Sunday, April 3, 2016

பரிகாரத்துக்கான பழமையான நூல் “லால் கிதாப்”




பரிகாரத்துக்கான பழமையான நூல்லால் கிதாப்”
       லால் கிதாப் - என்பது ஒரு பண்டையகாலத்து, மிகவும் சக்தி வாய்ந்த ஜோதிட பரிகார வழி முறையாகும். இந்த பரிகாரத்தின் பலனின் முடிவுகளை, அது செய்யப்படுகிற 45 நாட்களில், ஒவ்வொரு நாளும் உணரமுடியும். இது இராவணனால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஹோமங்கள் போன்ற மத சம்பிரதாயங்களை விரும்பாத இராவணன், தனது பிரஜைகளின் கஷ்டங்களைக் கண்டு, அவர்கள் செய்கின்ற பரிகார பூஜைகள் சாதாரணமானதாகவும், உடனடியாக நடத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என எண்ணினார். அதன் பலனே இந்த எளிய முறை பரிகாரங்கள்.
       1930 வருடத்தில், பஞ்சாபில், முதல் முதலாக இராணுவ அதிகாரி ஒருவரால் லால்கிதாப் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் காலங்களில் பரிகாரத்துக்கான புத்தகம் என்ற அர்த்த்துடன்டோட்காஸ்’ – என அழைக்கப்பட்டது. இந்த பரிகாரங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே செய்யப்பட்டு, நல்லபலன் கிடைத்தவுடன் நிறுத்தப்படவேண்டும். அதன் பிறகு அதில் அடங்கியுள்ள விஞ்ஞானபூர்வமான விஷயங்களை அறிந்து, லால் கிதாப் என பெயரிடப்பட்டது.  “லால்”என்றால் சிகப்பு வர்ணம்,  “கிதாப்”என்றால் புத்தகம் என்பதாகும். இரத்தத்தின் நிறம்சிகப்பு, நமது உடலில்  ஓடக்கூடியது, நமது முன்ஜென்ம வினைகளையும், முன்னோர்களின் செயல்களுக்கும் தொடர்புறுத்துவது இரத்தம்தானே ? இதுவே. தற்போது நம் மருத்துவத் துறையிலும் நோயைக் கண்டுபிடிக்க முதலில் பரிசோதிக்கப்படுவதும் ஆகும்.  எனவே, அதன் நிறமே இந்த ஜோதிடமுறைக்கு வைக்கப்பட்டுள்ளது.
       “லால் கிதாப்” பரிகாரங்களுக்கு 9 கிரகங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த முறையின் முக்கிய குறிக்கோளே பலன் சொல்வதைவிட, பரிகாரம் உரைப்பதுதான்ஏனேனில், கஷ்டங்களைவிட, கஷ்டத்துக்கு உரிய பரிகாரமே முக்கியம் எனக் கருதி பரிகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே, வரப்போகிற பலனைவிட, இப்போதைய கஷ்டங்கள் தீர நிச்சியமான, எளிமையான பரிகாரங்கள் லால் கிதா” ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. உலக துன்பங்களை கழைவதற்கு முன், தனிமனிதனுக்கு உள்ள முன்னோர்களால் ஏற்பட்ட தோஷங்கள், இதர தோஷங்களுக்கான பரிகாரங்கள்  சொல்லப்பட்டுள்ளன. இத் தோஷங்கள் ஜாதகரால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டியவை ஆகும். ஒவ்வொருவரும், தங்கள் முன்னேற்றங்களுக்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் இதுபோன்ற ரிண பித்ரு எனப்படும் முன்னோர் செய்த பாவங்களுக்குப் பரிகாரங்கள் செய்யவேண்டும். தொழில் முன்னேற்றமோ, திருமணத்தடைகளோ, புத்திர பாக்கியம் இன்மையோ, பயணத்தடை, பணநஷ்டங்கள் என அனைத்து முன்னேற்றத் தடைகளுக்கும் உரிய பரிகாரங்கள் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளனஅவை நம்மால் செய்யப்பட்ட முன்வினையால் அல்லது நாம் செய்யாத, முன்னோர்களால் செய்யப்பட்ட பாவங்கள், அந்த குடும்பத்தில் பிறந்ததின் காரணமாக, இக் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதுள்ளது.
       “லால் கிதா” ப்பில் வேறு மாயமந்திரங்களோ, தந்திரங்களோ இல்லை. தாயித்தோ, எந்திரங்களோ, தெய்வ விக்ர பரிகாரங்களோ எதுவும் கிடையாது. அதில் சொல்லப்பட்டுள்ளவை, மிக எளிமையான, சுலபமான, வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே செய்யும் அளவுக்கு உள்ள பரிகாரகங்களே ஆகும்.
       அதில், பொய் சொல்லாதே, கடவுளிடம் நம்பிக்கை வை, முழுமையான அர்ப்பணிப்புடன் தெய்வத்திடம் பக்தி செலுத்து ஆகிய சீரிய கருத்துக்கள்   குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், மதுக் குடிக்காதே, மாமிசம் உண்ணாதே ( அசைவ பழக்கம் இருந்தாலன்றி ) கூட்டுக் குடும்பத்தில் வாழ முற்படு, மூக்கையும், காதுகளையும் கூர்மையாக வை, பெண் குழந்தைகளை வழிபடு, பெண்கள், விதவைகளுக்கு உரிய மரியாதை கொடு, இவர்களுக்கு வேண்டியதை தானமாகக் கொடு, எவரிடம் இருந்தும் இலவசமாக எதையும் பெற விரும்பாதே, பசுக்களுக்கு காக்கை மற்றும் நாய்க்கு உணவளித்துப் பேணு, பற்களை சுத்தமாக வைத்துக்கொள் என்றும், இது போன்ற, தற்கால உலக வாழ்க்கைக்குத் தேவையான எண்ணற்ற நல்ல புத்திமதிகளைச் சொல்கிறது.
