Friday, December 9, 2016

தனயோகம்.

தனயோகம்.

       பல்வேறு பெயர்களில் உலா வரும் இராஜயோகங்களுக்கான இணைவுகள் பாக்கியாதிபதி மற்றும் கர்மாதிபதி ஆகியோரால் அளிக்கப்பட்டு, செல்வமும், சக்தியும் அதிகரிக்கிறது. பொதுவாக்க் கீழ்கண்ட பாவாதிபதிகளின் தொடர்புகளால் தனயோகங்களால் ஏற்படுகிறதுஅவை இலக்னம்,1, 2, தனபாவம், 5, பூர்வ புண்ணிய ஸ்தானம், 9 – பாக்கிய பாவம் மற்றும் 11. இலாப்பாவம் ஆகியவை ஆகும். திருக் பாவாதிபதிகள் ஒருவருக்கொருவர் தொடர்புறும் போது யோகங்கள் ஏற்படுகின்றன. விபரீத ராஜயோகங்கள் இந்த திருக் பாவ தொடர்புகளால் ஏற்படுகிறது

       ஜெய்மினி சூத்திரத்தில் ஆரூட இராசி மற்றும் ஆத்மகாரக இராசிகளால் யோகங்கள் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

       சந்திரனால் அதியோகம், வசுமதி யோகம் ஆகியவை ஏற்படுகின்றன. சுக்கிரன் மற்றும் குருவின், சந்திரனுடனான இணைவுகளும் யோகம் அளிக்கின்றன. அதிசக்தி மிக்க செல்வ நிலைக்கான யோகங்கள். பலமான வீட்டில், பலமான கிரகங்களின் பார்வைபடும் போது இராகு, கேதுக்களும் இராஜயோகத்தை  ஏற்படுத்துகின்றன. இது தவிர ஹேமதுரும யோகம் போன்ற தரித்திர யோகமும் சந்திரனால் ஏற்படுகிறது.

       ஒரு ஜாதகத்தில் இலக்னம், இலக்னாதிபதி, சூரிய, சந்திரர்கள், முக்கியமாக பாக்கியதிபதி ஆகியோர் நல்ல நிலையில் அமர்ந்து இருந்தால், நல் அதிர்ஷ்டம் தரக்கூடிய பல யோகங்கள் சிறந்த பலன்களை அளிக்கின்றன. இந்த யோகங்களின் அளவு இந்தக் காரணிகளை ஒத்தே கூடுதலாகவோ, குறைவாகவோ ஏற்படுகின்றனஇவைகளின் பலத்தைப்பற்றி பார்க்கும் போது கிரகத்தின் பலம், ராசியில் அதன் நிலை, அங்கே அதன் மதிப்பு ஆகியவையும், இராசி மற்றும் நவாம்சத்தில் அவற்றிற்கு இடம் கொடுத்தவனின் பலமும் பார்க்கப்பட வேண்டும். மேலும் செல்வ நிலையைப்பற்றி ஆராயும் போது, தசாம்ச சக்கரமும், சதுர்தாம்ச சக்கிர பலன்களும் ஆராயப்பட வேண்டும்.

       ஜாதகரின் செல்வ நிலையைப்பற்றி ஆராயும் போதும், ஏதாவது அல்லது பலயோகங்களின் பலன்களை ஆராயும் போதும், அதற்குக் காரணியான கிரகங்களின் நேரடித் தொடர்புகளையும் பார்க்கவேண்டும். ஜாதகரின் முழுமையான செல்வநிலை 2 ஆம் பாவத்தால் குறிகாட்டப்படுகின்றன. அதற்குத் திரிகோண பாவங்களும், பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு 2 ஆம் பாவமான  6 ஆம் பாவமும், பாக்கிய பாவத்துக்கு 2 ஆம் வீடான 10 ஆம் பாவம் மற்றும் கர்ம பாவத்துக்கு 2 ஆம் பாவமான இலாப பாவமான 11 ஆம் பாவம் ஆகியவை மிக முக்கியமான பாவங்களாகும். சுக்கிரன், குரு ஆகியோர் செல்வத்துக்குக் காரகர்கள் ஆகிறார்கள். எனவே, இவர்களின் நிலையும் இலக்னத்தில் இருந்தும், சந்திரா இலக்னத்தில் இருந்தும் தீவிரமாக ஆராயப்பட வேண்டும்.  

