Wednesday, September 3, 2014

நாட்டைக் காக்கும் காவல்துறை.

நாட்டைக் காக்கும் காவல்துறை.

       நாட்டையும், வீட்டையும் காக்கும் பெருமைமிகு காவல்துறைப் பணி மற்ற பணிகளைப் போன்றதல்ல. அது நாட்டைக்காக்கும் ஒரு பொறுப்பு மிக்க பணியாகும். நாட்டையும், நாட்டு மக்களையும் குற்றச் செயல்கள் புரிபவரிடம் இருந்து காத்து, சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் தலையாய கடைமையை உடைத்தாய் இருக்கிறது காவலர் பணி. நாட்டின்பால் ஏற்பட வேண்டிய ஆழமான, தியாக உணர்வும், பொறுப்புணர்வும் கொண்ட அதிகாரிகளைக் கொண்டது நமது இந்திய காவல்துறை. மக்கள், சட்டத்தை உடைத்துக் குற்றங்கள் செய்வதில் இருந்து அவர்களைத் தடுக்கும் முக்கியத் துறையாகும்.

       இக் காரகங்கள் அனைத்துமே, செவ்வாய் மற்றும் குருவின் முக்கிய காரகங்கள் ஆகும். சட்டம், தியாகம், பொறுப்புணர்ச்சி, காத்தல் ஆகியவை குருவின் காரகங்களாகும். செவ்வாய் தைரியம், வீரம் மற்றும் சீருடைப் பணி ஆகியவற்றைக் குறிக்கிறது. மேலும், அதுவே குற்றச் செயல்களுக்கும் காரணமாகிறது. எனவே இக் காரகங்கள் பலம் பெறும் போது, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவைக்கிறது. கொலைகார்ர்கள், கொள்ளையர்கள், கூலிப்படைகள், ஆள்கடத்துபவர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் ஆகியவர்களை உருவாக்குவது செவ்வாய் மற்றும் சனியின் தாக்கமே ஆகும்.

       இத்தகைய குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, குற்றங்களைத் தடுப்பதே காவல்துறை அதிகாரிகளின் தலையாய கடமையாகிறது.

       காவல்துறைப் பணிகளில் இருப்பவர்கள் ஜாதகங்களில், செவ்வாய், குரு ஆகிய கிரகங்களின் தாக்கம்  முக்கியமானதாக இருப்பதைக் காணலாம். ஆயினும், சனியின் தாக்கத்தையும் நாம் ஒதுக்கிவிட முடியாது. செவ்வாய் குரு மற்றும் சனியின் ஒன்றிணைந்த தாக்கங்கள் மற்றும் அவற்றின் கர்ம ஸ்தானத்துடனான தொடர்பு ஜாதகரை காவல்துறைப் பணிக்குத் தள்ளிவிடுகிறது எனலாம்.

       இலக்னத்தின் பங்கு மிக முக்கியமானதாகும். அதுவே ஜாதகரின் தனித்திறன், உடலமைப்பு மற்றும் அவர் பொறுப்பு மிக்க பதவிக்குப் பொருத்தமானவரா ? – என்பதை உணர்த்துவதே இலக்னமாகும்.

              அடுத்து, 6 ஆம் வீடு சட்டம் மற்றும் வழக்குகளைக் குறிகாட்டுகிறது. எனவே, 6 ஆம் வீடு இதற்குக் கூடுதலாக முக்கியப் பங்கு வகிக்கிறது.

       இரண்டு மற்றும் 11 ஆம் வீடுகள் செல்வநிலை மற்றும் வருமானத்தைக் குறிகாட்டுகிறது. 10 ஆம் வீடு, 10 ஆம் அதிபதி, 10 இல் உள்ள கிரகம் மற்றும் நவாம்சத்தில் 10 ஆம் வீட்டில் உள்ள கிரகம், 10 ஆம் வீட்டைப் பார்க்கும் கிரகங்கள் ஆகிய அனைத்தின் தாக்கங்களும் அறியப்பட வேண்டும்.

       சிம்மம் இலக்னமாகி, செவ்வாய், குரு இணைந்து இருக்க, மேற்சொன்ன மற்ற வீடுகளும் அனுகூலமாக அமைய ஜாதகர் புகழ் பெற்ற, வெற்றிகரமான, பிரபலமான, கடமை உணர்வுள்ள, கம்பீரமான மற்றும் கடினமான காவல்துறை அதிகாரியாகத் திகழ்வார்.