     “லால் கிதாப்” ஜோதிடமுறை பலர் குறிப்பிடுவதுபோல் கற்றுக் கொள்ள கஷ்டமான வழிமுறையா ? – என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். இது ஓர் எளிதான முறை என்று இதில் அதிக திறமைபெற்ற ஜோதிடர், கர்நாடகா, ஹூப்ளியைச் சேர்ந்த திரு. விஜய் வீர் குறிப்பிடுகிறார். “லால் கிதாப்” முறைப்படி, தொடக்கத்தில் ஜாதகம் அமைப்பதில் சிறு குழப்பங்கள் எழுந்தாலும், இது வேதஜோதிடத்தை விட எளிமையானதே.
     “லால் கிதாப்”- ஜாதகம், நமது கையிலுள்ள ரேகைகளை வைத்து எழுதப்படுவதாகும். உள்ளங் கையில் உள்ள ரேகைகள், மேடுகள், சதுரங்கள், விடுபட்ட வரிகள், விரல் மேடுகள் அனைத்தும், ஒரு கிரகத்தைக் குறிக்கின்றன. ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை அறிந்து அவற்றின் நிலைகளை வைத்து, சரியான முறையில் ஜாதகம் எழுதப் படவேண்டும். அதிகம் நேரத்தை எடுத்துக் கொள்வதும், மனம் ஒன்றி ஈடுபட வேண்டியதுமான கைரேகைக் கலையில் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
       இதில் குழப்பங்களைத் தவிர்க்க, ஜாதகரின் ஜாதகத்திலேயே சில மாறுதல்களை கைரேகைப்படி செய்து கொள்ளலாம். பூமியில் கிடைகக் கூடிய பொருட்களைக் கொண்டே லால் கிதாப்” பரிகாரங்களை செய்வது எளிது. தினமும் நம் வாழ்க்கையில் சம்பந்தப்படக் கூடிய, கிரகங்களுக்குத் தொடர்புடைய இந்த பொருட்களைப் பற்றி முழுமையான அறிவு நமக்கு வேண்டும். உதாரணமாககிரகங்களுக்கான மரங்கள், நீர், கற்கள், உறவுகள், நண்பர்கள், வீடுகள், விலங்குகள், வாகனங்கள், வழிபாட்டுத் தலங்கள், வண்ணங்கள் போன்றவை ஆகும்.
       பிரபஞ்சத்தை ஆளும் ஈஸ்வரனின் கட்டளையை ஏற்று நடக்கும் கிரகங்கள், மனித வாழ்க்கையைக் கட்டுப்படுத்தக் கூடிய சக்தியைப் பெற்றுள்ளன. செவ்வாய்பூமி சம்பந்தமானவற்றையும், சுக்கிரன்பொருள், குருபக்தி மார்க்கம், புதன்திறந்த மனம், பரந்த மனப்பான்மை, காடுகள், சனிஇருட்டு, இராகுகேதுக்கள் சனியின் காரியதரிசிகளாகவும் செயல்படுகிறார்கள். இந்த கிரகங்களே நமது விதியை நிர்ணயிக்கும் முக்கிய குறிகாட்டிகளாக அமைகின்றன. பூமியில் தங்களுக்கு உரிய பொருட்கள் மூலமாக, அனைத்தையும் மேற்பார்வை இடுபவர்களும் இவர்களே ஆகும்.
        ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறப்பதன் காரணமாக, அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் செய்த பாவங்கள், தோஷங்களாக ஒரு ஜாதகருக்கு, தற்காலிக விதியாக அமைந்து விடுகிறது. இந்த தோஷமானது, முற்பிறவியில் அவரால் செய்யப்படாத வினையாகக் கூட இருக்கலாம். இதை, ஜாதகத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். “நிச்சிய கர்மா”எனப்படும் நிலையான விதி, இவரால் முன் ஜென்மத்தில் நிகழ்தப்பட்டதாகும். இதை எவராலும் மாற்றவோ, திருத்தவோ முடியாதுஒரு ஜாதகத்தில் இவற்றை ஆராயும் போது, விதிப்படி எவ்வகை வினைகள் செய்யப்பட்டுள்ளன, அதற்கு என்ன  பரிகாரம் செய்யலாம் என்பதைப் பரிந்துரைக்கலாம்.
       இதை பரிசீலிக்கும் போது, “லால்கிதாப்” முறையில், பாவங்களே பிரதான இடம் பெறுகின்றன, இராசிகள் அல்ல என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த இலக்னமானாலும் மேஷ லக்ன பாவம் என்று மட்டுமே அழைக்கப்படும். மேஷ இராசி எனக் கூறக்கூடாது.
       20 டிசம்பர் 1978 அன்று  இரவு 10 மணி அளவில் பிறந்த ஜாதகரின் ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாமிடத்தில் சந்திரன், இராகு, சனி ஆகியோர் இணைவு பெற்று அமர்ந்துள்ளனர். பொதுவாக, 2 மற்றும் 7 ஆம் அதிபதி, எப்போதுமே சுக்கிரனாகும். அவர் 4 ஆம் பாவத்தில் உள்ளார். 2 பாவத்தில் சுக்கிரனுக்குப் பகைவர்களான இராகு, சந்திரன் ஆகியோர் சுக்கிரனைக் கொல்கிறார்கள். 4 ஆம் அதிபதி சந்திரன் 2 இல் அமர்ந்து இராகு, சனியால் பாதிப்பு அடைவதால், இரு பெண் கிரகங்களின் பாதிப்பு நிலை பெண்ணால் ஏற்பட்ட தோஷத்தைக் குறிகாட்டுகிறது என உறுதி செய்யலாம்.
IX 29° 03’