       மேற்சொன்ன பாவங்களின் பலம் மிக்க அதிபதிகள், அவர்களின் நன்நிலை, அவைகளின் சுபர்களுடனான சிறப்பான தொடர்புகள் மற்றும் நன்நிலை ஆகியவை சீரான மற்றும் அதிகரிகக் கூடிய செல்வநிலைக்குக் காரணமாகின்றன. இவற்றில் இயற்கை மற்றும் தற்காலிக சுபர்களின்  இருப்பு  கூடுதல் சிறப்பாகும். இவற்றில் அசுபர்களின் இருப்பு நிலையும் ஆராயப்பட வேண்டும். ஏனெனில் ஒரு ஜாதகரின் பூர்வ புண்ணியம், பாக்கிய ஸ்தானங்களை 5, 9 ஆம் வீடுகள் குறிகாட்டுவதால், இவ்வீடுகள், அதிபதிகளுக்குப் பாப கிரகங்களால்  ஏற்படும் பாதிப்பு செல்வ நிலையைப் பொறுத்தவரை ஜாதகருக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

       இந்த பாவாதிபதிகள் தங்கள் ஆட்சி, உச்ச வீட்டிலோ, கேந்திர, திரிகோணங்களிலோ இடம்பெறும் போது ஜாதகரின் அதிர்ஷ்ட நிலைகளை மிகவும் உயர்த்திவிடுகிறதுஅதேபோல், இந்த பாவாதிபதிகள் பாதிப்பு அடைந்திருந்தால், ஜாதகரின் செல்வ நிலையும் பாதிப்படையும். நீசமடைந்த பூர்வபுண்யாதிபதி, பாக்கியாதிபதி, நீசபங்கம் ஆகாவிடில் பாதிப்பைத் தருவார்.

       4 ஆம் பாவம் மிகவும் முக்கிய பாவமாகும். இந்த பாவம் ஜாதகரிடம் உள்ள அல்லது அடையப்போகிற பூமி, அசையும் மற்றும் அசையா  சொத்துக்களைக் குறிப்பதாகும்.சுகாதிபதி, சுகபாத்தில் அல்லது எந்தவொரு நல்ல பாவத்தில் இருந்தாலோ அல்லது சுபர் அந்த பாவத்தில் இருந்தாலோ, பார்த்தாலோ ஜாதகர் வாகனம், பூமி ஆகியவற்றைப் பெற ஆசிர்வதிக்கப் பட்டவராவார். எவ்வளவு சொத்துக்களை உடையவராய் இருப்பார் என்பது கிரகங்களின் வலிமையைப் பொருத்தே அமையும்.

       10 ஆம் பாவம் என்பது கர்ம பாவம் ஆகும். இதை ஆராயும் போது அதன் அதிபதி, 10 ஆம் இடத்தைப் பார்க்கும், இணையும் கிரகங்கள் மேலும் 10 ஆம் இடத்துக்குக் காரகர்கள் ஆன குரு, சூரியன், புதன் மற்றும் சனி ஆகியோரும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இவைகளின் மூலமாகவே  ஜாதகரின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான சம்பாத்தியத்தை அவர் எவ்வழியில் பெறுகிறார், சொத்துசுகம் என்ன ? - என்பவற்றை ஆராயலாம். ஆயினும் எதற்குமே கிரகங்களின், பாவங்களின் பலமே இவற்றை நிர்ணயிக்கும்.

       யாருக்கு பரம்பரைச் சொத்துக்கள் கிடைக்கும் ? எதிர்பாராத வரவுகள் எவர்க்குக் கிடைக்கும் ? லாட்டரி, பங்குச்சந்தை மூலமான வருமானங்கள் எவருக்குக் கிடைக்கும் ?

       அன்றன்றைக்கான வருமானத்துக்கு, பொருள் வரவு அல்லது தனவரவுக்கு 2 மற்றும் 11 ஆம் இடங்கள் பொறுப்பாகின்றன. அதற்கு எதிர் பாவங்களான 8 ( மரபுவழி சொத்து ) மற்றும் 5 ஆம் ( பூர்வபுண்ணியம் ) பாவம் ஆகியவை உழைப்பால் கஷ்டப்பட்டு சம்பாதிக்கப்படாத வருமானத்தைக் குறிக்கின்றனஇந்த பாவங்களை ஆராயும் பொது அவற்றின் காரகர்களான குரு மற்றும் சனி, அவர்களின் தகுதி ஆகியவையும் கருத்தில் கொள்ளவேண்டும். இவர்கள் தங்கள் நல்ல பார்வைகள் மூலமாகத் தொடர்பு கொள்ளும்போது, அளவுக்கு அதிகமான உழைத்து சம்பாதிக்கப்படாத செல்வத்தை குறிகாட்டுகின்றன. அறுங்கோணப் பகுதி பார்வை (செமிசெக்ஸ்டைல்ஸ்) 30° , அறுங்கோணப்பார்வை (செக்ஸ்டைல்ஸ்) 60°, முக்கோணப்பார்வை ( ட்ரைன் ) 120°