       இதில், சனியும் சமமான முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில், சனி பொதுஜனங்களைக் குறிக்கும், நாட்டு மக்களையும் குறிக்கும். அரசுப்பணியைக் குறிப்பதுவும் அதுவே ஆகும். நாட்டின் அமைதி காக்கும் அரசின் முக்கிய அங்கமே காவல்துறை ஆகும்.

       இவ்வாறாக, 10 ஆம் இடத்தோடு 2 மற்றும் 11 ஆம் வீடுகளும், செவ்வாய், குரு மற்றும் சனியின் தொடர்புற வேண்டும்.

       இராசி மற்றும் நவாம்சத்தில் நெருப்பு இராசிகளின் தொடர்பும் அவசியம் ஆகிறது. 2, 10 மற்றும் 11 ஆம் அதிபதிகளின், இராசி அல்லது நவாம்சத்தில் மேஷ, சிம்ம, தனுசு ஆகிய இராசிகளில் இடம் பெறுவது, காவல்துறை அதிகாரிகளின் ஜாதகத்தில் பலமாகக் குறிகாட்டுப்படுகிறது, விருச்சிக இராசியான நெருப்பு இராசி இல்லை எனினும், அதன் அதிபதி செவ்வாய், வெப்ப கிரகம் ஆதலால் அதனையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

       உண்மையில் அரசைக் குறிக்கும் சூரியனும் காவல்துறைப் பணிக்கு உதவும் காரகர் ஆகிறார். காவல்துறை, அரசின் முழு அதிகாரத்திற்கு உரியது மற்றும் பலம் மிக்க  சக்தியையும் உடைத்ததாய் இருக்கிறது.

       ஆத்ம காரகன், ஆத்ம காரகனின் சாரம் ஆகியவையும் முக்கிய பொறுப்பாகின்றன.

       மேலே சொல்லப்பட்ட காரணிகளைத் தொகுத்துக் காணலாம்
1.   இலக்னம்தனித்திறன், உயர்வுநிலை அல்லது ஏற்றநிலை, உடல் தகுதி மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றைக் குறிக்கும்.

2.   
() 10 ஆம் வீடுதொழில் வீடு.
(). 2 ஆம் வீடுவருமான வழி.
(). 11 ஆம் வீடுவாழ்வாதாரம்.
(). 9 ஆம் பாவம்தொழிலுக்கு உதவும் அதிர்ஷ்டம்.(பாக்கியம்) தொழில்      மற்றும் சொத்து வருமானங்கள்.

   3.  6 ஆம் பாவம்வழக்கு, குற்றம், சண்டை. விபத்துக்கள், திருட்டுக் குற்றங்கள், கடன்கள், பாக்கிகள், சேவைகள், பதவி உயர்வுகள், பதவி இறக்கங்கள், பதவி       நீடித்தல், பதவி மாற்றங்கள் மற்றும் நீக்கங்கள்.

   4.  குறிகாட்டிகள்செவ்வாய், குரு, சனி ஆகியோர்.

   5.  கை கொடுப்பவர்சூரியன்.

   6. இராசி மற்றும் நவாம்சத்தில் மேஷ, சிம்ம, விருச்சிக மற்றும் தனுசு    இராசிகள்.

   7. நட்சத்திரங்கள்கிருத்திகை, மிருக சிரீடம், புனர்பூசம், பூசம், உத்திரம்,    சித்திரை, விசாகம், அனுஷம், உத்திராடம், அவிட்டம் மற்றும் பூரட்டாதி.

   8. அரசுவேலை  -- சூரியன்சந்திரன் தாக்கம், 1 மற்றும் 6 அல்லது 10 ஆம் வீடு ஒன்று அல்லது வேறு வழிகளில் தொடர்பு கொள்ளுதல்.

  9.  ஆத்ம காரகன் – (). ஆத்மகாரகன் இடம் பெறும் இராசி, நவாம்சம் மற்றும்     நட்சத்திரங்கள்.   (). ஆத்ம காரகனின்  சுய வீடுகள். () . ஆத்ம காரகன்   இடம் பெற்ற வீடு.

