Thursday, September 14, 2017

ஜோதிடத்தில் தொழில் பாவ சூட்சுமங்கள்





ஜோதிடத்தில் தொழில் பாவ சூட்சுமங்கள்


      நான் வியாபாரத்துக்குத் தகுதியானவனா ? வியாபாரம் செய்து என்னால் இலாபம் சம்பாதிக்க முடியுமா  அல்லது நஷ்டப்படுவேனா ? என்பதே ஜோதிடரிடம் இன்றைய இளைஞர்கள் கேட்கும் முதல் கேள்வியாக உள்ளது. இதற்கான முறையான வழிமுறைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். ஆராய்ச்சிக்கான காரணிகள், கூடுதலாக இருக்க வேண்டிய யோகங்கள், தன யோகங்கள், தொழில் தொடங்க சரியான கால நேரங்கள், ஒவ்வொரு கிரகங்களுக்கும் உரிய தொழில் காரகங்கள் ஆகியவற்றை உதாரண ஜாதகத்துடன் இக் கட்டுரையின் மூலம் விரிவாகக் காண்போம்.
      பொதுவாக, ஒரு ஜாதகத்தில் கீழ்கண்ட விஷயங்களையே ஒரு ஜோதிடர் ஒவ்வொன்றாக ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வார்.
1.       தொழில் பாவத்துக்குக் காரகக் கிரகங்களான சனி, புதன், குரு மற்றும் சூரியன் ஆகியவற்றின் நிலை.
2.       10 ஆம் இடம் மற்றும் 10 ஆம் அதிபதி.
3.       10 ஆம் அதிபதியின் நிலை / பார்வை / இணைவு ( ஆங்கிலத்தில் – பொஸிஷன், அஸ்பெக்ட், கன்ஜங்ஷன் சுருக்கமாக பிஏசி என அழைக்கிறோம் )
4.       டீ9 – எனும் நவாம்சக் கட்டம்.
5.       டீ10 – எனும் தசாம்சக் கட்டம். (தொழில் முன்னேற்றத்துக்கு தன, பாக்கிய, இலாப வீடுகள் ஆராயப்பட வேண்டும்.
2 ஆம் பாவம் –  தொழில் மூலமான தனவரவு,

9 ஆம் வீடு – பாக்கியம் அல்லது அதிர்ஷ்டம், அதன் மூலமாக வரும் பெயர், புகழ், வெற்றி மற்றும் ஆதாயம்.

11 ஆம் பாவம் – இலாபங்கள் – சிறப்பாக ஜாதகர் எந்த தொழில்/வணிகம் செய்தால் முன்னேறலாம் என்பதை அறிய.
      இவற்றுடன் கூடுதலாக ஜாதகத்திற்கு பொதுவாக பலம் கூட்டக் கூடிய வகையில் உள்ள  சில இராஜயோகங்கள், தன யோகங்கள் மற்றும் பஞ்ச மஹா புருஷ யோகங்கள், அவற்றால் ஜாதகர் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்வார் என்பதையும் ஆராய வேண்டும்.
      ஒரு முக்கிய பலம் மிக்க இராஜயோகமானது – சந்திரனுக்கு கேந்திரங்களில் 11 ஆம், 9 ஆம், 2 ஆம் அதிபதிகளில் ஒருவர் இடம் பெற ஜாதகர் சக்ரவர்த்தி ஆவார். ( இந்த அமைப்பை மிகப் பெரிய தொழிலதிபர் திருபாய் அப்பானியின் ஜாதகத்தில் காணலாம். சந்திரன் மற்றும் பாக்கியாதிபதி சூரியன் இலக்ன கேந்திரத்தில் அமர்ந்து உள்ளனர் )
       மேலும் கீழ்கண்ட விவரங்களையும் மறக்காமல் கணக்கில் கொள்ள வேண்டும்  --
       கேந்திராதிபதி கோணத்திலோ அல்லது கோணாதிபதி கேந்திரத்திலோ இருப்பதுவும் இராஜயோகம் எனக் கருதப்படுகிறது. 2 ஆம் 11 ஆம் அதிபதிகள் 5 ஆம் , 9 ஆம் அதிபதிகளுடன் பரிவர்த்தனை பெற, பார்க்க, சாரம் பெற - தன யோகம் ஏற்படுகிறது.
       தன யோகங்கள் கீழ்கண்டவாறு அமைகின்றன –
1.       இலக்னாதிபதி, தனாதிபதி இணைவு 5, 9, அல்லது 11 ஆம் அதிபதிகளுடன் இணையும் போதும்
2.       தனாதிபதி, பூர்வ புண்யாதிபதியுடனோ, பாக்கியதிபதியுடனோ, இலாபாதிபதியுடனோ இணையும் போதும்.
3.       5 ஆம் அதிபதி, பாக்கியாதிபதியுடனோ அல்லது இலாபாதிபதியுடனோ இணையும் போதும்.
4.       பாக்கியாதிபதி இலாபதியுடன் இணையும் போதும் ஏற்படுகிறது.
6  ஆறாம் வீடு சேவையைக் குறிகாட்டுகிறது. 6 ஆம் வீடோ அல்லது 6 ஆம்   அதிபதியோ இலக்னம் அல்லது இலக்னாதிபதியை விட பலமாக இருந்தால் ஜாதகர் சேவைப் பணி செய்வார் அல்லது சேவை தொடர்பான பணியில்     பிறருக்கு கீழே பணிபுரிவார், இலக்னம் அல்லது இலக்னாதிபதி, 6 ஆம் வீடு       அல்லது 6 ஆம் அதிபதியை விட பலமாக இருந்தால் ஜாதகர் சுயவேலை      வாய்ப்பு பெறுவார்.
       உதாரணமாக தொழிலதிபர் திருபாய் அம்பானியின் ஜாதகத்தில் இலக்னாதிபதி குரு, சந்திரா இலக்னத்துக்கு, தசம கேந்திரமான கன்னியில் அமர்ந்து கஜகேசரி யோகத்தை ஏற்படுத்துகிறார்.      6 ஆம் அதிபதி சுக்கிரன், புதனுடன் இணைந்து     12 இல் அமர்ந்துள்ளார். எனவே, இலக்னாதிபதி குரு பலம் பொருந்தி உள்ளதால் அவர் மிகப் பெரிய தொழில் அதிபரானார். மேலும், அவரின் ஜாதகத்தில் இந்து இலக்னம் விருச்சிகத்தில் அமைகிறது. 6, 11 க்கு உரிய சுக்கிரனும், 7, 10 க்கு உரிய புதனும் இணைந்து இந்து இலக்னத்தில் உள்ளனர். அவர்கள் இந்து இலக்னாதிபதி செவ்வாயின் நான்காம் பார்வையால் பார்க்கப்படுகின்றனர். இந்த யோக இணைவுகள் காரணமாக ஜாதகர் கோடீஸ்வரர் ஆனார்.
       இந்த யோகங்கள் 6, 8 அல்லது 12 ஆம் பாவங்களோடு தொடர்பு கொள்ளக் கூடாது. ககல யோகமோ அல்லது ஹேமதுரும யோகமோ தொழிலதிபர்கள், வியாபாரிகளின் ஜாதகத்தில் அமைந்துவிடக் கூடாது.
       மேலும், வெற்றிகரமான வியாபாரியாக இருக்க, ஜாதகத்தில் பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்று அல்லது இரண்டு யோகங்களாவது அமையவேண்டும்.
       தொழில், வியாபாரத்தில் வெற்றி அடைய, 1, 2, 5, 9, 11 ஆம் அதிபதிகள் நல்ல நிலையில் அமைந்திட வேண்டும். அவர்களுக்கு அசுபர்களின் தாக்கம் இருக்க்க் கூடாது.
தொழிலதிபர் திருபாய் அம்பானியின் ஜாதகம்