X 0° 32’
XI 0° 54’
கேது28°16
VIII 28° 05’
20 டிசம்பர் 1978
இரவு 10 மணி

பாவம்.
XII 0° 21’
குரு()14° 30’ லக்//
29° 39’
VII 29° 39’
VI 0° 21
சந்12° 19’
சனி22°20’
ராகு28° 16’
II 28° 05
செவ்12°29’
சூரி04° 53’
V 0° 54’
IV 0° 32’
புத 13° 38

சுக் 22° 06’
III 29° 03’

       “லால் கிதா” ப்பில் சுக்கிரன் -- திறந்த வெளி, ரொக்கம், தினசரி உபயோகப்படுத்தும் பொருட்கள், பசு மேலும் பல பொருட்களுக்குக் காரகராகிறார்.. எனவே, இவருக்கு பெண் தொடர்பான, விவசாய நிலத்  தொடர்பான பிரச்சனைகள், குடும்பத்தில் நகைகள், சொத்துக்கள் இழப்பு ஆகியவை ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. விசாரித்த போது ஜாதகருக்கு ஒரு பெண்ணுடன் நிச்சியமாகி, திருமணம் நின்று விட்டதாகவும், விவசாய நிலத்தை விலைபேசி அதிலும் நண்பனால் ஏமாற்றப்பட்டு பணம் இழந்ததாகவும் கூறினார். மேலும், 4 ஆம் பாவம் சந்திரன், சுக்கிரனால் பாதிப்பு அடைந்ததால், இவருக்கு முறையாக பிரிவினையால் வரவேண்டிய சொத்திலும் சமமான பங்கு கிடைக்கவில்லை. இவ்வாறாக, ஜாதகத்தின் மூலமாக துல்லிய நிகழ்வுகளைக் கண்டறிய முடிந்தது.
       கடவுள் படைத்த ஒவ்வொரு கிரகமுமே அதிக தூரத்தில் இருந்த போதும், அவரால் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுமே ஏதாவது ஒரு கிரகத்துக்கு உரியதாகப் படைக்கப்பட்டுள்ளது.   இவற்றிலேயே  “லால் கிதா” ப்பின் பரிகார இரகசியங்கள் அடங்கியுள்ளது. “லால் கிதாப்பை உருவாக்கிய ஆசிரியர், அப் பொருட்கள் ஒவ்வொன்றையும் கிரக வாரியாக பல குழுக்களாகப் பிரித்து எழுதியுள்ளார். உதாரணமாக அரிசி, பால், உணவில் உள்ள நீர் சத்துக்கள், தாய், பாட்டி ஆகிய சொந்தங்களையும், தாவரங்களில்ரசமுள்ள பழங்களையும், மாமரத்தையும், விலங்குகளில்குதிரை, முயல் ஆகியவற்றையும் கடவுளில் ஈஸ்வரனையும், விலைமதிப்பு மிக்க உலோகங்களில் வெள்ளியையும், நீர் நிலைகளில் ஓடுகின்ற நீரையும், ஏரி, குளத்தையும், உடலில் மனம், இதயம் ஆகியதையும் சந்திரனுக்குப் பிரித்தார்.
       சந்திரனால் ஏற்பட்ட தோஷத்திற்கு இந்த பொருட்களையே பரிகாரத்துக்குப் பரிந்துரைக்கலாம். தாயின் சாபத்துக்கு, வெள்ளிப் பொருட்கள், அரிசி, பால் ஆகியவற்றை உறவுகளிடம் இருந்து சேகரித்து, ஓடும் நீரில் சில காலங்கள் விடவேண்டும். இதன் காரணமாக தாயின் சாபம், தோஷம் நிரந்தரமாக நீங்கிவிடும். இதுவரை அவர் அனுபவித்த துன்பங்கள் நீங்கி, சுகம் பெருகும். சந்திரனால் ஏற்பட்ட தோஷம், அவருக்கு உகந்த பொருட்களை நம் கைகளால் தூக்கி எரியும் போதே நம் உடலைவிட்டு நீங்கி விடுகிறது. பொதுவாக சாபத்திற்கான பரிகாரங்கள் ஒரு சில தடவைகள் மட்டுமே செய்யப்பட வேண்டும். மற்ற பரிகாரங்கள் 43 நாட்கள் செய்யப்பட வேண்டும். நடுவிலேயே நல்ல பலன் தெரிந்தாலும் முழுமையாக 43 நாட்கள் இப் பரிகாரங்களை செய்வதே உசிதமாகும். அப்போதுதான் நிரந்தரமாக தோஷ பாதிப்புக்கள் மறையும்.
       சந்திர தோஷத்துக்கான எளிமையான பரிகாரம்தாயை தினமும் வணங்கி ஆசி பெறுதல், தாயால் கொடுக்கப்பட்ட அரிசியை வீட்டில் வைத்திருத்தல், வெள்ளியினாலான காப்பு அல்லது மோதிரத்தைக் கையில் அணிந்து, அதை 43 நாட்களுக்குத் தொடரவேண்டும். இதற்குப் பின்னுள்ள விஞ்ஞான நிகழ்வு என்னவெனில், இந்தப் பொருட்களை நதியில் விடும்போது, நமது உடலில் சந்திரனால் ஏற்பட்ட கர்மாக்களின் பாவங்கள், நதியோடு கரைந்துவிடுகின்றன என்பதே உண்மை. அதன் காரணமாக குறிப்பிட்ட கிரக பாதிப்பால் ஏற்பட்ட தோஷங்களும், சாபங்களும் நிரந்தரமாக மறைந்துவிடுகின்றன.
        “லால் கிதா” ப்பில் வாஸ்து தொடர்பான திருத்தங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு திசைக்கும் குறிப்பிடப்பட்டுள்ள கிரகங்களுக்கு உரிய பொருட்களை மட்டும் இந்தப் பகுதியில் வைப்பதின் மூலமாகவே வாஸ்து திருத்தங்கள் செய்து கொள்ளலாம்உதாரணமாக, சந்திரனுக்கு உரிய திசையான வடகிழக்குப் பகுதியில், அவருக்குரிய பால், வெள்ளி, அரிசி ஆகிய பொருட்களை வைக்கவேண்டும். அதைவிடுத்து அதற்குப் பகை கிரகங்களின் பொருட்களான இரும்பு, நிலக்கரி ஆகியவற்றை வைத்தால் குடும்ப வாழ்க்கையில் வீழ்ச்சி ஏற்படலாம். இவ்வாறாக, வீட்டில் உள்ள பொருட்களை மாற்றி அமைப்பதன் மூலமாக வாஸ்து பரிகாரங்களை நடைமுறைப்படுத்தலாம்.
       ஓர் ஆண்டுக்கு உரிய ஜாதகத்தைத் தயாரித்து, அதன்படி வருட, மாத, வார, தின, பகல், இரவு என அனைத்துக் காலங்களுக்குமான பரிகார முறைகளையும் கடைப்பிடிக்கலாம். லால் கிதாப் ஜோதிடப் பிரிவு ஒரு பரந்த, சக்திமிக்க நம் ஒவ்வொருவராலும் வாழ்நாள் முழுவதும் அர்பணித்துப் படிக்கக் கூடிய சிறந்த பிரபஞ்ச அறிவாகும்.
       லால் கிதாப் பரிகாரங்களைச் செய்பவர்கள், தங்களுக்குச் சரியான பலன் கிடைக்க அனுசரிக்க வேண்டிய ஒழுக்கமான விஷயங்கள் மது அருந்தக்கூடாது, புகையிலை , புகைபிடித்தல் கூடாது மற்றும்  முறையற்ற உறவுகள் கூடாது. ஒழுக்கத்துடன் லால் கிதாப் பரிகாரங்கள் செய்பவர்களுக்குப் பரிகாரத்தின் பலன் மிகக் குறுகிய காலத்தில், மிகச் சிறப்பாக இருக்கும். தவறும் பட்சத்தில் பாதிப்புக்கள் குறையாது.
        “லால் கிதாப்“ பரிகாரங்கள், இரவில் செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டாலொழிய, பகலில்தான் செய்யப்பட வேண்டும். பகல் நேரம் சூரியன் காரியங்களை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும், சிறப்பாகவும் செய்து முடிக்க வைக்கிறார்.
       அடுத்ததாக லால் கிதாப்“ பரிகாரங்களை கூடியமட்டும் சம்பந்தப்பட்ட ஜாதகர் மட்டுமே செய்ய வேண்டும். ஆயினும், ஜாதகர் வெளிநாட்டில் இருந்தாலோ அல்லது உடல் நலக்குறைவு காரணமாகவோ செய்ய முடியவில்லை எனில், அவரின் தாய் அவருக்காக, அவர் சங்கல்பம் செய்தபின் செய்யலாம்.
திருமண தாமதம்
இந்தப் பெண்ணுக்குத் திருமணம் தாமதம் ஆனது. சில இடங்கள் பேசிமுடித்துத் தடையானது. மேலும், இந்த பெண்ணே தன் இஷ்டப்படி தனக்குத் தெரிந்த ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள நினைத்தாள். அதற்கு, குடும்பத்தார் சம்மதிக்கவில்லை. வந்த 7 – 8 சம்பந்தங்களும் தோல்வியடைந்தன.
       லால் கிதாப்பில், திருமணத்திற்கு, 2 மற்றும் 7 ஆம் வீடுகள் ஆராயப்பட வேண்டும். சுக்கிரன் 2 மற்றும் 7 ஆம் வீட்டுக்கான அதிபதி ஆவார். 2 ஆம் வீட்டில் செவ்வாய் மற்றும் இராகு அமர்ந்துள்ளனர். மேற் சொன்ன பாவங்களில் சுக்கிரனுக்குப் பகை கிரகங்கள் அமர்ந்ததால் இக் குடும்பத்தில் பிறப்பெடுத்ததால் பெண் சாபம் அல்லது தோஷம் ஏற்பட்டது. 2 ஆம் பாவம் குடும்பத்தைக் குறிப்பதல்லவா ? எனவே, இந்த பெண்ணுக்குப் பெண் மூதாதையர்களின் சாபம் ஏற்பட்டது. இராகுவின் பார்வை சுக்கிரன் மேல் இருப்பதால், இப் பெண்ணுக்கு காதல் ஏற்பட்டது. மேலும் பாதிப்புக்குக் காரணம் 2 இல் உள்ள செவ்வாயே ஆகும்.
ராகு21° 58’
செவ்12°22’
II 14° 39’
III 17° 11’
IV 15° 06’