      மேற்கண்ட முறையில் ஆராய இரு புகழ் பெற்ற காவல்துறை அதிகாரிகளின் ஜாதகத்தைப் பார்ப்போம்.

      கே. பி. எஸ். கில். .பி.எஸ்நாம் நன்கு அறிந்த காவல்துறை உயர் அதிகாரியான இவர் 29 டிசம்பர் 1934 அன்று பாக்கிஸ்தானிலுள்ள லாகூரில் பகல் 2 மணிக்குப் பிறந்தார். மேஷ இலக்னம். இலக்னாதிபதி செவ்வாய் 6 இல் இருந்து இலக்னத்தைப் பார்க்கிறார். 6 ஆம் வீடு சேவையைக் குறிக்கிறது. குற்றங்களைத் தடுப்பது காவலர் பணிதானே ? இலக்னத்துடனான அல்லது 10 ஆம் இடத்துடனான  மற்றும் அதன் அதிபதிகளுடனான ஒளிக்கிரகங்களின் தொடர்பு காவல் துறை அதிகாரிகளின் ஜாதகத்தில் காணலாம். அதுவே அரசுப் பணியைத்தருவதாகும். இங்கு இலக்ன அதிபதி 6 இல் சந்திரனுடன் இணைந்து, அவரின் ஹஸ்த நட்சத்திரத்திலேயே உள்ளார். இது அவருக்குக் காவல் துறையில் உயர் அதிகாரப் பதவியைத் தந்தது.


லக்///



இராகு

குரு
செவ்
சந்
சனி


இராசி
கேது



நவாம்சம்
லக்///
புத
இராகு


சூரி
சுக்
சூரி
புத

குரு
செவ்
சந்

   சுக்
சனி
கேது

சந்திர திசா இருப்பு – 4 9 மா 4 நாள்.

       மூன்று மற்றும் ஆறாம் அதிபதி புதன் ஒன்பதில் உள்ளார். காவல்துறைக்கு செவ்வாய், சனி, குரு மற்றும் சூரியன் ஆகியோர் காவல் துறைக்குக் காரகர் ஆவர்.   6 ஆம் அதிபதி புதன் கடக நவாம்சம் பெற்றுள்ளது அவரின் அரசுவேலைக்குக் காரணமானது. 6 ஆம் அதிபதி புதன், சூரியன் மற்றும் சுக்கிரனுடன் இணைந்து 9 இல் உள்ளார். சுக்கிரன் ஆட்சிப் பணியைக் குறிக்கும் கிரகமாகும்.

       ஆத்ம காரகன் சுக்கிரன் 2 மற்றும் 7 ஆம் வீட்டுக்கு அதிபதியாகி தனுசு சுக்கிரன், செவ்வாயின் நவாம்சத்திலும், இலக்னாதிபதி செவ்வாய் சுக்கிரனின் நவாம்சத்திலுமாக பரிவர்த்தனை பெற்று இருப்பது பலம் மிக்க காவல்துறை உயர் அதிகாரியின் நிலையை உணர்த்துகிறது.

       இவரின் ஜாதகத்தில் சூரியன் மற்றும் சனி பலம் மிக்க கிரகங்காளாகும்.      2 ஆம் வீட்டு அதிபதி சுக்கிரன், குருவின் இராசியான 9 ஆம் வீட்டில் உள்ளார். அவர் செவ்வாயின் நவாம்சம் பெற்றுள்ளார்.

       10 ஆம் அதிபதி சனி 11 இல் தனது சுய வீட்டில் உள்ளார். செவ்வாயின் அவிட்ட நட்சத்திர சாரம் பெற்று, நவாம்சத்தில் தனது உச்ச வீட்டில் உள்ளார். அவரின் பார்வை 5 மற்றும் 8 ஆம் வீட்டின் மீது விழுகிறது. இலக்னாதிபதி செவ்வாய், 10 ஆம் அதிபதி சனியின் பார்வையைப் பெறுகிறது. இதன் காரணமாகவும் இலக்னம் பலம் பெறுவதால் செவ்வாய், சனியின் தாக்கம் உயர் காவல் துறைப் பணியை உறுதி செய்கிறது.

