Sunday, October 11, 2015

இராகு,குரு திசை பொதுப்பலன்கள்.






இராகு தசா பலன்கள் – (18 வருடங்கள்)

இராகு புக்தி – 2 – 8 மா – 12 நாட்கள்

       விஷகண்டம், ஊழல் விவகாரங்கள், சண்டைகள், இடமாற்றங்கள், மனக் கவலைகள், நீரில் கண்டம், பிற மாதரோடு புணருதல், அன்பு உறவுகளை விட்டுப் பிரிய நேரல், கொடூரமானவர்களின் நடவடிக்கை மூலமாக மனவேதனை, உறவுவில் மரணம், குடும்பத் தலைமை, அரசன், உயர் அதிகாரி அல்லது கூட்டாளிகளில் முதன்மையானவர்.

குரு புக்தி – 2 – 4 – மா 24 நாட்கள்

       நல்ல மற்றும் ஆனந்திக்கும் காலம், மகிழ்ச்சி, சொத்துச் சேர்க்கை, அதிகாரத்திலுள்ள மற்றும் உயர்நிலையிலுள்ளவர்களின் மூலமாக வசதி வாய்ப்புகள் பெருகுதல், மத செயல்பாடுகள், அழகிய பெண்களுடன் / ஆண்களுடன் இணக்கம். எதிரிகள் மறைந்து ஒழிதல், மழலைச் செல்வம் மடியில் தவழுதல், முயற்சிகள் அனைத்திலும் முழுவெற்றி அடைதல்.

சனி புக்தி – 2 – 10 மா – 6 நாட்கள்.

       அவதூறு, அபகீர்த்தி, தீயோர் நட்பு, உயரமான இடத்திலிருந்து கீழே விழுதல், கவலைகள், எதிரிகள் மூலமான இழப்புக்கள், மனக் கவலைகள், மனவேதனைகள், மனைவி, சகோதரன் அல்லது குழந்தைகளுடன் கருத்து வேறுபாடுகள்பதவி இயப்பு, ஆரோக்கியக் குறைவு, கலக்கம், குழப்பம், கலகம், மூட்டுவலி, ஜாதகரால் அனுபவிக்கப்படும் பித்த வாத, கப ரோகங்கள், வெளிநாட்டில் குடியேற நேரல்.

புதன் புக்தி -2 – 6 மா – 18 நாள்

புத்தியின் முதல் 11 மாதங்கள் அனுகூலமானதாக இருக்கும். குழந்தைப் பேறு உண்டாகும். சொத்துக்கள் சேரும். நண்பர்களின் சந்திப்பு, உயர் அதிகாரிகளின் அனுகூலமான செயல்பாடுகள், திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம். அறிவுபூர்வமான வியாபாரம் செய்வதற்கு உண்டான புத்திசாலித்தனம், திறமை மிக்க செயல்பாடுகள் ஆகும். கடைசி 12 மாதங்கள் தங்களது சுய செயல்பாடுகளால் எதிர்ப்பு மற்றும் எதிரிகள் ஏற்படுவர். வாகனயோகம், குழந்தைப்பிறப்பு, உற்றார் உறவினருடன் மகிழ்வோடு இருத்தல், எதிர்பாலருடன் இன்பம் துய்த்தல், வணிகம் மற்றும் ஏமாற்றுதல் மூலமாக இலாபம் பெறுதல் ஆகியவை ஏற்படும்.

கேது பக்தி – 1 – – 0 மா – 10 நாள்.

       தீ, காய்ச்சல், ஆயுதம் மற்றும் எதிரிகளால் தொல்லை ஏற்படுதல், தலைவலி, நண்பர்கள் மற்றும் பெரியவர்களுக்குக் காயம் ஏற்படுதல், விஷகண்டம், புண்கள் மற்றும் சண்டைகளால் ஏற்படும் கஷ்டங்கள், குழந்தைகளுக்கு நோய் ஏற்படுதல், மனைவிக்கு ஏற்படும் கஷ்டங்கள். உயர் அதிகாரிகளால் ஏற்படும் ஆபத்து மற்றும் அனைத்து வகையிலுமான துரதிர்ஷடங்கள்.