இராகு
இலக்//
சனி


இராகு

டீ. அம்பானி.
28 – 12- 1932
06 – 37 காலை
வெரவால். குஜராத்.
இராசி





நவாம்சம்
டீ-9
சூரி
சனி
செவ்,
கேது
குரு
புத

இலக்//
சூரி, சந்
சுக், புத

குரு

சுக், செவ்
சந்
கேது
      


சூரி, செவ்
குரு

புத,
கேது


தசாம்சம்
டீ 10
சந்

இராகு
லக்//, சுக், சனி




          மேற்கண்ட ஜாதகத்தில் இராசிக் கட்டத்தில், தனாதிபதி சனி தனது சுய வீட்டில் பலமாக உள்ளார். தனகாரகன் குருவால் பார்க்கப்படுகிறார். இவை ஜாதகருக்கு நன்மை செய்யக் கூடிய இணைவுகள் ஆகும். இலக்னாதிபதி குரு இராஜ்ஜிய ஸ்தானத்தில் இருந்து இராஜயோகம் தருகிறார். இதன் காரணமாக செல்வ நிலையும், முன்னேற்றங்களும் அடைந்தார். 5 ஆம் அதிபதி 9 இல், பாக்கியாதிபதி சூரியன், நட்பு வீடான குருவின் இலக்ன வீட்டில் இருக்கிறார். இதுவும் ஒரு கூடுதல் நன்னிலை. இலக்னாதிபதி குரு தனகாரகனும், இயற்கை சுபரும் ஆவார். சுபர் 10 இல் இருந்து உயர்ந்த யோகமான அமலா யோகத்திற்குக் காரணமாகிறார். சந்திரனுக்குக் கேந்திரத்தில் அமர்ந்து கஜகேசரி யோகமும் ஏற்படுகிறது. அதன் காரணமாக ஜாதகருக்கு அபரிமிதமான செலவம், சொத்துக்கள், புகழ், மதிப்பு, மரியாதை ஆகியவையும் ஏற்படுகின்றன. நவாம்சக் கட்டத்தில் புதனுடன் இணைந்து, தொழில் மற்றும் வணிகத்திற்குக் குறிகாட்டுகிறார். ஜாதகருக்கு சுகமான குடும்ப வாழ்க்கையும் அமைந்தது.
       கோணங்களான 1 – 5 – 9 ஆகிய பாவங்கள் இணைவு பெற்றுள்ளன. 5 ஆம் அதிபதி செவ்வாய், 9 ஆம் இடத்திலும், இடம் கொடுத்த சூரியன் இலக்னத்தில் அமர்ந்து இந்த நல்ல இணைவு ஏற்படுகிறது. இதுவும் அவருக்கு மிக்க அனுகூலமான பலன்களைத் தந்தது.
      மற்றும் ஒரு நல்ல நிலை என்னவெனில் மூன்று கட்டங்களிலும் செவ்வாய்  சிறந்த நிலையில் அமர்ந்து வணிகத்தில் தனித் திறமையைத் தந்தது. செவ்வாய் மகா திசையில்தான், இவர் நல்ல உச்ச நிலைக்குச் சென்றார். வணிகத்தில் வெற்றி மேல் வெற்றி, சொத்து சேர்க்கை, முன்னேற்றங்கள், தொழில் மூலமான புகழ் என கொடிகட்டிப் பறந்தார். 3 இல் இராகு நல்ல நிலை என்றாலும், பல தடைகளுக்குப் பிறகே அவரால் உயர்ந்த நிலைக்கு வர முடிந்தது.
       இலக்னாதிபதி குரு, 9 ஆம் அதிபதி சூரியன் சாரம் பெற்று 10 இல் இடம் பெற்றது குரு திசையையும் சிறப்பாக்கியது. சிறப்பாக வாழ்ந்தார். சனி திசையில் மேலும் இவர் நிலை உச்சத்தை அடைந்தது. தன ஸ்தானாதிபதி, ஆட்சி வீடு, இலக்னாதிபதி, தனகாரகன் குருவின் நற்பார்வை என அனைத்துமே உயர்வைத் தந்தது. நவாம்சத்தில் இயற்கை அசுபரான சனி நீசமானாதால் அதன் அசுபத் தன்மை குறைந்தது. அதுவும் நன்மைதானே ? எனினும், மாரக ஸ்தானாதிபதியும் ஆனதால், இந்த திசை அவருக்கு மரணத்தையும் தந்தது.
       நவாம்சத்தில், 10 ஆம் அதிபதி சனி, இலக்னத்தில் அமர்ந்து, பாக்கியாதிபதி குரு கர்ம பாவத்தில் அமர்ந்து, சனியால் பார்க்கப்படுகிறார். இதுவும் ஒரு நல்ல யோகமே. மூன்று கட்டங்களிலும் சூரியன் சிறப்பாக இருப்பதும் நல்லதே. சுக்கிரனும் வர்கோத்தமம் ஆகியுள்ளார்.