       சூரியன், புதன் மற்றும் சுக்கிரனின் நெருப்பு இராசியுடனான தொடர்பும் இதை உறுதி செய்கிறது எனலாம்.

       இவை தவிர சூரியன் 9 இல் இருப்பது ஒருவருக்கு தைரியத்தையும், புகழையும், தலைமைக்கான ஆளுமையையும், மிக உயர்ந்த பதவிகளையும் தருகிறது. பொதுவாக சூரியன் நெருப்பு இராசிகளில் இருப்பது ஜாதகரை ஒரு பொறியாளராகவோ அல்லது சீருடைப் பணிகளில் உயர் பதவியையோ (இராணுவம், காவல்துறை) தருகிறது.

       ஆறில் சந்திரன் இருப்பது சமூகத்தாலும், அரசாலும் பாராட்டுக்களைப் பெறுவர். அதிக வலிமை உள்ள எதிரியையும் வெல்வர். அரசுப்பணியில் வெற்றி பெற்றுத் திகழ்வர். மேலும், செவ்வாய் இணைவு காவல்துறை அதிகாரி என்பதை உறுதி செய்கிறது,

       ஏழில் இருக்கும் குரு விரைவாக உயர் பதவிகள் பெறும் நிலையைக் காட்டுகிறது. இராகு 10 இல் இருப்பதுவும் சீருடைப் பணிக்குக் குறிகாட்டி ஆகும்,

கிரண் பேடி ஐ.பி. எஸ்

       இந்திய நாட்டின் முதல் பெண் போலீஸ் உயர் அதிகாரி ஆவார். இவர் தனது தைரியம் மிக்க, கடமை தவறாத குணங்களால் புகழ் பெற்றவர். இவர் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ்ஸில், 9 ஜூன் 1949 ஆம் வருடம் மதியம் 2 – 10 மணிக்குப் பிறந்தார்.

       இவரின் ஜாதகத்தில் 10 ஆம் வீட்டில் சுக்கிரன், தொழிலுக்கான முதல் குறிகாட்டி ஆகிறார். இரண்டாவது குறிகாட்டி பத்தாம் அதிபதி புதன் ஆவார்.  அவர் சுய நவாம்சத்தில் உள்ளார். இது இந்த ஜாதகியின் தொழிலானது கலை, நடிப்பு, நடனம், இசை, எழுத்து ஆகியவை தொடர்புடைய தொழிலாக இருக்கலாம் என்பதைக் குறிகாட்டுகிறது.

       இப்போது நாம் ஆத்ம காரக கிரகமான சூரியனின் நிலையைக் காணலாம். சூரியன் 9 ஆம் வீட்டில், செவ்வாயின் மிருக சிரீட நட்சத்திரத்தில் உள்ளார். இந்த ஜாதகத்தில் சூரியனும், செவ்வாயும் மிக்க பலம் உள்ள கிரகங்களாக உள்ளனர். சூரியன் தனது சுய நவாம்சத்தில் உள்ளார். மேலும், சுக்கிரன், புதன் பரிவர்த்தனை ஆகியவை வெற்றிகரமான ஆட்சிப்பணிக்கு உரிய ஜாதகமாகக் குறிகாட்டுகிறது. செவ்வாய் மற்றும் சூரியன் 10 ஆம் அதிபதி புதனுடன் 9 ஆம் வீட்டில் இருப்பது வெற்றிகரமான காவல்துறைப் பணியைக் குறிகாட்டுகிறது.


இராகு
செவ்
புத()
சூரி
சுக்

குரு()
இராகு

லக்///
புத()
சனி



இராசி

செவ்


நவாம்சம்


குரு()
சனி

சூரி
சந்

சந்
கேது
லக்///
சுக்
 
கேது


சனி தசா இருப்பு – 17 1 மா 27 நாள்.

       அடுத்து நமது ஆய்வின் மூன்றாவது படியாக, இலக்னத்துக்கு 2 ஆம் அதிபதி சுக்கிரன் 10 ஆம் வீட்டில் இருக்கிறான். குருவின் தனுசு நவாம்சத்தில் இருக்கும் சுக்கிரன், இராகுவின் சாரத்தில் உள்ளார். இராகு வர்க்கோத்தமம் பெற்று, செவ்வாயின் மேஷ இராசியில் இடம் பெற்றுள்ளார். எனவே சுக்கிரன்புதன், குரு, இராகு மற்றும் செவ்வாய் ஆகியோரின் தாக்கம் பெற்றுள்ளார். இந்த நிலை தொழிலைப் பொறுத்தவரை பொறியாளர் அல்லது காவல்துறை அதிகார பதவிகளைக் குறிகாட்டுகிறது.