        பொதுவாக 10 மற்றும் 11 ஆம் பாவங்களின் நட்சத்திராதிபதி நிற்கும் கிரகங்கள், லக்னப் புள்ளியின் நட்சத்திராதிபதி நிற்கும் கிரகங்களே செல்வ நிலை உயரக் காரணமாகிறார்கள். 10, 11 மற்றும் இலக்னத்தில் நிற்கும் கிரகங்களின் நட்சத்திரத்தில் இடம்பெறும் கிரகங்களும், யோக காரகனின் நட்சத்திரத்தில் இடம் பெறும் கிரகங்களும்  செல்வத்தை அள்ளித் தருகின்றன. மாறாக 8 ஆம் அதிபதியின் நட்சத்திரத்தில் இருக்கும் கிரகங்கள் செல்வநிலையை அழிக்கவல்லனவாகும்.
      
லக்//
சனி

சுக்,செவ்()
ராகு
குரு
சூரி






இராசி
22/6/1966
01-18 (நள்ளிரவு)காலை
பிக்கானேர்
புத
சந்
குரு

நவாம்சம்
புத
கேது


லக்//
சுக்,ராகு
செவ்
சனி

கேது



சந்
சூரி



சனி தசா இருப்பு 0 – 3 மா – 12 நாள்.

       இந்த ஜாதகர் 1990 இல் வட இந்தியாவில் இருந்து, பிழைப்புத் தேடி சென்னைக்குத் தன் பையில் 500 / ரூபாயுடன் வந்தார். அப்போது இவருக்கு சுக்கிர திசை நடந்தது. மூன்று ஆண்டுகளுக்குள்ளாக ரியல் எஸ்டேட் தொழில் மூலமாக 40 லட்சத்திற்கும் மேலாகச் சம்பாதித்தார். சுக்கிரன், சந்திரா இலக்னத்தில் இருந்து இலாப பாவத்தில் அமர்ந்துள்ளார். இவருக்கு 5 ஆம் அதிபதி சந்திரன், 8 ஆம் அதிபதி சுக்கிரன் ஆவர். இங்கு சனியானவர் அறுங்கோணப் பார்வையால் சுக்கிரனைப் பார்க்கிறார். சுக்கிரன் சந்திரனை அறுங்கோணப் பார்வையால் தொடர்பு கொள்ளுகிறார். குரு , சந்திரனையும், சுக்கிரனையும் அறுங்கோணப் பகுதி பார்வையால் பார்க்கிறார். இந்த நிலைகளே இவரின் அளவற்ற வருமானத்திற்குக் காரணமானது.

முகேஷ் அம்பானியின் ஜாதகம் --



சுக்,சூரி
கேது,புத
செவ்





சூரி
ராகு
சுக்,லக்///

இராசி
19/4/1957
12 N 48
45 E 00



நவாம்சம்
சந்

குரு
()

சனி –()

சந்
சனி()
ராகு
லக்//

குரு-()
புத,கேது

செவ்

       இவரின் 5 ஆம் அதிபதி குரு, 8 ஆம் அதிபதி புதன் ஆவர். புதன் தனது முக்கோண பார்வையால் குருவை தொடர்பு கொள்கிறார். நடப்பு இராகு தசை. இராகு 12 இல், ஆனால் சந்திரனில் இருந்து 11 ஆம் இடத்திலும் உள்ளார். இராகு விசாக நட்சத்திரத்தில் உள்ளார். நட்சத்திராதிபதி குரு 10 ஆம் வீட்டிலுள்ளார். எனவே, இந்த திசை அவருக்கு அசாத்தியமான வளர்ச்சியைத் தந்தது.

       எனவே, நண்பர்களே! தனயோகத்துக்கான காரணிகளை உதாரண ஜாதகங்களோடு ஆராய்ந்தது, பயனுள்ளதாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன். வாழ்க வளமுடன்.