புதிய தொழில் தொடங்கும் போது பார்க்க வேண்டிய ஜோதிட நிலைகள். –
       தொழில் வியாபாரம் ஆரம்பிக்க சனிக் கிழமை மற்றும் புதன் கிழமை ஆகிய நாட்கள் அனுகூலமானது. கீழ்க் கண்டவை தொழில், வியாபாரம் ஆரம்பிக்க சிறந்த காலங்களாகும்.
      கோசார சூரியன் மேஷத்தில் இருக்கும் ஏப்ரல் 14 முதல் மே 14 ஆம் நாள் வரையும் மற்றும் சிம்ம சூரியன் ஆகஸ்டு 17 முதல் 28 ஆகஸ்டு முடிய உள்ள நாட்களும் அனுகூலமான நாட்களாகும். துலாம் மற்றும் மகர மாதங்கள் சிறப்பானதல்ல.
       தொழில், வணிகத்துக்கு காரகரான புதன் மிக்க பலமாக இருக்க வேண்டும். கோசார புதன் கன்னி மற்றும் மிதுனத்தில் இருக்கும் காலம் சிறந்ததாகும்.
       திரிகோண ஸ்தானங்களில் குரு இருந்து, இலக்னாதிபதியைப் பார்க்கும் காலமும் மிகச் சிறந்தது.
       கர்ம காரகன் சனி பலம் பெற வேண்டும். சனி உச்சமாக இருக்கும் காலம் மிகச் சிறப்பானதாகும்.
       பௌர்ணமி நாளும் மிகச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது.
       தசை, புக்தி, அந்தரம் மற்றும சூட்சும காலங்களும் சிறப்பானதாக, அனுகூலமானதாக இருக்க வேண்டும்.
       ஒரு ஜாதகருக்குத் தகுதியான, சிறப்பான தொழிலை தேர்ந்து எடுக்க ஆராய வேண்டிய காரணிகள் –
       10 மற்றும் 7 ஆம் பாவங்கள், அவற்றின் பாவாதிபதிகள், அவர்களுக்கு இடம் கொடுத்தவர்கள் மற்றும் இந்த இரு பாவங்களில் இடம்பெற்றுள்ள கிரகங்கள் ஆகியவை சரியான தொழில் தேர்வுக்கு வழிகாட்டும்.
       கர்மாதிபதியாகும் ( 10 ஆம் அதிபதி ) கோளகள் குறிகாட்டிடும் தொழில்கள் -  
சூரியன் – அதிகாரத்தில் உள்ளவர்கள், ஆள்பவர்கள், அதிமுக்கியமானவர், அரசாங்கம், தங்க - பத்தர், நகைவியாபாரி, வட்டிக் கடைக்காரர், குழந்தைகள் தொடர்புள்ள பணிகள், சர்க்கஸ் பயிற்சியாளர்கள், திரையரங்கு உரிமையாளர் மற்றும் மேனேஜர் ஆகியோரைக் குறிக்கும்.

சந்திரன் – பயணங்கள், பயணவிதிகள், மாலுமிகள், நர்ஸ், மது வியாபாரிகள், துணி துவைப்பவர்கள் (லாண்டரி) தோட்டக்காரர், பேக்கரி உரிமையாளர், ஹவுஸ் கீப்பிங், டையரி உரிமையாளர், குழந்தை மருத்துவர், ஹீலர், ப்ளாஸ்டிக், கேட்டரிங், உணவகங்கள் மற்றும் வெயிட்டர்கள் ஆகியோரைக் குறிக்கும்.
செவ்வாய்/கேது – தீயணைப்புத் துறையினர், மெடலர்ஜிஸ்ட், துப்பாக்கித் தொழிற்சாலை, மெஷின் டூல்ஸ், இராணுவ வீரர்கள், போலீஸ், சர்ஜன், பல் மருத்துவர், பார்பர், சமையல்காரர், ஹார்ட் வேர் சாமன்கள், கொல்லர், பாக்ஸர், கசாப்புக் கடைக்காரர், கெமிஸட், மருந்தாளுனர் ஆகியோரைக் குறிக்கும்.
புதன் – பதிவுத்துறை, (டாக்குமென்டேஷன்), ரிகார்டிங், அது தொடர்பான பணிகள், கற்பித்தல், எழுதுதல், அலுவலர், எழுத்தர், கணக்காளர், புக்-கீப்பர், தபால்காரர், பஸ் டிரைவர், ரயில் பணியாளர்கள், ஆர்ச்சிடெக்ட்ஸ், கரஸ்பாண்டண்ட், ஸ்டெனோகிராபஃர், ரிப்போர்டர், ரேடியோ, டி.வி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள், ஸ்டேஷனரி, பிரிண்டிங், தொலைபேசி மற்றும் அஞ்சல் துறை ஊழியர்கள் ஆகியவற்றைக் குறிக்கும்.
குரு – கவுன்சலர்ஸ், வக்கீல், விரிவுரையாளர், பப்ளிஷர்ஸ், எழுத்தாளர்கள், ஜோதிடர்கள், டிராவல் ஏஜன்ஸி, மதபோதகர், கோவில் தர்மகர்த்தா, கேஷியர், தத்துவவாதி, இலக்கியவாதி, மளிகைக் கடைக்காரர், சிகரெட் விற்பனையாளர் ஆகியோரைக் குறிக்கும்.