       அதன் பிறகு 11 ஆம் இடம் ஆராயப்பட வேண்டும். 11 ஆம் அதிபதி சந்திரன் சனியின் அனுஷ நட்சத்திரத்தில், செவ்வாய் ஆட்சி செய்யும், விருச்சிக இராசியில் இடம் பெற்றுள்ளார். சந்திரன், சூரியனின், சிம்ம நவாம்சம் பெறுகிறார். இது காவல் துறையில் உயரிய அதிகார பதவியைக் குறிகாட்டுகிறது.

       முடிவாக, 9 ஆம் வீட்டை ஆராய வேண்டும். 9 ஆம் வீட்டில் புதன், செவ்வாய் மற்றும் சூரியன் ஆகியோர் இருக்கின்றனர். இவை, ஆட்சிப்பணி மற்றும் காவல் துறை உயர்பணியைக் குறிகாட்டுகிறது.

       சூரியனும், செவ்வாயும் சார பரிவர்த்தனை பெற்றுள்ளனர். சூரியன் மிருகசீரிடத்திலும், செவ்வாய் கார்த்திகை நட்சத்திரத்திலும் உள்ளனர். புதன் சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் உள்ளார். சந்திரன் விருச்சிகத்தில் உள்ளார். இதுவும் ஆட்சிப்பணி அல்லது காவல்துறை உயர் பணியைக் குறிகாட்டுகிறது. சூரியன் சுய நவாம்சமும், செவ்வாய் கும்ப நவாம்சமும் மற்றும் புதன் சுய நவாம்சமும் பெற்றுள்ளனர். 9 ஆம் வீட்டு அதிபதி சுக்கிரன் 10 ஆம் வீட்டில் இடம் பெற்றுள்ளார். அவர் மீன நவாம்சம் பெற்று, இராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் உள்ளார். சனி 6 ஆம் வீட்டான தனது சுயவீட்டைப் பார்க்கிறார்.

       இவ்வாறாக, சூரியன், செவ்வாய், குரு, புதன் மற்றும் சுக்கிரன் ஆகியோர் இந்த ஜாதகியின் தொழிலுக்கு ஆழ்ந்த தொடர்பு ஏற்படுத்துகின்றன. ஆட்சிப் பணிக்கு சுக்கிரன், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோரே குறிகாட்டிகள் என முன்னரே குறிப்பிட்டிருந்தோம். இந்த ஜாதகத்தில் சுக்கிரன் 10 இல், சூரியன் 9 இல் உள்ளனர். சந்திரன், சூரியனையும், 10 ஆம் அதிபதி புதனையும் பார்வை புரிகிறார். 9 ஆம் அதிபதியான சுக்கிரன் மற்றும் 10 ஆம் அதிபதியான புதனின் பரிவர்த்தனை மகாயோகம் அல்லது மகாராஜயோகத்தை அளிக்கிறது. இந்த நிலைகள் ஆட்சிப்பணிக்கு ஒரு அசைக்க முடியாத மற்றும் பலம் மிக்க கிரக நிலைகள் ஆகிறது.

       ஒன்றுக்குள் ஒன்றாக உறவான சூரியன், செவ்வாய் மற்றும் குருவின் தாக்கங்கள் காவல்துறை உயர் பணிக்கான முக்கிய இணைவாக உள்ளன. இந்த நிலைகள் காரணமாக இவர் ஒரு கடமை, கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு மிக்க அதிகாரியாகப் பணியாற்றி உலகப் புகழ் பெற்றார்.

