்க்கையில் நல்ல நிலையையும் ஸ்திரமான சொத்துக்களையும் அளிக்கிறது.
    
             பிறந்த தேதி -- 03-11-1933. பிறந்த நேரம் -- 15 - 30, பிறந்த ஊர் -- சாந்தி நிகேதன் , ( பிர்பூம் மாவட்டம்)
    


லக
சந்;


சூரி
லக்;
கேது;;
சுக்;
குரு
இராகு
அமர்தியா
சென்
      ராசி
;
சந்
செவ்


நவாம்சம்

சனி
கேது


சுக்
செவ்
புதன்
சூரி
குரு
;;

புதன்
இராகு
சனி

    இவரின் ஜாதகத்தில் உச்சம் பெற்ற 4 ஆம் அதிபதி சந்திரன் மிகவும் பலம் மிக்கவராக உள்ளார். சந்திரனை பாக்கியாதிபதி குருவும் பார்ப்பதால் இவர் தனித்திறன்கள் மிக்கவராகவும். சொத்துக்கள்> புகழ்> மதிப்பு> மரியாதை மற்றும் முனைப்பான செயல்பாட்டையும் உடையவராகவும் ஆக்கியது.   

    சந்திரனும் புதனும் பரஸ்பர பார்வையால் பலம் மிக்கவர்கள் ஆனதால் திறமை> அறிவு கூர்மை> நினைவாற்றால்> ஆகியவற்றையும் பெற்றார். புதன் -- செவ்வாய் இணைவு ஜாதகரை அதிபுத்திசாலி ஆக்கியது. புதன்- செவ்வாய்க்கு இயற்கை அசுபரானாலும்> அவர் புதனுக்கு சமமானவர் ஆதலால் இந்த யோகம் இவருக்கு நன்மையே செய்கிறது. சந்திரன் - செவ்வாயின் பரஸ்பர பார்வை> ஒருவரைத் துணிச்சல் மிக்கவராகவும்> சுறுசுறுப்பு மிக்கவராகவும் ஆக்கிவிடுகிறது. 8 ஆம் இடத்திலுள்ள புதன் ஒருவரை எட்டாத உயரத்துக்குக் கொண்டு சென்றுவிடுவதோடு புகழையும்> நீண்ட ஆயுளையும் தந்துவிடுகிறது. மேலும்> ஜாதகரை மதப் பிரியவராகவும்> பெரிய தொழிலதிபராகவும் ஆக்கிவிடுகிறது.
    
       இதைத் தவிர அவருக்கு> குரு மற்றும் சனி தொடர்பால் ஏற்படும் சக்தி மிக்க யோகமான கௌரி யோகமும் உள்ளது. இதன் காரணமாக உள்ளுணர்வு சக்தி மற்றும் தத்துவ சிந்தனைகள் பெருகின. நவாம்சத்தில் கர்மகாரகன் சனி> புதனின் நவாம்சம் பெற்றுள்ளது. இவரையொரு பொருளாதார நிபுணராகவும்> எழுத்தாளராகவும் உயர உதவியது. இது தவிரவும் இலக்னமும் வர்கோத்தமம் ஆகியுள்ளது.
    .
        இவர் மேஷ இராசியின் துவக்க பாகையிலேயே பிறந்திருப்பது> மீனம் மற்றும் மேஷ இராசியின் சந்தி ஆவதால் இரு இராசிகளின் குண இயல்புகளும் உடையவராய் இருப்பார். மேஷ இராசியின் குணயியல்பான செய்தொழில் மீதான முழு ஈடுபாட்டையும் தந்ததோடு> தைரியம் மிக்கவராகவும்> மனதளவில் பலம் மிக்கராகவும்> தலைமைப் பொறுப்புக்குப் பொருத்தமானவராகவும்> பிரபஞ்ச சகோதரத்துவத்துக்கு உழைப்பவராகவும் ஆக்கியது. இந்த குணங்களின் வெளிப்பாட்டினாலேயே இவரின் மனிதாபிமானப் பணிகளுக்காக நோபல் பரிசையும் வென்றார். சமத்துவ சமுதாயத்தைக் காணவும்> பெண்ணுரிமையை நிலைநாட்டவும் மற்றும் ஏழ்மையை அகற்றவும் என இவரின் முற்போக்கு எண்ணங்களுக்குக் கிடைத்த பெரும் மரியாதையே நோபல் பரிசாகும்.
    
      இவரது சேவைகளுக்கான அங்கீகாரமாக நோபல் பரிசு மிகத் தாமதமாகவே கிடைத்தது. அதற்குக் காரணம் இராசியில் சூரியன் நீசம் ஆனதேயாம். ஆனால் பாவச் சக்கரத்தில் சூரியன் 8 ஆம் இடமாகிய விருச்சிகத்தில்> புதனுடன் சந்திரனின் பார்வை பெற்றுள்ளார். மேலும் > புதஆதித்ய யோகம் இவரை உயர்த்தியது. நவாம்சத்தில் சூரியன் குருவின் மீன நவாம்சத்தில் இருப்பது காலந்தாழ்ந்து கிடைத்தாலும்> வயோதிகத்திலேனும் கிடைத்தது.
    
   



லக்

சந்;

 இராகு


சனி
பாவகம்;;
கேது

செவ்
சுக்
சூரி
புத
குரு

        
     பாவகத்தில் குரு ஏழிலும்> சூரியன் எட்டிலும்> செவ்வாய் ஒன்பதிலுமாக உள்ளனர். இராசியில் குரு 6 ஆம் பாவத்தில் இருந்தாலும்> பாவகத்தில் 7 ஆம் வீட்டில் உள்ளார். அவருக்கு இந்தப் பரிசு கிடைத்தபோது யோககாரரான சனியின் திசையும் நடந்தது. சனி தரும் இரு யோகங்களான சேத்திர சிம்மாசன யோகம் மற்றும் சச யோகம் ஆகியவை இருந்ததால் இக்காலத்தில் இவருக்குப் பரிசு கிடைத்தது எனலாம். சந்திரனுக்கு 9> 10 க்கு அதிபதியான சனி யோககாரகனாதலால் சனி திசையில் பொருளாதாரத் தத்துவத்திற்கான மதிப்பு மிக்க நோபல் பரிசை வென்றார். சனி. குரு இருவரும் சந்திரனின் நட்சத்திரத்தில் உள்ளனர். 4 ஆம் அதிபதி சந்திரன் 7 ஆம் இடத்தில் உச்சமாகி 9 ஆம் இடத்தின் அதிபதி குருவால் பார்க்கப் படுவது இராஜ யோகத்தைத் தந்தது.