சுக்கிரன் – கவிஞர்கள், கலைஞர்கள், சினிமாக் கலைஞர்கள், நடனமணிகள், பாடகர்கள், இசைக் கலைஞர்கள், வாத்தியக் கலைஞர்கள், தொப்பி மற்றும் ஆடை நிபுணர்கள், பேன்ஸி ஷாப், நவநாகரிக ஆடைகள், விலை உயர்ந்த துணிவகைகள், சுகந்த பரிமள வஸ்துக்கள், அழகுக்கலை நிபுணர்கள், எல்லாவகை என்டர்டெய்னர்ஸ், பர்னிச்சர் தயாரிப்பாளர்கள், பெண்களுக்கான பேன்ஸி பொருட்கள், காபி – டீ எஸ்டேட் முதலாளிகள், பூ வியாபாரிகள், எம்ராய்டரி கலைஞர்கள், சோஷியல் செகரட்ரீஸ், போட்டோ கிராபஃர்ஸ், கார்டூனிஸ்ட், என்கிரேவர்ஸ் ஆகியோரைக் குறிக்கும்.
சனி / இராகு – சுரங்கத் தொழிலாளர்கள், நிலக்கரி மற்றும் பெட்ரோல், டீசல் போன்ற அனைத்துவகை கச்சா எண்ணைகள், ரியல் எஸ்டேட், கைத்தொழில் வல்லுனர், ப்ளம்பர், ஆர்ச்சிடெக்ட், மயானம், கட்டிடக் காண்ட்ராக்டர், தச்சர், தோல் பொருட்கள், ஐஸ் தயாரிப்பாளர், மேஜைக் கடிகாரம், சவப் பெட்டி தயாரிப்பாளர், கல்லறைக் கற்கள் தயாரிப்பாளர், பண்ணை, தொழிற்சாலை, தொழிலாளிகள், காவலாளி, மதபோதகர், வெட்டியான், மதக் கூட்டத்தார் (மாங்க்ஸ), கன்னிமார்கள் (கிருத்துவ) தத்துவவாதிகளையும் குறிக்கும்.
கூட்டாளியின் நிலை நீடிக்குமா ?
       7 ஆம் அதிபதி, ( கூட்டாளி ) புதன் ( வியாபாரம் ) சனி ( கர்மகாரகன் ) ஆகியோர் 6, 12 ஆம் அதிபதிகளுடன் தொடர்பு கொண்டால் கூட்டு முறியும். அவ்வாறில்லாமல் 5 , 11 ஆம் பாவங்களுடன் தொடர்பு கொண்டால் கூட்டாளியுடனான உறவு பலப்பட்டு இலாபம் அதிகரிக்கும்.

       எனவே, நண்பர்களே ! தொழில் சார்ந்த அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்தது பயனுள்ளதாகவும், ஜோதிட ஆராய்ச்சிக்கு உபயோககரமாகவும் அமைந்திருக்கும் என முடிக்கிறேன். வாழ்க வளமுடன்.




























Tuesday, July 11, 2017

இராகு - கேது பெயர்ச்சி பலன்கள் மகரம் முதல் மீனம் வரை


இராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

மகரம் முதல் மீனம் வரை



மகரம்
( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
     கர்மகாரகனான சனியை அதிபதியாகக் கொண்ட மகரராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017  ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.

       கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் ஆயுள் பாவத்திலும் கேது – தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான களத்திர பாவத்துக்கு  இராகுவும், மகர இராசியான 1 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சியின் போது இராகு, கேதுவால் சுமாரான பலன்களையே எதிர்பார்க்கலாம்.

       இராகுவின் களத்திர பாவ அமர்வு, வியாபார, தொழில் கூட்டாளிகளின் மூலமான இலாபத்தைக் குறிகாட்டுவதுடன், பொதுவாழ்வில் ஆதாயம், மகிழ்ச்சி மிக்க மண வாழ்க்கை, அனைத்து விதத்திலும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு ஆகியவற்றையும் குறிகாட்டுகின்றது. தெய்வ காரிய ஈடுபாடுகளால் எதிலும் திருப்திகரமான வாழ்க்கை அமைய வாய்பு உண்டு. அரசு மூலம் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் தாமதமாக்க் கிடைத்தாலும், மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வெறுப்பாய் இருக்கும். வீண் விவாதங்களால் பிறருடன் மனஸ்தாபம் ஏற்படும். மனைவியுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது அழகு. கையிலுள்ள பணமெல்லாம் விரயத்தால் கரையும். உழைப்பு அதிகமாகி ஊதியம் குறையும். எதிர்ப்புகள் குறையும். எதிரிகள் மறைவர். திருமணம் ஆகாதவர்களுக்கு  மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கையில் ஈடுபடும் காலம் கனியும். உங்களுக்குள் ஒளிந்து இருக்கும் வெளிக் கொணரும் காலம் இது. இதுநாள்வரை இருந்துவந்த மனழுத்தங்கள், உளைச்சல்கள நீங்கி, சீரான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். உற்சாகத்துடன் எல்லா வேலைகளையும் சிரமேற்கொண்டு சீராகச் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். எந்தவொரு காரியத்தையும், எவருடைய தயவுமின்றி, எவருடைய ஆலோசனையும் கேட்காமல், சுயமாக சிந்தித்து செயல்படுவதே பாதுகாப்பானதும், சிறப்பானதும் ஆகும். 