       ஜோதிடகலாநிதி.எஸ். விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி (அப்ளைடு அஸ்ட்ராலஜி)






Tuesday, September 2, 2014

எழுத்தாளருக்கான யோகநிலை

எழுத்தாளருக்கான யோகநிலை

       எழுதுதல் ஒருவரால் ஆர்வத்துடன் உருவாக்கப் படுகின்ற இனிய கலை ஆகும்இந்தத் தனித்திறமை அறிவாளிகளுக்கே உரியதுசிறந்த எழுத்தாளர்கள் தங்களின் சமூக அடையாளங்களைத் தங்களின் எழுத்துக்கள் மூலமாக சரித்திரத்தின் பக்கங்களில் விட்டுச் செல்லத் தவறுவது இல்லை.இத்தகைய கலைஞர்கள் எழுத்தாளர்கள்கவிஞர்கள்தத்துவவாதிகள்ஆவர்ஜோதிட விதிகளின்படி ஒருவர் எழுத்தாளர் ஆவதற்கான திறமைகள் அவரிடம் உள்ளனவா ? – என நாம் அனுமானித்துவிட முடியும்கவிஞர்கள் உருவாக்கப்படுவது இல்லைஅவர்கள் இயற்கையாகவே பிறக்கிறார்கள்இனி பெரிய எழுத்தாளர்களுக்கான யோக நிலைகளைப் பார்ப்போம்.

1.   இலக்கியம் எனும் பரிசைத் தருவது இரண்டாமிடம் ஆகும்இரண்டாம் அதிபதி, 5 ஆம் அதிபதியுடன் அல்லது குருவுடன் இணைந்துஇரண்டு அல்லது 5 ஆம் வீட்டில் இருக்க ஒருவர் எழுத்தாளர் ஆகிறார் அல்லது கவிஞர் ஆகிறார்.

2.   பலம் மிக்க குரு ஆத்ம காரகன் ஆக ஜாதகரை அனைத்தும் கற்ற  அறிவாளியாக ஆக்கிவிடுகிறது.  அவருடன் சுக்கிரன் அல்லது சந்திரன் இணைந்தால் ஜாதகர் மிகப் பிரபலமான எழுத்தாளர் அல்லது கவிஞர் ஆவார்.

3.   மற்றும் 9 ஆம் அதிபதிகள் தொடர்பு ஒருவரை எழுத்தாளர் ஆக்கும்.

4.   சனி மற்றும் குருவின் தொடர்பு ஒருவரை தத்துவம்ஜோதிடம் மற்றும் மத சம்பந்தமான நூல்களை எழுதும் ஆசிரியர் ஆக்குகிறது.

5.   புத-ஆதித்ய யோகம் ஆழ்ந்த எழுத்துத் திறனை அளிக்கிறதுதனுசு இலக்னமாகிஇந்த யோகமானது சிம்மம் அல்லது கன்னியில் ஏற்பட்டால் எழுத்துத் துறையில் மிகச் சிறந்த பலன்களை எதிர்பார்கலாம்.


6.   பலம்மிக்க புதன் ஆத்மகாரகனாகவும், 5 ஆம் இடத்து அதிபதியாகவும் திகழ ஜாதகர் பல நூல்களை எழுதும் ஆசிரியர் ஆகிறார்.

7.   குரு மற்றும் சந்திரனின் நல்ல இடங்களில் ஏற்படும் கேந்திர பரிவர்த்தனையால் ஏற்படும் கஜகேசரி யோகம் ஒருவருக்கு நல்ல எழுத்துத் திறமையை அளிக்கிறது.

8.   சில நேரங்களில் சனி – சுக்கிரன் அல்லது சனி – புதன் இணைவு எழுத்தார்வத்தைத் தருகிறது.

9.   இலக்னத்துக்கோ அல்லது சந்திராலக்னத்துக்கோ 2 அல்லது 8 ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்க ஜாதகரை கவிஞன் ஆக்கிவிடுகிறதுஎனினும்  9 ஆம் இடம் மற்றும் 9 ஆம் அதிபதி ஆகியோர் பலமானவராக இருக்க வேண்டும்.

10.  சனி ஆத்மகாரகன் ஆகி இலக்னத்துக்கு10 ஆம் இடத்தில் இருக்க சீரிய மற்றும் உயரிய எண்ணங்களைக் கொண்ட எழுத்தாளர் ஆவார்.