Wednesday, August 24, 2016

மேஷம் இலக்னமாகி


மேஷம் இலக்னமாகி 



மேஷம் இலக்னமாகி 2 ஆம் இடத்தில் சூரியன் இடம்பெற

       ஜாதகருக்கு முதலீடுகளின் மூலமாக இலாபம் கிடைக்கும். இன்பம் மற்றும் குழந்தைகள், ஜாதகரின் செல்வாக்கால் குழந்தைகள் இலாகம் அடைதல். பாதிப்படைந்த சூரியன் ஆனால் சூதாட்டத்தினால் இழப்புகள் ஏற்படும். இளைஞர்களால் இன்பம் ஏற்படும்.

மேஷம் இலக்னமாகி 2 ஆம் இடத்தில் சந்திரன் இடம்பெற

       இனிமையானவர், மென்மையாகப் பேசக்கூடியவர். பூமி மற்றும் சொத்து விவகாரங்களில் இலாபம் ஏற்படும். வெளிநாட்டு மொழி அறிவு ஏற்படும். பயணங்கள் மூலமாக வியாபாரத்திலும், மற்ற நுண்கலைகளிலும் வெற்றிமேல் வெற்றி வரும்.

மேஷம் இலக்னமாகி 2 ஆம் இடத்தில் செவ்வாய் இடம்பெற

       இலக்னம் மற்றும் ஆயுள் பாவத்திற்கு அதிபதியான செவ்வாய் தனபாவத்தில் அமர, ஆரோக்கியக் குறைவு ஏற்படும் அல்லது மழலைப் பருவத்திலேயே மரணம் நிகழலாம். ஆயினும் தப்பித்தால் நீண்ட ஆயுள் உண்டு. புகழில் குறைவும், அவமரியாதைகளும் ஏற்படும். தொழில் முறை நன்மைகள் ஏற்படும்.மறைந்தவர்கள் மூலமான நன்மைகள் ஏற்படும். ஆனால், பலம் குறைந்த நிலையானால் இழப்புகளும், வாழ்க்கையில் இன்னல்களும் ஏற்படும்.

மேஷம் இலக்னமாகி 2 ஆம் இடத்தில் புதன் இடம்பெற

       கல்வி மூலமான, சிறு பயணங்கள், எழுதுதல், இசைத்தல் ஆகியவற்றின் மூலமான ஆதாயங்கள் கிடைக்கும். மேலும், சேவைகள், பணியாட்கள் மற்றும் சிறு மிருகங்கள் மூலமாகவும் இலாபங்கள் கிடைக்கும். பாதிப்படைந்த புதனானால், அரசு மூலமாக இழப்புகளும், வாழ்க்கையின் மத்திய பகுதியில் எதிரிகள் மூலமாக இழப்புகளும் ஏற்படும். பண விஷயத்தில் உறவுகளால் தொல்லைகளும் ஏற்படும். நோயுற்ற உடல், வேலையாட்கள் மற்றும் மிருகங்கள் மூலமான இழப்புகளும் ஏற்படும்.

மேஷம் இலக்னமாகி 2 ஆம் இடத்தில் குரு இடம்பெற

       வெளிநாட்டு வணிகம், விஞ்ஞானம், கற்றல், பதிப்பித்தல் துறை, பயணம், புதியன கண்டு பிடித்தல், வங்கிப்பணி ஆகியவற்றால் இலாபங்கள் ஏற்படும். அனைவருடனும் நன்கு பழகுதல், மரியாதை பெறல், மத ஆர்வம், நாட்டுப்பற்று ஆகிய குணங்களை  உடைத்தாயிருப்பார். மறைபொருள், மாந்திரீகம், இரகசிய திட்டங்கள் மூலமாகவும் ஆதாயங்கள் கிடைக்கும். குரு பாதிப்பு அடைந்திருந்தால், எதிரிகள் மூலமாக பண இழப்பு, பொதுவாக அதிர்ஷ்டமற்ற நிலையும் ஏற்படும்.

மேஷம் இலக்னமாகி 2 ஆம் இடத்தில் சுக்கிரன் இடம்பெற

       தனக்கே உரிய தனித் திறமைகள், சாமர்த்தியங்கள், தொழில் மற்றும் திருமணம் மூலமாக ஆதாயங்களை அடைவர். சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்வார். பாதிப்படைந்த சுக்கிரனாகில் கூட்டாளி, பங்குதாரர் மூலமாகவும், வழக்கு விவகாரங்கள், ஒப்பந்தங்கள், பெண்கள் மூலமாகவும் இழப்புகள் ஏற்படும். மனைவியோ, கூட்டாளியோ இறக்க நேரலாம்.