       இராசியில் இடம் பெற்ற கேதுவால் ஜாதகர் கவலைகளுக்கு உள்ளாக நேரும். வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்திக்க நேரும். விரும்பாவிட்டாலும் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிலிருந்து விடுபட, பணிகளை திட்டமிட்டு சீராகத் திறம்பட செய்தல், தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் கூடிய செயல்பாடுகளே முக்கியம் ஆகும்.   எவருக்கேனும் இரக்கப்பட்டு ஜாமீன் கையொப்பம் இட்டால், சிவபெருமானின் தலையில் அரக்கன் கைவைத்த கதை போல் ஆகிவிடும். எனவே, சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்துவிடாதீர்கள். தொழில் மந்த நிலைகள் உருவாக் கூடுமாதலால், தேவைக்கு அதிகமாகக் கடன் வாங்குவதைத் தவிருங்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் முன்னெச்சரிக்கையாக முழு உடல் பரிசோதனைகளைச் செய்து கொள்வது நல்லது. நண்பர்கள், உறவுகளிடம் பகைமை நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நாவை அடக்கி, நிதானமாகச் செயல்பட அறிவுறுத்தப் படுகிறீர்கள். சிலருக்கு எதிலும் சலிப்பு, டென்ஷன், தலைசுற்றல், காய்ச்சல், தூக்கமின்மை வந்து போகும்.                           சமயோஜித புத்தியுடன் செயல்படுவது சங்கடங்களைத் தீர்க்கும். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களின் கடின உழைப்பே, அவர்களைக் கல்விக் கடலின் இனிய கரை சேர்க்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

       குடும்பம் மற்றும் பொருளாதாரம்: தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்குச் சுகம், தனலாபம், புதிய நண்பர்கள் மற்றும் சந்தோஷம் ஆகியவை ஏற்படும். துன்பத்தில் கைகொடுக்கும் துணையின் உதவியால் மனதில் அமைதி நிலவும்.புதிய சாதனைகள் புரிவர். உடற்பொலிவும் ஒளியும் கூடும். மனதுக்குப் பிடித்தபடி மனை, வீடு மற்றும் வாகன வசதிகள் கிடைக்கும். மனைவியுடன் சிறுசிறு ஊடல்கள் ஏற்படும்.
       தொழில் மற்றும் வியாபாரம்  ;- தொழிலிலும், சமூக வாழ்விலும் முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். வியாபாரத்தில் ஈடுபாடும் அதிகரிக்கும். அதன் காரணமாகப் பண இலாபங்களும் அதிகரிக்கும்.  புதிய திட்டங்களில் முதலீடு செய்யாதிருப்பது நல்லது. தங்கள் முதலீடுகளை வேறு புதிய திட்டங்களில் முதலீடு செய்ய முனைவீர்கள். வியாபாரத்தில் இருந்த வந்த மந்த நிலைகள் தொடரும். விவசாயிகள் விவசாயத்தில் நவீன முறைகளைக் கையாண்டு இலாபம் ஈட்டமுனைவர்.
       உத்தியோகஸ்தர்களுக்கு – வெளியிடத்தில் சென்று பணிபுரிய விரும்புவர்களுக்கு நல்ல வாய்ப்புகள்   அமையும்.  உங்கள் பணியில் அதிகாரிகளின் அதிகமான தலையீடுகள் இருக்கும். ஆதலால், அதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு தாமதம் ஆனாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உயர்பதவிக்காகக் காத்திருப்பவர்கள் உடனடியாகக் கிடைக்காவிட்டாலும்   தாமதம், தடைகளுக்குப் பிறகு கட்டாநம் கிடைக்கும்.                                                                                                                                                                                                                பெண்களுக்கு ;- குழந்தைகள் பராமரிப்பில் அதிக அக்கறைகொண்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். திருமணமாகாத பெண்களுக்குத் திருமணமாகி மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும்பெண்கள் அவப்பெயர் ஏற்படா வண்ணம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளைத் தடைகளுக்குப் பிறகு எதிர்பார்க்கலாம்.  உயர் அதிகாரிகளின் கெடுபிடியால் மன உளைச்சல்கள் ஏற்படும். கடின உழைப்பின் காரணமாக ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம்.
       மாணவர்களுக்கு ;- மாணவர்களின் கல்வித்தரம் உயரும். சில மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல் இருந்தாலும், வீணாகப் பொழுதைக் கழிப்பதால் பின்தங்கிய நிலையில் இருப்பர். தடகளப் போட்டிகளில்  பங்கு பெற்று தேசிய அளவில் பரிசுகளை வெல்வர் நேர்காணல்களில் ஏற்படும் தடை தாமதங்களையும் மீறி அவற்றில் வெற்றி பெறுவர். வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்புக்கள் அமையும். மிகுந்த அக்கறையுடன் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற இயலும்.
      அரசியல்வாதிகளுக்கு – கட்சி மாற்றம், தலைமை மாற்றம் ஆகியவற்றில் ஈடுபட நேரும். சிலருக்கு மந்திரி போன்ற உயர்பதவிகள் பெற போராட வேண்டியிருக்கும். தேவையற்ற போராட்டங்களில் ஈடுபட்டு சிலர் சிறை செல்ல நேரலாம். மக்கள் மத்தியில் புகழ் உயர்ந்து மதிப்பும் மரியாதையும் கூடும். தொண்டர்கள் வகையில் அதிக செலவினங்களை எதிர்பார்க்கலாம். மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குகளை நிறைவேற்ற மிகுந்த பிரயாசை எடுக்க வேண்டியதிருக்கும்.
       கலைஞர்களுக்கு – வெளிவட்டாரப் பழக்கங்களும், பிற இனத்தவர் தொடர்பும் அதிக பட வாய்ப்புகளை ஏற்படும். வெளியூரில் புகழ் அதிகரித்து, உள்ளூரில் இருக்கும் மதிப்புக் குறைய வாய்ப்பு ஏற்படும். நடித்துக் கொடுத்த படங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகளை வசூலிப்பதே பெரிய வேலை ஆகிவிடும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு இன்மையால் சில பிரச்சனைகளை எழலாம். சுகவாழ்வு, சொகுசான நிலைக்கு பஞ்சம் இருக்காது.
       பரிகாரங்கள் – வெள்ளிக் கிழமை தோறும் பாம்புப் புற்றுள்ள இடத்தில் பால், பழம், முட்டை படைத்து வழிபடுதல் தோஷங்களை நீக்கும். சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.



கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
       ஆயுள் காரகனான சனியை அதிபதியாகக் கொண்ட கும்பராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017  ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது  பெயர்ச்சி  தரும்  பலன்களைப் பார்ப்போம்.

       கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் களத்திர பாவத்திலும் கேது – ஜென்ம இராசியிலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான ருண, ரோக, சத்ரு பாவத்துக்கு  இராகுவும், மகர இராசியான விரயபாவமான 12 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சி மூலமாக இராகுவால் ஆதாயங்களைப் பெறுவீர்கள். கேதுவால் சுமாரான பலன்களையே எதிர்பார்க்கலாம்.

      சத்ரு பாவத்துக்கு மாறும் இராகுவால் சேவைப் பணிகள் மூலமான ஆதாயங்கள், உதவியாளர்கள் மற்றும் உடன் இருப்பவர்களின் மூலமான ஆதாயங்களும் குறிகாட்டப்படுகின்றன. உடல் ஆரோக்கியத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் பேணிக் காக்கவும். அதற்கு, எந்தவொரு விஷயத்துக்கும் டென்ஷன் ஆகாமல், அதிக்க் கடினமான பணிகளைச் செய்யாமல் இருப்பது நல்லது. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றில்லாமல் அனுபவபூர்வமாக உணர்ந்து செயல்படுவதே சிறப்பாகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும்  புத்திர பாக்கியம் ஏற்படும். நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள், எதிரிகளை வெல்லுதல், அதிகரிக்கும் சொத்துக்கள் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். சிலருக்கு நோய்கள் விலகும். வீட்டில் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்புக் கூடும். எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கும் போது கவனம் தேவை. தந்தையுடன் இதுவரை இருந்த மனக் கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். மாணவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி படிப்பில் முன்னேறுவார்கள். குலதெய்வம் ஆசி கிட்டும். சுற்றுலாவின் மூலம் பல புண்ணியத்தலங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். அரசியலில் அனுகூலம் ஏற்படும்.

       விரய பாவம் வரும் கேதுவால்  ஆன்மீக விஷயங்களிலும், தியானம் ஆகியவற்றிலும் ஆர்வம் ஏற்படும். இரகசிய திட்டங்கள், தியாக உணர்வு, தன்னம்பிக்கை இன்மை, சந்தேக குணம், புரட்சிகரமான எண்ணங்கள் ஆகியவை ஜாதகரின் மனத்தில் கிளர்த்து எழும். இந்தக் காலம் ஒருவர் தனது குற்றங்குறைகளை உணர்ந்து, தனது அனுபவத்தையே பாடமாகக் கொண்டு வருங்கால முன்னேற்றத்துக்குப் படியாக அமைத்துக் கொள்ளும் காலம் ஆகும்.    குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் உங்கள் சமயோசித புத்தியால் சரியாகிவிடும்சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். ஏமாற்றங்கள், மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை, கணவன் மனைவிக்கிடையேயான ஊடல்கள் ஆகியவை தவிர்க்கமுடியாத நிகழ்வுகளாகும். தெய்வ தரிசனங்களுக்காக அடிக்கடி புண்ணிய ஸ்தலங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். அதன் காரணமாக சிறுசிறு வீண்விரயங்கள் எதிர்கொள்ள நேரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடனகளின்றி நிம்மதியாக வாழலாம். பணம் கொடுக்கல் வாங்கலிலும், கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறுவதிலும் தடைகள் உண்டாகும். கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அரசுப் பணியாளர்கள் சற்று நெருக்கடிகளைச் சந்தித்தாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.
      
       குடும்பம் மற்றும் பொருளாதாரம்  ;- வீட்டில் மங்கள சுப காரியங்கள் நடக்கும். உயர்ந்த மனிதர்களின் நட்பு ஏற்படும் வாய்ப்பு ஏற்படும். செல்வம் சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு அழகிய மனைவி அமைவாள். ஆனல், தாமதப்படலாம். மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும்பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மனைவியின் பக்திமார்க்கம் உங்களின் மத உணர்வைத் தூண்டும். . கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடுவார். சிலருக்கு குடும்பச் சொத்து கிடைக்கும்