V 10° 46’
குரு26°39’
லக்//8° 30’

17 ஜனவரி 1987
 காலை 09 15 நி
பாவம்.
VI 07° 27’
சந்25° 25’

XII 07° 27’
புத 05°40’
சூரி02°49’

VII 08° 30’


XI 10° 46’

சனி23°26’
சுக் 15° 57’
X 15° 06’
IX 17° 11’

VIII 14° 39’
கேது21°58


       இந்தப் பெண்ணிற்கு, பெண் சாபம் நிவர்த்தியாக பரிகாரமாக 100 பசுக்களுக்கு வெள்ளிக்கிழமை 2 வேளைக்கு உணவளிக்கவும் (வெள்ளைப் பசுவைத் தவிர) அதன் பிறகு அமாவாசையன்று ஆஞ்சனேயரை வழிபடவும் அடிக்கடி அருகிலுள்ள விதவைப் பெண்களிடம் ஆசிர்வாதம் வாங்குதலும், ஊனமுள்ள பசுவுக்கு வெள்ளிக்கிழமைகளில் தீவனம் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதை அந்தப் பெண் 43 நாட்களுக்கு செய்த பிறகு, சிறிது சிறிதாக அவள் மனம் மாறி, 60 நாட்களில் வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் திருமணம் நடந்து, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறாள்.
லால் கிதாப்முன்னேற்றத்துக்கும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்குமான பொதுவான பரிகாரகங்கள்
# தினமும் சாப்பிடும் முன் சிறிது உணவினை மூன்று பங்காக வைத்து, சாப்பிட்ட    பின் பசு, நாய் மற்றும் காக்கைக்கு வைக்கவும்.
# திடீர் அதிர்ச்சிகள், வீண் செலவுகள் போன்ற இராகுவின் பாதிப்பை முழுவதுமாக    கட்டுப்படுத்த, எப்போதும்   சமையலறையிலேயே உணவருந்துதல் வேண்டும்.
# ஒவ்வொரு மாதமும், வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் 3, 4 அதிகமான இனிப்புப் பலகாரங்களைத் தயாரித்து அதை பசு, எருது அல்லது   ஏதேனும் ஒரு மிருகத்துக்கு அளிக்கவும்.
# இரவு தூங்கும் போது ஒரு குவளையில் நீர் அல்லது பாலை தலைக்கு அருகே     வைத்து, காலையில் எழுந்ததும் அதை மரம், செடிகளுக்கு ஊற்றினால்,     வீட்டில் சண்டை சச்சரவுகள், கோபதாபங்கள், விபத்துகள், அசிங்க    அவமானங்கள், ஆரோக்கியக் குறைவுகள் ஆகியவை ஏற்படுவதைத்      தவிர்க்கலாம்.
நோய் பாதிப்புக்கள் குறைய அல்லது தவிர்ப்பதற்கான லால்கிதாப் பரிகாரங்கள்.
# ஒவ்வொரு வருடமும் சிகப்பு பூசணிக்காயை கோவிலுக்கு தானமாக வழங்கவும்.