11.  ஆம் இடத்துக்கு 7 ஆம் இடமான உபஜெய ஸ்தானமான 11 ஆம் இடத்தில் 5 ஆம் அதிபதி இருக்க மிகப் பெரிய இராஜயோகத்தைத் தருகிறதுஇது முன்னேற்றத்தையும்,வளர்ச்சியையும் தருகிறதுஇதன் காரணமாக ஜாதகர் திறமைமிக்க நூலாசிரியர் ஆவதோடு,குழந்தைகளும் சிறப்பாக வளருகின்றனர்ஜாதகர் தனது நுண்அறிவு மூலமாக நல்ல சம்பாத்தியத்தையும் பெறுவார்.

12.  இலக்னத்துக்கோ அல்லது சந்திரா லக்னத்துக்கோ 4 மற்றும் 10 ஆம் இடங்களில் எந்தவொரு கிரகமும் இல்லை எனில் இளமைக்காலத்தில் வெற்றிகள் வந்து சேராது.

13.  ஆம் அதிபதிஆத்ம காரகனாகி அவருடன் சுக்கிரன் அல்லது குரு அல்லது சந்திரன் தொடர்புறஜாதகர் எல்லோராலும் விரும்பப்படுகிற மிகச் சிறந்த எழுத்தாளர் ஆகிறார்இனி சில எழுத்தாளர்கள்கவிஞர்களின் ஜாதகத்தினை அலசுவோம்.

இரவீந்திர நாத் தாகூர் – இவர் கல்கத்தாவில் 7 – 5 – 1861 அன்று 2 - 51  மணிக்குப் பிறந்தார்.

லக்///
சந்
புத,சுக்
சூரி

செவ்
கேது

லக்///


புத



இராசி
குரு
குரு


நவாம்சம்
சனி

சனி
சந்

இராகு




இராகு
சூரி
செவ்
சுக்


       தாகூர் ஒரு நுண்கலைகளின் ஆலமரமாக விளங்கினார்உச்ச குரு அவரை ஒரு மிகப் பெரிய அறிவாளி ஆக்கியதுஇலக்னத்தில் சந்திரன் மற்றும் இரண்டாமிடத்தில் புதன் – சுக்கிரன் ஆகியோர் இருப்பது சரஸ்வதி யோகத்தை அளித்ததுஇவர்கள் மூவரின் தாக்கமும் அவரை ஒரு பன்முகத் திறமை கொண்ட கலைஞர் ஆக்கியதுஇரண்டாம் அதிபதி செவ்வாய் மூன்றிலும்மூன்றாம் அதிபதி சுக்கிரன் மற்றும் நான்காம் அதிபதி புதன் ஆகியோர் இரண்டிலும்அறிவுக்கு அதிபதியான 5 ம் அதிபதி சந்திரன் இலக்னத்திலும் மற்றும் இலக்னாதிபதி 5 ஆம் இடத்திலுமாகஅவரை அனைத்திலும் திறமைமிக்க மற்றும் மேதாவிலாசம் மிக்கக் கலைஞர் ஆக்கியது.

       மேஷத்தில் உள்ள புதன் மற்றும் சூரியன் அவருக்கு இசைநடனம்நாடகம் மற்றும் எழுத்தாற்றல் ஆகியவற்றைத் தந்ததுரிஷபத்தில் உள்ள செவ்வாய் ஒருவரை இசைக் கலைஞர் ஆக்குகிறதுமீனத்தில் உள்ள சந்திரன்  ஒருவரை சிற்பிபாடகர் மற்றும் பல சாத்திரங்களிலும் சிறந்தவர் ஆக்கியது. இலக்னத்தின் மீதான குருவின் பார்வை அவருக்கு மிக்க புகழினைத் தந்தது.கடகத்தில் உள்ள குரு. இலக்கிய ராட்சதனாக, கவிஞனாக மற்றும் மேதை ஆக்கியது. மிக உயரிய கௌரவத்தை, மதிப்பை, மரியாதையை மேஷ சுக்கிரன் தந்தது. 9 ஆம் அதிபதியின், பத்தாம் இடம் மற்றும் அதிலுள்ள இராகுவின் மீதான பார்வை இராஜயோகத்தைத் தந்தது.

       பத்தாம் அதிபதிக்குப் பத்தாம் வீட்டில் சுபர்கள் இடம் பெற ஜாதகர் இந்த பூமியில் உள்ளவர்களுக்குத் தொண்டு செய்வதற்காகவே படைக்கப்பட்டவர் ஆகிறார்இவர் தனது கீதாஞ்சலி என்ற நூலுக்குஇலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.