      தொழில் மற்றும் வியாபாரம் ;- சிலருக்கு எதிர்பாராத விதமாக வேலை கிடைக்கும். தங்கள் மீது நல்லெண்ணம் கொண்ட நண்பர்களின் உதவியால், கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமுகமாகத் தீரும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்களால் நன்மை  ஏற்படும். தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள்  சுலபமாகக் கிடைக்கும். அரசின் உதவிகள் கைகொடுக்கும்எதைச் செய்தாலும் சிரத்தையுடன் செய்தால் வெற்றி உண்டு. விவசாயப்பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் பெருகும்
      உத்தியோகஸ்தர்களுக்கு – வெகுநாட்களாக முயற்சித்து வந்த இடமாற்ற விருப்பம் இனிதே நிறைவேறும். பணி நிமித்தமாகப் பல பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதன் காரணமாக குடும்பத்தைப் பிரிய வேண்டிய சூழலும் உருவாகும்உதவி என்று போனால் உடன் பணிபுரிபவர்கள் ஓடோடி வந்து உதவி புரிவர். உயர் அதிகாரிகளின் ஆதரவு பணியில் ஒரு தெம்பைத் தரும்புதியதாக வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க, அலுவலக்க் கடன் உடனடியாக்க் கிடைக்கும்.                                                                                                                                                                                                      
       பெண்களுக்கு ;- பணிபுரியும் பெண்கள் தற்போது பார்க்கின்ற வேலையை விட்டுவிட்டு வேறு நல்ல வேலை தேடுவார்கள், உயர் அதிகாரிகளின் சகாயத்தால் பணிகளில் இருந்து வந்த கெடுபிடிகள் குறையும். குடும்பத்தில் பெண்கள் அடங்கிப்போவது நல்லது. கணவன்மார்களின் உதவியால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்பொன்நகை, புதிய ஆடை சேர்க்கை உண்டு. சிலருக்கு வீண்பழி, பகை ஏற்படலாம். பணிபுரியும் பெண்கள்  உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்.
        மாணவர்களுக்கு ;- உயர்கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். வேடிக்கை விளையாட்டுக்கள், வெட்டிப் பொழுது போக்குகளைத் தவிர்க்கவும். அப்போதுதான் அறிவுத்திறனும், கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும்.   மிகுந்த அக்கறையுடன் பாடங்களைப்  படித்தால் மட்டுமே தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற இயலும். அதிக மதிப்பெண்கள் பெற அயராது பாடுபடவேண்டும். தேர்வுகள் முடியும் வரை கிரிக்கெட் பார்ப்பதை ஒத்திப் போடுவது நல்லது
       அரசியல்வாதிகளுக்கு – அரசியலில் நிரந்தர நட்போ பகையோ கிடையாது. இன்றைய தோழன், நாளைய பகைவன் ஆவான். கட்சி மேலிடம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டிய சூழ்நிலை எழும். உங்கள் மேல் பொறாமை குணம் உள்ளவர்களால், உங்கள் முன்னேற்றம் பாதிக்கப்படும். தொண்டர்களின் ஆதரவு சமயத்தில் கை கொடுக்கும். பதவியைக் கைகொள்ள பணத்தையும், உழைப்பையும் அதிகமாகவே செலவழிக்க வேண்டிய நிலை உருவாகும்.
       கலைஞர்களுக்கு – புதிய ஒப்பந்தங்களால் மன மகிழ்ச்சி ஏற்பட்டாலும், பொருளாதார நிலை சீராக இருக்காது. கூட இருப்பவர்களே குழி பறிப்பர். முக்கியமான பணிகளை பிறரை நம்பி கொடுக்காமல் நீங்களே செய்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டுப் படப்பிடிப்பு காரணமாக குடும்பத்தைவிட்டு நீண்ட நாட்கள் பிரிய வேண்டிய நிலை ஏற்படும். பயணங்கள் இனிதாகும். அரசு கௌரவங்கள், பட்டம் பதவிகள் சிலரைத் தேடிவரும். உனட் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது, முன்னேற்த்துக்கு வழி வகுக்கும்.
       பரிகாரங்கள் – பௌர்ணமியன்று அம்பாளுக்கு சிகப்பு வஸ்திரம் சாத்தி, நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.

மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
       தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017  ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது  பெயர்ச்சி  தரும் பலன்களைப் பார்ப்போம்.

       கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் ருண, ரோக, சத்ரு பாவத்திலும் கேது – விரய ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான புத்திர பாவத்துக்கு  இராகுவும், மகர இராசியான 11 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சியின் காரணமாக இராகுவால் சுமாரான ஆதாயங்களைப் பெறுவீர்கள். கேதுவால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

       புத்திர பாவத்துக்கு மாறும் இராகுவால் காதல், குழந்தைகள் மூலமான சந்தோஷம் மற்றும் இலாபம் குறிகாட்டப்படுகிறது. சாதகமான, சந்தோஷமான காதல் நிலைகள் உருவாகும். பங்குச் சந்தை விவகாரங்களில் அதிக இலாபம் கிடைக்கும். கற்ற கல்வி மூலமாக ஏற்பட்ட திறனால் உருவாக்கப்பட்ட புதிய பொருள்களை விற்பனை செய்வதின் மூலமாக சம்பாதித்து செல்வம் சேர்ப்பர். சிலருக்கு வியாபாரத்தில்  எதிர்பார்த்த இலாபங்கள் கிட்டாது, வீண் விரயங்கள் ஏற்பட்டு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பொருளாதாரம் சீராக இருக்காது. சிலர் அன்றாடச் செலவுக்குக் கூட பணம் இல்லாமல் அவதிப்பட நேரும். சிலருக்கு புத்திர தோஷம் அதாவது புத்திரர்களால் தொல்லை ஏற்படும். அவர்கள் நீங்கள் சொன்ன பேச்சைக் காது கொடுத்துக் கேட்கமாட்டார்கள். கட்டுப்படவும் மாட்டார்கள். புத்தி கலக்கம் ஏற்படலாம்.   எல்லாக் காரியங்களையும், முறையாகச் செய்யா மல் , தலைகீழகாச் செய்வார்கள்தாய், தந்தையரின் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பது உங்கள் கடமையாகும். சிலருக்கு விபத்து ஏற்பட்டு அங்ககீனம் ஆகலாம். எனவே வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. ஒழுக்கம் கெட்ட பெண்களிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது.                                                                                                                                                                                                                                                  இலாப பாவத்துக்கு மாறும் கேதுவால் எல்லாவழிகளிலும் இலாபம் உண்டாகும். பயிர் விளைச்சல்கள் அதிகரிக்கும். சொன்ன சொல் தவறாதவராக விளங்குவார். எல்லாக் காரியங்களிலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். வீட்டில் குடும்பத்தார் அனைவருக்கும் தேவையான அனைத்துப் பொருட்களும் நிரம்பி வழியும். சுகபோக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இருப்பதால் ஜாதகர் எப்போதும் மகாராஜன் போல் வாழ்ந்து, மகாராஜன் என்று பெயர் எடுப்பார். பல வகையான தொழில்களில் முதலீடு செய்து வருமானத்தைப் பெருக்கி வாழ்வாங்கு வாழ்வீர்கள். சிலர் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெறுக்குவீர்கள். நீதிபதி, வக்கீல் என நீதித்துறை பணிகளில் ஈடுபடும் யோகம் ஏற்படும். உத்தியோகம் உயரும். அரசாங்கத்தால் வரும் வருமானம் பெருகும்உறவுகளிடைய பகைமை நிலவும். ஆனால் அவர்களை உங்கள் சமயோஜித புத்தியால் வெற்றி கொள்வீர்கள். அவர்களை உங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவீர்கள். மூத்த சகோதரத்திற்கு அரிஷ்டம் உண்டாகலாம். ஆனாலும் எல்லாவகையிலும் நன்மையே அடைவீர்கள். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடக்கும். பிள்ளைகளால் பெற்றவர்களுக்கு பெருமை சேரும். தொழில் துறையில் நல்ல வளர்ச்சி ஏற்படும்மனைவி மக்களுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழியும்வீட்டில் மங்கள சுபகாரியங்கள் இனிதே நடந்து மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.  பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