# இரவு படுக்கும் போது சில காசுகளை தலையணைக்கு அடியில் வைத்து,     காலையில் ஏழைகளுக்கு வழங்கவும்.

Wednesday, January 27, 2016

லால் கிதாப்


லால் கிதாப் 

லால் கிதாப் – முன்னேற்றத்துக்கும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்குமான பொதுவான பரிகாரகங்கள் –
# தினமும் சாப்பிடும் முன் சிறிது உணவினை மூன்று பங்காக வைத்து, சாப்பிட்ட பின் பசு, நாய் மற்றும் காக்கைக்கு வைக்கவும்.
# திடீர் அதிர்ச்சிகள், வீண் செலவுகள் போன்ற இராகுவின் பாதிப்பை முழுவதுமாக கட்டுப்படுத்த, எப்போதும் சமையலறையிலேயே உணவருந்துதல் வேண்டும்.
# ஒவ்வொரு மாதமும், வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் 3, 4 அதிகமான இனிப்புப் பலகாரங்களைத் தயாரித்து அதை பசு, எருது அல்லது ஏதேனும் ஒரு மிருகத்துக்கு அளிக்கவும்.
# இரவு தூங்கும் போது ஒரு குவளையில் நீர் அல்லது பாலை தலைக்கு அருகே வைத்து, காலையில் எழுந்ததும் அதை மரம், செடிகளுக்கு ஊற்றினால், வீட்டில் சண்டை சச்சரவுகள், கோபதாபங்கள், விபத்துகள், அசிங்க அவமானங்கள், ஆரோக்கியக் குறைவுகள் ஆகியவை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
நோய் பாதிப்புக்கள் குறைய அல்லது தவிர்ப்பதற்கான லால்கிதாப் பரிகாரங்கள்.
# ஒவ்வொரு வருடமும் சிகப்பு பூசணிக்காயை கோவிலுக்கு தானமாக வழங்கவும்.
.# இரவு படுக்கும் போது சில காசுகளை தலையணைக்கு அடியில் வைத்து, காலையில் ஏழைகளுக்கு வழங்கவும்.
# சுடுகாடு வழியாக செல்ல நேரும் போது ரூபாய் நாணயத்தை விட்டுச் செல்லவும்.

கர்மா ?



கர்மா ?

நாம் நம் குழந்தைகளுக்குப் பணம் சம்பாதிக்கும் வழிகளைக் கற்றுத் தருகிறோமேயன்றி, நாம் செய்கின்ற சஞ்சித கர்மாக்களைக் குறைக்க அவர்களுக்கு வழிகாட்டுவதில்லை. முற்பிறவியில் செய்த பாவங்களின் பாக்கிகளைத் தொலைக்க வேண்டியதற்கான வாய்ப்பை அளிப்பதே இப்பிறவியின் வாழ்க்கையல்லவா ?
அந்த பாக்கிகளை முழுவதுமாக முடியும் வரை, நம் வாழ்க்கையில் அவற்றைச் சுமந்து செல்ல வேண்டியதாகிறது. இவ்விஷயத்தில் நாமே சுத்தமாக இல்லாத போது, குழந்தைகளிடம் எங்ஙனம் எதிர்பார்க்க முடியும். எனவே, நமது கர்மாக்கள் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் எனத் தொடர்கின்றன. ஆனால் தற்காலத்தில் அது அர்த்தம், தர்மம், காமம் மற்றும் மோட்சமாக மாறிவிட்டது.
கர்மா – கர்மா என்பது க்ரியா எனும் செயல்பாட்டைக் குறிக்கும். செயல்பாடற்ற மனிதன் இறந்தவன் ஆகிறான். கர்மங்கள் மூன்று அவை க்ரியாமான், சஞ்சித கர்மா மற்றும் ப்ராப்த கர்மா ஆகும்.
1. பசிக்கிறது – சாப்பிட்டேன் பசியாறினேன் என்பது உடனடி முடிவுகிடைக்கும் க்ரியாமான் கர்மாவாகும்.
2. விதைத்த விதை பல மாதங்களுக்குப் பிறகு வளர்ந்து, மரமாகி, பூ புத்துக் காய்ப்பது போன்ற கர்மா – சஞ்சித கர்மா ஆகும்.

3. ப்ரார்ப்த கர்மா – இது தீர பல வருடங்கள் – பல ஜென்மங்கள் கூட ஆகலாம்.
திருதுராஷ்டிரன், கடவுளிடம், “நான் ஏன் எனது 100 மகன்களையும் இழக்க நேர்ந்தது ?” - எனக் கேட்க, அவர் – “பல பிறப்புக்களுக்கு முன் நீ ஒரு வேடனாய் இருந்த போது 100 குஞ்சுகளைக் கொன்ற பாவத்தின் பலனே இது” - எனக் கூறினார். அதன் காரணமாக அவன் புண்ணியம் சேர்க்கப் பல பிறவிகளை எடுக்க வேண்டியதாயிற்று என்பது பழைய கதை. இதன் மூலமாக நாம் செய்த வினைகள் ஜென்ம ஜென்மத்துக்கும் தொடர்கிறது என்பதை உணர்ந்து நாம் வாழ முற்பட வேண்டும்.