சுக்கிர புக்தி – 3 வருடங்கள்

        வாகன யோகம், பணம் மற்றும் திருமணம், நல்ல குடும்ப வாழ்க்கைக்கு ஆசிர்வதிக்கப்படுதல், எதிர்பாலருடனான தொடர்பு, மனைவி மூலமான இலாபங்களால் மகிழ்ச்சி அடைதல். உயர் அதிகாரிகள் மூலமான நன்மைகள். உறவுகளுடன் சண்டை ஏற்படுதல். வாயுத் தொல்லைகள், தீயகுணமுள்ள நண்பர்களின் நட்பைப் பெறுதல் மற்றும் அவர்களால் நஷ்டம் அடைதல். ஆனால் இவ்விதமான அனைத்துத் தொல்லைகள், கஷ்டங்கள் சூரியனைக் கண்ட பனி தோல் உடனே விலகிவிடும். பூமி இலாபம், திருமணம் அல்லது குழந்தைப் பிறப்பு ஆகியவை ஏற்படும்.

சூரிய புக்தி – 10 மா- 24 நாட்கள்

       குடும்பத்தாரிடையே சண்டை, எதிரிகளால் தொல்லைகள், கண்களில் தொந்திரவு, தீ, விஷகண்டம் மற்றும் ஆயுதத்தால் ஆபத்துக்கள்,  வீண்பயம், புதிய எதிரிகள் உருவாகுதல் ஆகியவை ஏற்படும். மகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை, குடியிருப்பு மாற்றம் அல்லது பதவி மாற்றம் ஏற்படும். உயர்பதவியில் உள்ளவர்களின் மூலமாக நன்மைகள் ஏற்படும். தேர்வுகளில் வெற்றி அடைதல், வெளிவட்டார வாழ்க்கையில் சந்தோஷம் கிடைத்தல், நல்ல மரியாதை, புகழ் ஏற்பட்டாலும், மனதில் நிம்மதியின்மை ஆகியவை ஏற்படும்.

சந்திர புக்தி – 1 – – 6 மாதங்கள்

       பலம் மிக்க சந்திரன் எனில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் குதூகலமாய் இருத்தல். இடமாற்றம், தனலாபம் ஆகியவை ஏற்படும். பாதிப்படைந்த சந்திரன் எனில் மனைவி மூலமான பணயிழப்பு, மனக் குழப்பங்கள், சண்டைகள், சொத்து இழத்தல், நிலையில்லாத ஆரோக்கியம், உடலில் வலி மற்றும் நீரால் கண்டம் ஆகியவை ஏற்படும்.

செவ்வாய் புக்தி – 1 – 0  மா - 18 நாட்கள்.

       உயர் அதிகாரிகள் மூலமாக இழப்புக்கள் மற்றும் ஆபத்துக்கள், தீ, ஆயுதம் அல்லது திருடரால் கஷ்டங்கள் ஏற்படும். பணம் இழத்தல், வழக்குகளில் தோல்வி, எதிர்ப்புகளால் பாதிப்பு அடைதல் அல்லது இடையூறுகள், இதயம் மற்றும் கண்களில் தொல்லைக்ள ஏற்படும். எதிரிகளால் ஆபத்து, வழக்கு விவகாரங்கள் மற்றும் மனக் குழப்பங்கள் ஆகியவையும் ஏற்படும்.

குரு திசை பொதுப்பலன்கள்.

குரு புக்தி - 2. 1.மா -6 நாட்கள்.