மகாகவி பாரதியார். --- இவர் 11 – 12 – 1882 அன்று இரவு 9 – 30 மணிக்கு எட்டயபுரத்தில் பிறந்தார்.

       இவரது ஜாதகத்தில் இலக்னாதிபதி 6 ஆம் வீட்டில் இருப்பது சிங்கம் போன்ற தைரியத்தைக் கொடுத்தது. 2 ஆம் அதிபதி 5 இல் இருப்பது மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணமுடையவர் ஆக்கியதுதியாககுணம் கொண்டவராய் இருந்தார்,       3 ஆம் அதிபதி 5 இல் இருப்பது கடவுள் பக்தியையும்இரக்க குணத்தையும் தந்தது.   4 மற்றும் 5 ஆம் அதிபதிகள் 5 இல் இருப்பது  புகழ்மிக்க கவிஞர் ஆக்கியது. 6 ஆம் அதிபதி 12 இல் இருப்பது இவரை அலைந்துதிரியவைத்துஇராஜ தண்டனையும் தந்தது. 10 ஆம் அதிபதி 5 இல் இருப்பது ஒரு நல்ல ஆசிரியராக ஆக்கியது. 11 ஆம் அதிபதி 5 இல் இருப்பது அற்ப ஆயுளைத் தந்ததுசெவ்வாய்புதன்சுக்கிரன் இணைவு ஜாதிமதபேதம் அற்ற மனிதராகத் திகழ வைத்தது.


சனி()
கேது

குரு
()

செவ்
சூரி


இராகு
சந்



இராசி
லக்///



நவாம்சம்







சந்.
சூரி,புத செவ்
சுக் ()
இராகு

கேது,லக்//
சனி,சுக்
() ()
குரு
()




       சூரியன் மூன்றில் இருப்பது இவருக்குக் கூர்மதியையும்மேதாவித் தனத்தையும் தந்தது. 6 இல் உள்ள சந்திரனால் அரச சபையில் அரசரால் கௌரவிக்கப்பட்டார் மற்றும் எதிரிகளையும் அதிகம் தந்தார்செவ்வாய் 5 இல் இடம்பெற நல்ல பாண்டித்யம் பெற்றார்புதன் 5 இல் அமரஉண்மையாய் நடந்தார்பன்மொழிப் புலமை பெற்றார்இலக்கியம்கவிதை மற்றும் எழுத்தால் புகழ் பெற்றார்குரு 12இல் இடம்பெற பக்தி மிக்கவராகவும்சாத்திரம் கற்றவராகவும்அச்சமில்லை என்று பாடி அச்சமற்றவராகவும்மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஏற்படுத்த கவிதையால் நாட்டுக்குச் சேவை செய்பவராகவும் ஆனார்இறவாப் புகழும் பெற்றார்சுக்கிரன் 5 இல் இடம் பெற நல்ல சொற்பொழிவாளர் ஆனார்சனி 10 இல் அமர தைரியம் மிக்கவராகவும்தலைமைக்கு தகுதி படைத்தவராகவும்நல்ல ஆசிரியராகவும் ஆனார்.

       2 ஆம் அதிபதி மற்றும் 5 ஆம் அதிபதி இருவரும் இணைந்து 5 இல் இடம்பெற மிகப் பெரிய தேசியக் கவிஞர் ஆனார். 5 ஆம் அதிபதி செவ்வாயின் நட்சத்திரத்தில் குரு உள்ளார்எனவேசிறந்த எழுத்தாளர் ஆனார்குருவின் மீது சனியின் 3 ஆம் பார்வை விழுவதால் நல்ல நூலாசிரியர் மற்றும் பத்திரிக்கையாளர் ஆனார். சனி ஆத்மகாரகனாகி 10 ஆம் வீட்டில் இருப்பதால் சீரிய சிந்தனை உடையவராக இருந்தார்சந்திரனுக்கு 4 மற்றும் 10 ஆம் இடத்தில் கிரகங்கள் இல்லாத நிலையில் இளமையில் அவர் வெற்றி அடையமுடியவில்லை.