Sunday, November 8, 2015

கேது, சுக்கிர மகாதசா பொதுப்பலன்கள்







கேது மகாதசா பொதுப்பலன்கள். – தசாக் கலாம் - 7 வருடங்கள்.

கேது புக்தி – 4 மாதம் – 27 நாட்கள்.

எதிரிகளோடு சண்டையிடுவார், நண்பர்களுடன் கருத்துவேறுபாடு, உறவகளைப் பிரிதல், மனக்கலக்கம், சொத்து இழப்பு, சந்தோஷக் குறைவு, பாசத்தை மறந்து பேதப்படுதல், அடக்குதல் அல்லது சிறைப்படுதல். மனைவி, மக்கள், சகோதரர் இவர்களின் மீது வெறுப்பு உண்டாகுதல், புரட்டாசி மாதத்தில் விலங்கு பூண நேரல், ஆயுர்பாவ விஷயத்தில் முடிவு செய்யப்பட்ட மாதம் புரட்டாசி மாதமானால் பீடை உண்டாகும்.

சுக்கிர புக்தி – 1 வருடம் 2 மாதங்கள்.

மனைவியும், மக்கட்பேறும், கன்று, காலியுண்டாகுதலும், நினைத்த காரியமெல்லாம் கைகூடுதலும், புக்தியின் முடிவில் பீடை உண்டாகும். மனைவிக்குப் பீடை உண்டாகும். சொத்துச் சேருதல், நம்பிக்கைகளும், விருப்பங்களும் வெற்றிபெறுதல், புக்தி முடிவில் ஆரோக்கியக் குறைபாடு, மனைவி மற்றும் மத சம்பந்தமான நபர்களிடம் சண்டைகள், பிறரால் அவமானம் அடைதல், மற்றவர்கள் மீது வெறுப்படைதல் ஆகியவை ஏற்படும்.

சூரிய புக்தி – 4 மாதம் – 6 நாட்கள்.

நெடுந்தூரப் பயணங்கள், திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணை / பெண்ணைப் பற்றிய ஆவல் அதிகரித்தல், வெளிநாட்டுப் பயணங்களின் மூலமாக ஆதாயம் அடைதல், ஏமாற்றங்கள், தடைகள், குடும்பத்தினருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படுதல், உறவுகளுடனான, கூட்டாளிகளுடனான, மனைவியுடனான கருத்து வேறுபாடுகள் ஆகியவை ஏற்படும். இருக்கும் இடத்தைவிட்டு வெளிநாடு சென்று திரும்பி வருதல், காய்ச்சல், தலைவலி, மனக்கிலேசம் ஆகியவையும் ஏற்படும்.


சந்திர புக்தி – 7 மாதங்கள்.

பெண்கள் மூலமாக வழக்குகள், சண்டைகள், குழந்தைகளுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படுதல், கன்று காலி உண்டாகுதல், பொன் ஆபரணங்கள் சேருதல், தீமைகள் வந்து விலகுதல் ஆகியவை ஏற்படும். பலம் மிக்க சந்திரன் எனில், இலாபங்கள் மற்றும் பொருளாதார வெற்றிகள் ஏற்படும், அமைதியான மனம், பணியாளர்களை அமர்த்துதல், பெண் குழந்தை பிறத்தால், தாயின் மூலமான இலாபங்கள் ஆகியவை ஏற்படும்.
பாதிக்கப்பட்ட சந்திரனனால், சொத்து இழப்புக்கள் ஏற்படலாம், மனஅமைதி குறைதல், வழக்குகள், மகன் மற்றும் உறவுகளைப் பிரிய நேரல். பெண்கள் தொடர்பான வழக்குகளைச் சந்தித்தல், குழந்தைகள் மூலமான இழப்புக்கள் ஆகியவை ஏற்படும்.

செவ்வாய் புக்தி – 4 மாதம் 27 நாட்கள்.

குடும்பத்தாருடன் சண்டைகள், இளைய சகோதரர்களுடன் சண்டை, சொத்து இழப்பு, பெண்கள் மூலமாக அழிவு, அக்னியால், திருடர்களால், எதிரிகளால் ஆபத்து, வழக்கு மற்றும் சிறைப்படுதல், முன்னேற்றப் பாதைகளில் பல தடைகள், தடங்கல்கள் ஏற்படுதல். பயம் ஏற்படுதல், கவலைகள் ஏற்படுதல், அறுவை சிகிச்சை போன்ற துன்பங்கள் ஆகியவையும் ஏற்படும். இவை அனைத்தும் பொதுப் பலன்களே. ஜாதகரின் ஜாதகத்தில் செவ்வாயின் நிலையைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.

இராகு புக்தி – 1 – 18 நாட்கள்.

செல்வம் இழப்பு, மரியாதை மற்றும் சொத்துக்களைப் பற்றிய பயம் ஏற்படுதல். அதிகாரிகள் மற்றும் கொள்ளையர்களால் இழப்பு ஏற்படுதல், சோகங்கள், எதிரிகள் மூலமாக சண்டைகள் ஏற்படுதல், கொடூரமான மனிதர்களால் இழிவாகப் பேசப்படுதல், இழிவான பெண்களோடு முறையற்ற தொடர்பு கொள்ளுதல் ஆகியவை ஏற்படும். விஷ பயம் உண்டாகுதல், அரசனுக்குக் கேடு, பெண்களுக்குப் பீடை, இகபோக, தன நாசம் ஏற்படுதல், புகழ் மறைந்து களங்கம் ஏற்படுதல்  ஆகியவை ஏற்படும். இவை அனைத்தும் பொதுப் பலன்களே. ஜாதகரின் ஜாதகத்தில் இராகுவின் நிலையைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.

குரு புக்தி – 11 மாதம் 6 நாட்கள்.

