Sunday, April 5, 2015

துலாம் முதல் தனுசு வரை

மன்மத வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 


துலாம்


(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

       அசுர குருவான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு மன்மத வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.
       சூரியன்ஆடி மாதத்தில் தங்களுக்கு வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி கிட்டும். தங்கள் கல்வித் தகுதி, திறமை ஆகியவற்றிற்கு ஏற்ப நல்ல சம்பளத்துடன் நல்ல  வேலை கிடைக்கும். தொழிலில் புதிய திட்டங்கள், புதிய சிந்தனைகள், புதிய நுணுக்கங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அதிக இலாபம் காண முயல்வீர்கள். வாழ்க்கையில் சந்தோஷம், செல்வம் மற்றும் நோயினின்று விடுதலை ஆகியவை ஏற்படுகின்றன. ஆவணியில்  புதிய பதவிகளின் சொகுசை, மகிழ்ச்சியை அனுபவிக்கும் காலம். தனலாபம், மரியாதை மற்றும் முனேற்றங்களைத் தருகின்ற மாதம் ஆகும்வாழ்க்கையில் சிறப்பு மிக்க மரியாதைகளும், நல்ல மனிதர்களின் நட்பும் கிடைக்கும். பங்குனியில் மனஅமைதி, இலாபம் மற்றும் உயர்பதவிகள் குறிகாட்டப்படுகின்றன.
        செவ்வாய்புதிய வியாபார முதலீடுகள் மூலமாக அதிக இலாபங்களை ஈட்டுவீர்கள். சிறுதொழில் புரிவோர் தங்கள் பணியிடங்களில், தீ அணைக்கும் கருவிகளின் பணித்திறனை சோதித்து அறிவது, விபத்தைத் தடுக்க உதவும். வரவுக்கு மிஞ்சிய வீண் செலவுகள், அதிகரிக்கும் மனவியுடன் மனஸ்தாபம் தவிர்க்கத் தாஜா செய்வது பலன் அளிக்கும். வழக்குகளில் வெற்றியும், உயர்அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். அதன் பிறகு பூமிலாபம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும். சொகுசு மற்றும் ஆடம்பரப் பொருட்களின் வரவு வீட்டிலுள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
       புதன்வருட துவக்கத்தில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். வாக்கால் வருமானம் பெருகும்கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். தொடர்ந்து வரும் மாதங்களில்அலைச்சல் தரும் பயணங்களும், மரியாதையையும், புகழையும் தரும். புதிய பந்தங்கள், திருமண உறவுகள் ஆகியவை ஏற்படும். பின் வரும் மாதங்களில் நம்பிக்கையான நட்புறவு, நல்லுணவு ஆகியவை கிடைக்கும். உறவுகளுக்கு முன்னேற்றமும், நற்குணங்களும் ஏற்படுகின்றன.
       சுக்கிரன்வருடத் துவக்கத்தில் வீட்டில்  பெண்கள் மகிழ்ச்சி அடையும்படியான நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மூலமான மகிழ்ச்சியும், நல்ல காரியங்கள் செய்வதின் காரணமாகப் புகழும் பெருகும். தொடர்ந்து வரும் காலங்களில் ஆசிரியர் உதவி, அறிவு விருத்தி ஆகியவையும், பின் வரும் காலத்தில் தொழிலில் வெற்றி, பணஆதாயம், முன்னேற்றம் ஆகியவை ஏற்பட்டு, மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும். .
       குருவருடத் துவக்கத்தில் கர்ம பாவத்திலும், பின்னர் இலாபத்திலும் சஞ்சரிப்பது அதனால் ஆனி 20 க்குப் பிறகு அனைத்திலும் இலாபம் அதிகரிப்பதால் மகிழ்ச்சியும் அதிகரிக்கும், புகழ் ஓங்கும், பிறர் வழங்கும் மதிப்பு, மரியாதை எனத் துவங்கிய வாழ்வு இந்த வருடம் முன்னேற்றகரமாகவே இருக்கும். துயர்தந்த கடன் சுமைகள் குறையும். படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும்.
       சனிவருடம் முழுவதும் தனபாவத்தில் சஞ்சரிக்கும் சனி, இதுநாள்வரை ஜென்மச் சனிக்காலத்தில் பட்ட துன்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கும். 4, 8, 11 ஆம் இடங்களைப் பார்வை செய்யும் அவர், சீரான உடல் ஆரோக்கியத்தையும், வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றங்களையும், தைரியம், தன்னம்பிக்கை ஆகியவற்றையும் தருகிறார்செய்தொழில், வியாபாரம் எதுவாகினும் ஜீவன அபிவிருத்திக்கு திருப்திகரமான சூழலை உருவாக்கும். கலைஞர்களுக்குத் தங்கள் துறையில் புகழ், பெருமை, விருதுகள், புதிய ஒப்பந்தங்கள், வெற்றிகள் என அனைத்துமே ஏற்றம் பெறும். மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
விருச்சிகம்


( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
       தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக இராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு மன்மத வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.
       சூரியன்சித்திரை மாதத்தில்  எதிரிகளை வென்று, வெற்றிமேல் வெற்றி அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆவணி மாதத்தில் நல்ல நண்பர்களின் நட்பால் மகிழ்ச்சி உருவாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பரிபூர்ண ஆதரவு கிடைக்கும். புரட்டாசி மாதத்தில் எதிர்பார்த்தைவிட தனவரவு ஏற்பட்டு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.  தை மாதத்தில் மலையென அந்தஸ்து உயரும். இரக்க குணம் அதிகரித்து தான தர்மம் செய்வார். பிள்ளைகள் மூலமாக இன்பமும், துன்பமும் மாறிமாறி வரும்.
       செவ்வாய்கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சுற்றுவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைகள் கூடும்அரசுப் பணியாளர்கள் அதிகாரிகளுடன் சுமுகமாக நடந்தால் சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்படும். கூடுதலான தன வருமானத்தால் பசப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.  எல்லாம் சுபமாகவே நடக்கும். ஆடை ஆபரணங்களும் சேரும். திருமணம், மக்கட்பேறு என வாழ்வின் மகிழ்ச்சிகரமான தருணங்களாக அமையும்அடுத்து வரும் மாதங்களில் சிறு விபத்துக்கள், காயங்கள் ஏற்படலாம்பின் வரும் மாதங்களில் கோபத்தால் காரியங்கள் கெடலாம். சிலருக்கு எல்லாத் துறைகளிலும் இலாபம் ஏற்படும்.
       புதன்புதிய தொழில், வணிக முயற்சிகள் வெற்றி பெற புத்துணர்வோடு செயல்படுவது நல்லது. சோம்பேறித்தனத்தைக் குறைத்தும், செயல் திறனை அதிகரித்தும் செயல்பட்டால் சிறப்பான வாழ்க்கை அமையும்.  சிலருக்கு உயர் கல்வியில் தேர்ச்சியும், அரசு உத்தியோகமும் கிடைக்கலாம். எழுத்துத் தொழில் ஏற்றம் தரும். பல பரிசுகளும், கௌரவமும் கிடைக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பர். பின் வரும் காலங்களில் சாதுர்யமும், சாமர்த்தியமும் பெருகும். பங்கு மார்க்கெட் வகையில் அதிக லாபம் அடைவர். பயன்தராத முயற்சிகளில் ஈடுபடாதிருப்பது நல்லது.
       சுக்கிரன்குழந்தைகளின் வகையில் சுபச்செலவுகள் இருக்கும்.  உபயோககரமானதும் மகிழ்ச்சிகரமானதுமான வெளியூர்ப் பயணங்கள் ஏற்பட்டு, மனமகிழ்ச்சி அதிகரிக்கும். கடின உழைப்பால், விவசாயம் மற்றும் தொழில் மூலமான ஆதாயங்கள் பெருகும். மகனுக்குப் பலநாட்களாக எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். பின்னர் வரும் காலத்தில் நல்ல குணமுள்ள நண்பர்களுடன் மட்டுமான சவகாசம் மட்டுமே உயர்வைத் தரும்.  சிலருக்கு வெட்டிச் செலவுகளால் கடன்கள், அதிகமாகும், பெண்களால் நஷ்டம் ஆகியவை ஏற்படும். சொத்துக்கள் சேரும்விருப்பமானவர்கள் தங்கள் காதலைத் தெரிவிக்க அன்பளிப்புகள் மற்றும் பரிசுகள் தருவர்.
       குருதற்போது பாக்கிய பாவத்தில் சஞ்சரிக்கும் குரு ஆனி 20 க்குப் பிறகு கர்ம பாவத்தில் இடம் பெறுகிறார். தற்போதைய நிலைப்படி, சனியின் பாதிப்பு குருவின் பார்வையால் குறைந்து நன்மை அடைவீர்கள். அதற்குப் பிறகு பணி மாற்றமோ, வீடு மாற்றமோ, நிலைமாற்றமோ ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்பட்டு சிறந்த மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு சீராகும். வீடு, நிலம் ஆகியவற்றை உடனடியாக்க் கிரையம் செய்வது நல்லது. நல்ல வேலையைத் தேடிக்கொண்டு, இருக்கும் வேலையை விட முயற்சிப்பதே அறிவுடமையாகும்.
       சனி –  அபாயம், ஆபத்து, மனக்கவலை என அளித்து வந்த சனி அதன் பிறகு ஜென்மச் சனியாகக் களம் இறங்கி உச்சம் பெற்ற குருவின் பார்வையால் வருட ஆரம்பத்தை நல்ல காலமாக மாற்றிவிடுகிறார். 3, 7, 10 ஆகிய இடங்களின் மீதான சனியின் பார்வையால் முயற்சிகள் வெற்றி தரும். பணப்பிரச்சனைகளை சகோதரர்களின் உதவியோடு லாவகமாக்க் கையாள்வீர்கள். பதறிய காரியம் சிதறும் ஆதலால், நிதானமாகப் பொறுமையுடன் காரியங்களில் ஈடுபட்டால் சிறப்பாக அமையும். புதிய திட்டங்களை தொடங்குவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல் படுவது சிக்கல்களையும், சிரமத்தையும் குறைக்கும். சிக்கல்கள் குறைய திருநள்ளாறு சென்று சனி ஓரையில் நீராடி, எள் தீபம் ஏற்றி, கருப்பு வஸ்திரம் சாத்தி, மனதார வேண்டி வணங்க, கதிரவனைக் கண்ட பனிபோல் கஷ்டங்களும் மறையும். மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.