    குடும்பம் மற்றும் பொருளாதாரம் ;- பொருளாதார நிலைகள் சீராகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.  புதிய நுணுக்கங்களைக் கைக்கொண்டு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். ஆரோக்கியம் மேம்படும். அதிக உழைப்பின் பேரில் முயற்சிகளில் ழுழு வெற்றி கிடைக்கும். இறை பக்தியும் தரும சிந்தனையும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். சாமர்த்திய சாலியாகவும், சுயகாரியப் புலியாகவும் திகழ்வர். உறவுகள் கை கொடுக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும்.
       தொழில் மற்றும் வியாபாரம் ; வணிக சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம்மதிப்புமிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும். பழைய கடன்களைத் தீர்க்கப் புதிய கடன்கள் வாங்க நேரும்.  புதிய முதலீடுகளால் ஆதாயம் அதிகரிக்கும். தொழில் விரிவாக்கத் திட்டங்களுக்கு அரசு  உதவிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள் சுலபமாகக் கிடைக்கும். விவசாயப்பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் பெருகும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும்
        உத்தியோகஸ்தர்களுக்குவிருப்பம் இல்லாத ஊருக்கு வரும் திடீர் இடமாற்ற உத்திரவுகளால் நிதி நிலைமை தள்ளாட்டம் காணலாம். குடும்பம், பிள்ளை குட்டிகளை விட்டு பிரியும் சூழ்நிலை எழலாம். மேலதிகாரிகள் நல்ல முறையில் உங்களுக்கு ஆதரவு அளித்தாலும், அவர்கள் உதாசீனப்படுத்துவது போல் ஓர் உணர்வு ஏற்படும். உடன் பணிபுரிபவர்கள் தாங்கள் சொல்லும் ஆலோசனைகளை, அவர்கள் சொல்வது போல் அதிகாரிகளிடம் கூறி பாராட்டைப் பெறுவார்கள். எனவே, நண்பரகளாய் இருந்தாலும் ஓரளவுக்கு விலக்கியே வைத்திருப்பது நல்லது.
       பெண்களுக்கு ;-  வீட்டிற்கு ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வர். பணிபுரியும் பெண்கள் கடமை உணர்வுடன் செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். கணவன் மனைவிக்குள்,  கருத்து வேறுபாடுகள் மறைந்து நல்லுறவு அதிகரிக்கும். பணிபுரியம் பெண்களுக்குப் பெண் உயர் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம். வாகனங்களில் செல்கையில் கவனமுடன் செல்லுதல் அவசியம். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்வதில் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவர். குழந்தைகளின் அபரிமிதமான வளர்ச்சி கண்டு மனம் மகிழ்வீர்கள்.  
        மாணவர்களுக்கு -- படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும். மாணவ, மாணவிகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலர் தேவையற்ற காதல் விவகாரங்களில் ஈடுபடுவதால் சிக்கல்கள் ஏற்படலாம். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். அக்கறையுடன் படித்து அதிக மதிப்பெண்கள் பெற அயராது பாடுபடவேண்டும். வேடிக்கை விளையாட்டுக்கள், வெட்டிப் பொழுதுபோக்குகளைத் தவிர்க்கவும்.
       அரசியல்வாதிகளுக்கு மக்கள் சேவைகளை திறம்படச் செய்யும் உங்களின் மதிப்பும், மரியாதையும் கூடும். கௌரவம் மிக்க பதவிகள் தேடி வரும் என்றாலும், போட்டி, பொறாமைகளால் தடைகள், தாமதத்திற்குப் பிறகே கிடைக்கும். பொருளாதர நிலை சிறப்பாக இருக்குமாதலால் தொண்டர்களின் தேவைகளுக்கு தாராளமாகச் செலவு செய்தால் அவர்களின் ஆதரவு நிலைத்து நிற்கும். முடக்கப்பட்ட கட்சி சின்னங்கள் திரும்பப் பெரும் நடவடிக்கைகளை எடுக்கலாம். அரசியலில் நிலைத்து நிற்க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது நல்லது.
       கலைஞர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான அரிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். அதன் காரணமாக நல்ல நல்ல வாயப்புகள் தேடி வரக்கூடிய யோகம் உண்டாகும். தங்கள் சிறப்பான நடிப்புக்கான அரசாங்க, தனியார விருதுகள் கிடைத்து உங்கள் புகழ் எட்டுத் திக்கும் பரவும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களின் போது போக்குவரத்து இடையூறுகள் ஏற்படலாம். புதிய விலை உயர்ந்த அதி நவீன மகிழ் ஊர்திகளை வாங்கும் யோகம் ஏற்படும். ஆயினும், வாகனப் பயணங்களின் போது எச்சரிக்கையுடன் வாகனத்தை ஓட்டுதல் அவசியம்.
       பரிகாரங்கள் – தேய்பிறை அஷ்டமி தோறும் காலபைரவரை வணங்கி, வழிபாடு செய்வது நல்லது. சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.