தனலாபம், அரசரின் நட்பு ஏற்படுதல் (விஐபி), விஷபயம் உண்டாகி விலகுதல், இலட்சுமி கடாக்ஷ்ம் பொருந்திய மனைவி அமைதல், அதிகமான செல்வம் சேருதல் ஆகியவை ஏற்படும். கடவுள் பக்தியும், மத சம்பந்தமான நல்ல காரியங்களில் ஈடுபாடும் அதிகரித்தல், ஆண்மகவு பிறத்தல், மனைவியுடன், மற்றும் எதிர் பாலினத்தோடு ஏற்படும் தொடர்பால் மகிழ்ச்சி அடைதல். உயர் அதிகாரிகளின் மூலமான அனுகூல நிலையால் இலாபம் அடைதல்,  சொத்துச் சேர்க்கை, புகழ் மற்றும் மரியாதை கூடுதல், இலாபகரமான செயல்பாடுகள், திருமணம் ஆகவில்லையெனில், காதல் விவகாரங்களில் முன்னேற்றம் இருக்கும்

சனி புக்தி -  1 – 1 மாதம் – 9 நாட்கள்.

 உறவுகளால் தொல்லை மற்றும் வெறுப்படைதல், பகைவர்களுடன் சண்டை இடுதல், பணம் மற்றும் பதவி இழத்தல், கால்களில் காயம் ஏற்படுதல், குடியிருப்பு மாற்றம்,  பலவழிகளிலும் இழப்புக்கள் ஏற்படுதல், மனக்கவலைகள், குழப்பங்கள் ஏற்படுதல், சனி பலம் பெற்று இருக்க இந்த பலன்கள் மாறுபட்டதாக இருக்கும்.

புதன் புக்தி – 11 – 27 நாட்கள்.

ஆண்மகவு பிறத்தல், சொத்து சேர்க்கை, மற்றவர்களிடம் இருந்து பல உதவிகள் கிடைத்தல், பூமி மூலமான இலாபங்கள் ஏற்படுதல், புத்திசாலித்தனமும், அறிவும் அதிகரித்தல், பாதிக்கப்பட்ட, பலம் இழந்த புதன் ஆனால்இழப்பு, குழந்தைகளால் கவலைகள் ஏற்படுதல், புதிய திட்டங்களில் தோல்வி காணுதல், பொறாமை கொள்ளுதல், தவறான வழிகளில் செல்லுதல், வஞ்சித்தல், மோசடி செய்தல், எதிரிகளால் தொல்லை ஆகியவை ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறாது, புத்திர சோகம் ஏற்படலாம். சுற்றத்தாரால் பயம் உண்டாகுதலும், நிலை மாற்றங்களும் ஏற்படும்.

சுக்கிர மகாதசா பொதுப்பலன்கள் – 20 வருடம்.

சுக்கிர புக்தி – 3 வருடம் – 4 மாதங்கள்.

வாகன யோகம், ஆபரணங்கள், முத்துக் குடை, குதிரை, யானை, நறுமணப் பொருட்கள் மற்றும் அனைத்து சுகங்கள், வசதி வாய்ப்புக்கள் ஆகிய அனைத்தும் கிடைக்கும். நல்ல பணியாட்கள், ஒளிமிகுந்த உடல் மற்றும் சொத்துக்கள். உயர் அதிகாரிகளின் மூலமாக ஆதாயங்கள், எதிரிகள் விலகி ஓடுதல், புகழ் கூடுதல், , புத்திர பாக்கியம் ஆகியவை ஏற்படும். பொருளாதார வெற்றி ஏற்படும். துன்பம் நீங்கி இன்பம் வரும் நாளில் பொருட்களின் சேர்க்கையும், எளிமை அல்லது பரிதாப நிலையும் ஏற்படும். கோசார சுக்கிரன் துலாத்தைக் கடக்கும் போது அக் காலம் சோகத்துக்கான காரணமாக அமையும்.  

சூரிய புக்தி – 1 வருடம்.

பலம் மிக்க சூரியனனால், அதிகாரம் மிக்கவர்களின், உயர்பதவியில் உள்ளவர்களின் அனுகூலமான உதவிகள் கிடைக்கும். வம்ச அபிவிருத்தி அடையும், பணம் சேருதல், மதிப்பு, மரியாதை கூடுதல். பூமி இலாபம், மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை ஆகியவையும், பலமற்ற, பாதிப்படைந்த சூரியனனால், உயர்அதிகரிகளால் நஷ்டம் அடைதல், மனைவி, கூட்டாளிகளால் பிரச்சனைகள் ஏற்படுதல், குழந்தைகள் மற்றும் பிறரால் தொல்லைகள் ஏற்படும். குடும்பப் பிரச்சனை, வாழ்க்கையே போராட்டம் ஆகுதல், வயிறு, கன்னங்கள், கண்கள் பாதிப்பு அடைதல் ஆகியவை ஏற்படும். துன்பம், தனவரவு குறைதல், மனைவி, மக்கள் ஓடிவிடுதல், பலருடன் வழக்கு உண்டாகுதல், தெய்வக் குற்றம் உண்டாகுதல், உற்றார் பகை ஆகியவை ஏற்படும்.

சந்திர புக்தி – 1 – 8 மாதங்கள்.

சந்திரன் பலம் மிக்கவன் ஆனால், நினைத்த காரியங்கள் கைகூடும், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும், பெண்கள் மூலமாக ஆதாயம் அடைதல், கல்வி, அறிவு, பணம், குழந்தைகள், வண்டி வாகனங்கள் ஆகியவை கிடைக்கும். கடவுளை பிரார்த்தனை செய்தல், இன்பம் தரும் மாதர்களுடன் சேர்க்கை ஆகியவையும், பாதிப்பு அடைந்த சந்திரன் எனில், மனைவி மூலமாக கஷ்டம் அடைதல், கண்நோய், தலைவலி, பல்வலி, சொத்தை இழத்தல், மணவாழ்க்கையில் தற்காலிகமான இணக்கமின்மை,  வலி, நரம்புத் தளர்ச்சி மற்றும் மனையால் பகை ஆகியவை ஏற்படும்

செவ்வாய் புக்தி – 1 – 2 மாதங்கள்.