மேஷம் இலக்னமாகி 2 ஆம் இடத்தில் சனி இடம்பெற

       தொழில், வணிகம், பணி அல்லது அரசு அலுவலகம் ஆகியவற்றின் மூலமாக ஆதாயம் அடைவர். தெரிந்தவர்கள், நண்பர்கள் மூலமாகவும் இலாபங்கள் அடைவர். சுய முயற்சி மற்றும் சுயமாக ஒன்றை உருவாக்குதல் மூலமாக வாழ்க்கையில் முன்னேறுவர். பாதிப்படைந்த சனி எனில் மேற் சொன்னவைகளின் மூலமாக இழப்புகள் இருக்கும்.

 மேஷம் இலக்னமாகி 2 ஆம் இடத்தில் இராகு இடம்பெற

       நிச்சியமற்ற, நம்பிக்கையற்ற, சந்தேகப்படும்படியான, பொய்யான, கபடமான, வஞ்சகமான சொற்களை உடையவர், பேச்சை உடையவர். அன்பான, மிருதுவான இதயம் உடையவர். அரசாங்கம் மூலமான ஆதாயங்கள் ஏற்படும். சந்தோஷமுடையவர். கடுங்கோபமும் உடையவர். வாய் அல்லது முகத்தில் ரோகம் இருக்கும்.

மேஷம் இலக்னமாகி 2 ஆம் இடத்தில் கேது இடம்பெற

       இழிவான, அற்பமான, துஷ்டத்தனமான பேச்சை உடையவர். கபடமான, வஞ்சனையான, கெட்ட குணம் உடையவர். கல்வி கற்காத, பணம் இல்லாதவராக இருப்பார். எப்போதும் மற்றவர்கள் மேஜையில் அமர்ந்து உணவு அருந்தக்கூடிய குணம் உடையவர்.

       


Monday, August 8, 2016

மேஷம் இலக்னமாகி - அதில் உள்ள கிரக பலன்கள்.

இலக்ன பலன்கள்.


மேஷம்


இலக்னத்தில் சூரியன் -
             உச்சம் பெற்ற சூரியன் சொத்துக்களையும், நல் அதிர்ஷ்டத்தையும், கௌரவத்தையும், வாழ்க்கையில் நல்ல உயர்வான நிலையையும் தரும். மதிப்பு, மரியாதை மிக்க வாழ்க்கை அமைவதற்கான சக்தியையும் அளிக்கிறான். குழந்தைகள் மூலமான நன்மைகள் ஏற்படும். புத்திசாலித்தானம் மிக்கவராக, கற்றறிந்தவராக ஆக்கிவிடுகிறது. குடியிருப்பு மாற்றங்கள் ஏற்படும். எதிரிகளை வெல்லக் கூடிய அதிக சக்தியை அளிக்கிறான். வாழ்க்கையின் மத்திய பகுதியில் சில இழப்புகளையும், செல்வ நிலை, தொழில் நிலை, பதவி ஆகியவற்றில் திடீர் சரிவுகளையும் தரும். ஜாதகர் மற்றவர்களுக்கு உதவிகரமாக இருப்பார். சீரற்ற இதயத் துடிப்பினால், இரத்த ஓட்டமும் சீரற்றதாக இருக்கும். பித்த ரோகமும் இருக்கும்.
மேஷம் இலக்னமாகி சந்திரன் இருக்க --


              மேஷ இலக்னத்தில் சந்திரன் ஜாதகரை மிக்க அதிர்ஷ்டசாலியாகவும், சொத்துக்களை உடையவராகவும், மதிப்புக்கு உரியராகவும், மரியாதை, கௌரவத்துக்கு உரியராகவும் நிலையை உயர்த்திவிடுகிறது. நன்கு கற்றவராகவும், குழந்தைகளால் நன்மை அடைபவராகவும் ஆக்கிவிடுகிறது. இவருக்கு ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகம் இருக்கும். மத்திய வயதில் சூரியனைப் போன்றே இவரும் நேர் எதிர் மாற்றங்களைத் தருகிறார். வெளிநாட்டுப் பயணம், கண்கள் பாதிப்பு, உறவுகளின் மூலமான இழப்பு, பொதுவாக தாய்வழி உறவுகள் மூலமான இழப்புகள் ஏற்படும். வாழ்க்கையில் எதிர்பாலரால் ஏற்படும் தாக்கம் அதிகமான இருக்கும்.