தனுசு

 ( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் –1,2 பாதங்கள்)
    தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட தனுர்ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு மன்மத வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப்  பார்ப்போம்.
    சூரியன்வைகாசி மாதத்தில் வராத கடன்கள் அனைத்தும் வசூலாகும். எதிரிகளின் தொல்லை ஓரளவு குறையும்பங்காளிகளுக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் நண்பர்களின் ஒத்துழைப்பால் தீரும். புரட்டாசி மாதத்தில் அரசின் உதவியால் செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அதிகாரிகளின் அனுசரணையால் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் நன்மைதரும். ஐப்பசி மாதத்தில்  புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வாகனம் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். மாசி மாதத்தில் ஆரோக்கியம் சீராகும். சகோதரரால் நன்மை உண்டு.
      செவ்வாய்வருட ஆரம்பத்தில் சந்தோஷமும், சௌகரியங்களும் பல்கிப் பெருகும். தடைக் கற்கள் எல்லாம் படிக் கற்களாக மாறும். எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் வெற்றிப் படியாக இருக்கும். அதைத் தொடர்ந்து வரும் காலங்களில் வெளிநாட்டுப் பயணங்களால் அல்லது வாணிபத்தால் இலாபம் கிடைக்கும். அதன் பின்னர் வரும் காலத்தில் கால்நடைச் செல்வம் பெருகும். பெண்களுக்கு அடுப்படி வேலைகளின் போது கத்தியால் அல்லது தீயால் சிறுகாயம் ஏற்படலாம். பொருளாதார நிலை உயரும். புகழும் ஓங்கும்.
      புதன்வருட ஆரம்பத்தில் நிம்மதியும் சுகமும் ஏற்படும். புத்தி தெளிவுற்று, அறிவுத் திறன் கூடி, உயர்கல்வியில் முன்னேற்றமிருக்கும். ஓரு அரசனைப்போல் இவர்களுக்கு பணியாட்கள் அதிகமிருப்பர். அடுத்து வரும் மாதங்களில் செய்யாத குற்றத்திற்காக பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். பேச்சாளர்களுக்கு வாக்குவன்மையால் வருமானமும், புகழும் உயரும். பின்வரும் மாதங்களில் பலவகை யோகமும், சந்ததி விருத்தியும் ஏற்படும். சிலருக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல்கள் ஏற்படும்.
      சுக்கிரன்குழந்தைகள் வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். பதிய ஆடைகள், பொன் ஆபரணங்கள் விதவிதமாகக் கிடைக்கும். எல்லா வசதிகளுடனும் கூடிய எழிலான இல்லம் அமையும். சொற்பொழிவுத் திறன் அதிகமாகி அதன் மூலமாகவும் வருமானம் வரும்மனைவி வயதானவளாக இருந்தாலும் அழகு குறையாத ஆரணங்காக இருப்பாள். பின் வரும் காலங்களில் அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு தலைமைப் பதவி தேடிவரும். தனக்கு நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பொழுதைக் கழித்து மகிழ்வீர்கள்.
       குருதனுசுக்கு அதிபதியான  தேவகுரு, ஆனி 20 இல் அட்டம ஸ்தானம் விட்டு, பாக்கிய பாவ மேறி சுய இராசியைப் பார்க்கிறார். இதுவரை நீங்கள் செய்துவந்த பிரார்த்தனைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக, நல்ல முன்னேற்றத்துடன் இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிட்டும். குருவின் அருளால் மனைவி மூலம் பூரணசுகம் கிடைக்கும். அரசு மூலம் வெகுமதிகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும். பின்னர் கீழ்நிலையில் உள்ளவர்களுடனான சினேகத்தால் அவமரியாதை ஏற்படும்.
    சனி –   7½ சனியின் நுழைவு வாயிலாக அமையும் 12 ஆம் பாவத்தில் அமர்ந்து சக்திக்கு மீறிய செலவுகளையும், வெகு தூரப்பயணங்களையும் ஏற்படுத்துகிறார். வேலை இல்லாமை அதன் காரணமாக வருமானமில்லாமை என அனைத்துத் துயரங்களையும் ஒரு சேரத் தரும் சனியின் மீது வருட ஆரம்பத்தில், தனது பார்வையைச் செலுத்தி தாக்கத்தை ஓரளவு குறைக்கிறார் தேவகுரு. காளஹஸ்தி சென்று சனீஸ்வரனை மனமுருகி வேண்டிவர வேதனைகள் குறையும். காசியாத்திரை செல்லலாம். மொத்தத்தில் இவ்வருடம் 50 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.


No comments:

Post a Comment