சொத்துக்கள் அதிகரித்தல், எதிர் பாலினத்தாரின் தாக்கம், கடமை தவறுதல், பொருள் பற்று, சந்தோஷ பார்வைகள், எண்ணங்கள், அசாத்திய உழைப்பு மற்றும் அதிக பணமழை பொழிதல், திருமணம், பூமிலாபம், வெளிநாட்டுப் பயணம், கண்ணில் பாதிப்பு, புண்கள் மற்றும் காயங்கள் ஆகியவை ஏற்படும். பெண்களால் கரும நாசமும், இஷ்ட தேவதையை பூஜித்தலும், இருவர் மூலமாகப் பகை உண்டாகுதலும், உடலில் குஷ்ட  நோய் உண்டாகி விலகுதல் ஆகியவையும் ஏற்படும்

இராகு புக்தி – 3 வருடங்கள்.

தியானம், தனித்திருத்தல், முனிவரைப் போன்று தவமிருத்தல், புதையல், வம்ச விருத்தி, புத்திரனால் கலகம் ஏற்படுதல், நற்செய்திகள், உறவுகளின் மூலமான கௌரவம், மதிப்பு, மரியாதை, பகை வெல்லல், தீ மற்றும் திருடர்களால் காயம் ஏற்படுதல், மருந்து உண்டு,  அதனால் விஷம் தலைக்கு ஏறி, அங்கு இங்கும் அலைதல் ஆகியவையும், எல்லாவற்றிலும் ஒரு சூழ்நிலை மாற்றம் ஏற்படுவதையும் எதிர்பார்க்கலாம்.

குரு புக்தி – 2 – 8 மாதம்.

பதவியால் இலாபங்களும், ஆதாயங்களும் அடைதல், மதத் திருவிழாக்கள், மகிழ்ச்சி மிக்க குடும்ப வாழ்க்கை, மேலதிகாரிகள், முதலாளி அல்லது குருவின் காரகம் பெறும் நபர்களிடமிருந்து நன்மைகள் அடைதல், புகழ் மற்றும் மரியாதை பெறுதல், ஆரோக்கியம், சந்தோஷம், அறிவு, சொத்துக்கள், திருமணம், காம இன்பம், நல்ல காரியங்கள் ஆகியவற்றின் மூலமாக ஆதாயம் அடைதல், தானியம், பிராமணர்கள், ஆகியவற்றாலும் இலாபம் அடைதல், தசா முடிவில் மனவி, மக்கள் நோயால் வாடுவதைப் பார்த்து கவலை அடைதல் ஆகியவை ஏற்படும். ரேவதி, உத்திர நட்சத்திர காலங்களில் வருத்தம் உண்டாகுதலும் ஏற்படும்.

சனி புக்தி – 3 – 2 மாதங்கள்.

அதிகாரம் மிக்கவர்களின், உயர்பதவியில் உள்ளவர்களின், பெரியோர்களின் இராணுவத்தின், காவல் துறையின், அல்லது அரசாங்கத்தின் அனுகூலமான உதவிகளும், இலாபங்களும், மதிப்பு, மரியாதைகளும்  கிடைக்கும். அழகு மிக்க கன்னிப் பெண்ணை அடைவார், சொத்துக்கள் சேரும், வசதி வாய்ப்புகளும் சந்தோஷமும்  பெருகும்

பாதிக்கப்பட்ட, பலமிழந்த சனியெனில், ஆரோக்கியம் பாதிக்கப்படும்,  கை, கால்களில் வலி ஏற்படும், கை, கால் முடங்கி சரியாகும், துன்பமும், உடலில் நோய் ஏற்படுதலும், சாப்பிடும் உணவின் மீதும் விஷம்போல் வெறுப்பு ஏற்படுதலும், கண் பார்வையில் பாதிப்பு ஆகியவையும் ஏற்படும். அரசாலும், அதிகாரிகளாலும் மரியாதைக் குறைவும், இழப்பும் ஏற்படும். அலைந்து திரிதல், சூதாட்டம், குடித்துக் கெடுதல் ஆகியவை ஏற்படும்.
புதன் புக்தி – 2 – 10 – மாதங்கள்.

மனைவி மக்கள் சிறப்படைதலும், அவர்களால் சந்தோஷம் உண்டாகுதலும், சொத்து, பொருள் சேருதலும்,  கல்வி, கலை, விஞ்ஞான அறிவு அதிகரித்தலும், ஞானம், இசை பாடுதல், நல்ல சிவந்த நிறமுடையவர்களால் பலவித நன்மைகள் உண்டாகுதலும் ஏற்படும். எதிலும் வெற்றி கிடைக்கும், திருமணத்திற்குப் பிறகு மகனுக்கு அனைத்துவித வசதி வாய்ப்புக்கள், அதிகாரம் மற்றும் புகழ் ஏற்படுதலும், எதிரிகளை வெல்லும் பலம் பெறுதலும் உண்டாகும். ஆனாலும், வாயு, பித்தத்தால் ஏற்படும் நோய்களால் கஷ்டப்படுவார். வழக்குகளில் வெற்றி, இசையைக் கற்பதில் ஆர்வம் ஆகியவையும் ஏற்படும். அதிகாரம் மிக்கவர்களின், உயர்பதவியில் உள்ளவர்களின் அனுகூலமும், இராஜாங்க உதவிகளும், இலாபங்களும்   கிடைக்கும்

கேது புக்தி – 1 வருடம் 2 மாதங்கள்.

தீயால், நாற்கால் விலங்குகளால் ஆபத்து, காதல் விவகாரங்களால் அல்லது மனைவியால் தொல்லைகள், துணைவருக்கு நோய் ஏற்படுதல், விஷந்தீண்டி மீளுதலும், மனமகிழ்ச்சியின்மையும், பணயிழப்பும், தீய பெண்களுடன் தொடர்பும், வாசஸ்தலத்தில் தனித்திருத்தல் ஆகியவையும் ஏற்படும்.