மேஷம் இலக்னமாகி செவ்வாய் இருக்க
       மேஷ இலக்னத்தில் செவ்வாய் இருக்க நல்ல ஆளுமையுடைய நிர்வாகியாக இருப்பார். நிலப் பிரபு, சொத்துக்களை உடையவர், வாழ்க்கையில் முழு வெற்றி அடைவார். அரசாலும் மக்களாலும் மதிக்கப்படுவார். நல்ல பேச்சாளர்களாகவும், சிறந்த ஆலோசகராகவும் இருப்பர். உடலில் காய அடையாளம் அல்லது மச்சம் இருக்கும்.

மேஷம் இலக்னமாகி புதன் இருக்க
       மேஷ இலக்னத்தில் புதன் இருக்க ஆரோக்கியக் குறைவு ஏற்படும். துர்குணம் உடையவர், சரியான சாப்பாட்டு இராமனாக இருப்பார். பொய்யர், சண்டைக்காரர்,   ஆனால், ஜோதிடம் மற்றும் மறைபொருள் விஞ்ஞானத்தில் ஆர்வம் உடையவராக இருப்பர். இவரது மனைவி பேரழிகியாக இருக்கமாட்டார். குணமும் கேள்விக்கு உரியதாவே இருக்கும். பூர்வீக சொத்துக்களை அழித்துவிடுவார்,

மேஷம் இலக்னமாகி குரு இருக்க        
    மேஷ இலக்னத்தில் குரு இருக்க மதத்தின் மீதும், மத குவின் மீதும் மரியாதை உடையவராக இருப்பார். கற்றவர், அனைவராலும் மதிக்கப்படுபவர், அறிவாளி, அரசில் உயர்பதவிகள் வைக்கக் கூடிய தகுதி உடையவர். உண்மையானவர். குணக்குன்றாய் இருப்பார். இரக்க முணமும் உடையவர். மக்களுக்காகப் பொதுச் சேவையில் ஈடுபாடு உடையவர்.                                                                                                                                                     மேஷம் இலக்னமாகி சுக்கிரன் இருக்க

       வாகன யோகம், சொத்துக்கள் உடையவர். இனிய பேச்சு உடையவர். எதிர் பாலரிடம் உறவுகள், அதிக பெண்குழந்தைகள் உடையவர். பயணங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். மத்திம வாழ்க்கையில் இந்த நிலைகள் தலைகீழாக மாறலாம். பணவிஷயமான வழக்கு விவகாரங்கள் ஏற்படலாம். கண்ணில் பிரச்சனைகள் ஏற்படும்.

மேஷம் இலக்னமாகி சனி இருக்க

மேஷத்தில் சனி நீசமாகி ஜாதகரின் வாழ்க்கையை கஷ்டம் நிறைந்ததாகச் செய்கிறார். வெற்றிகள் கிடைக்காத நம்பிக்கைகள், மனைவியிடம் கருத்து வேறுபாடுகள். பூர்வீக சொத்துக்களை அழித்துவிடுவார். தூர பயணங்கள் ஏற்படும். பொறாமை குணம் உடையவராய் இருப்பார். உறவுகளுடனான உறவு சுமுகமானதாக இருக்காது. சனி, ஜாதகரை கர்வம் மிக்கவராகவும், நம்பிக்கை அற்றவராகவும், தாயை எதிர்ப்பவராகவும் ஆக்கிவிடுகிறது.

மேஷம் இலக்னமாகி இராகு அல்லது கேது இருக்க


மேஷ இலக்னத்தில் இராகு அல்லது கேது அசுப கிரக தொடர்பு இன்றி இருக்க ஜாதகர் மரியாதை, கௌரவம் மிக்கவராகவும், சொத்துக்களை உடையவராகவும், வாழ்க்கையிலும், இராணுவத்திலும் உயர்பதவி வகிப்பவராகவும் இருக்க ஆசிர்வதிக்கப் படுகிறார். தைரியமும், ஆணையிடும் ஆற்றலும், ஆளுமையும் உடையவராகிறார். வாகனங்களும், அதிர்ஷ்டங்களும் தொடர்ந்து வருகின்றன. ஆனால், பார்வையாலோ, சேர்க்கையாலோ அசுப கிரக தொடர்பு ஏற்பட்டால் இதற்கு எதிர் மாறான பலன்களே ஏற்படும்.