சொத்து லாபம், நல்லதிர்ஷ்டம், பிரகாசமான, மகன் பிறப்பு, கௌரவம், அரசு மற்றும் அதிகாரிகளின் மூலமான அனுகூலம். மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை, நல்லகாரியங்கள் செய்தல், நல்லாரோக்கியம், நம்பிக்கை. வெற்றி, விருப்பங்கள்,புனித பயணங்கள், மத சம்பந்தமான மற்றும் தர்ம ஸ்தாபனங்களுடன் தொடர்பு ஆகியவை ஏற்படும். பாதிப்பு அடைந்த குரு எனில் இதற்கு நேர்மாறான பலன்கள் ஏற்படும்.

சனி புக்தி - 2-6- மா 12 நாட்கள்.

தீய செயல்கள், குடித்தல்,போக்கிரிகளுடன் தொடர்பு, மனக்கவலைகள், திருமணமானவரானால் மகன்கள் மூலமாக சொத்து இழத்தல், வியாபார நஷ்டம், மனைவி அல்லது கூட்டாளியால் தொல்லைகள் ஆகியவை ஏற்படும். இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் ஜாதகருக்கு உயர்வு, மேன்மை, புகழ், சந்தோஷம் மற்றும் செல்வச் சேர்க்கை, சொத்துச் சேர்க்கை ஆகியவை ஏற்படும்.

புதன் புக்தி - 2- 3 - மா 6- நாட்கள்.

பெண்களால் தொல்லை, சூதாடுதல், குடித்தல்,நோய் ஆகியவை ஏற்படும் என சில முனிவர்கள் அபிப்பிராயப்பட்டாலும், மற்றவர்கள் கடவுளைத் தொழுவதின் மூலமாகவும் புனிதத் தலங்களுக்குச் செல்வதன் மூலமும் பலன்கள் நன்யாகவே இருக்கும் எனக் கருதுகின்றனர். ஜாதகர் கலை ஆர்வம் மிக்கவராக இருப்பார். குழந்தைப் பிறப்பு, செல்வ சேர்க்கை, சந்தோஷம் ஆகியவை ஏற்படும். உயர்அதிகாரிகளின் அனுகூலம், அரசாள்பவரின் ஆதரவு, வசதி வாய்ப்புகள் பெருகுதல், வணிகம் மற்றும் வியாபாரத்தில் இலாபம் ஆகிய பலன்கள் நடக்கும்.

கேது புக்தி – 11 மாதம் 6 நாட்கள்

ஆயுதத்தால் ஏற்படும் காயங்கள், வேலைக்காரர்களோடு கருத்து வேறுபாடு ஏற்படுதல், உறவுகள் மற்றும் நண்பர்களை விட்டுப் பிரிதல், மனக்கவலை அதிகரித்தல், மனைவி, குழந்தைகளால் தொல்லைகள் ஏற்படுதல், புனித பயணங்கள் செல்லுதல், வீடு மாற்றம், சொத்துச் சேர்க்கை ஏற்படுதல், கூட்டுத்தொழிலில் கூட்டாளியிடம் இருந்து விலகல் ஆகியவை ஏற்படும்.

சுக்கிர புக்தி – 2 – 8 மாதங்கள்.

பல்வேறு பொருட்களை அடைதல், நல்லுணவு கிடைத்தல், பெண்களிடம் இணைவான தொடர்பு ஏற்படுதல், மதவுணர்வு கொள்ளுதல், சொத்துச் சேர்க்கை ஏற்படுதல், கௌரவம், மரியாதை கூடுதல்மகன்களின் முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியான மண வாழ்க்கை ஏற்படுதல், கோசார சுக்கிரன் ரிஷபம் அல்லது துலாம்  இராசிகயைக் கடக்கும் போது பூமிலாபம் மற்றும் வாகன யோகம் ஏற்படும். சந்தோஷம், குடும்பத்துடன் ஒன்று சேருதல் ஆனால் மதிப்புக் குறைதல். ஆகிய பலன்கள் சுக்கிர புக்தியில் ஏற்படும்.

சூரிய புக்தி – 9 மாதம் 18 நாட்கள்.

அரசு மற்றும் அதிகாரிகள் மூலமான அனுகூலங்களை  அனுபவித்தல், புகழ் அடைதல், இனிய சுபாவம், வாகனயோகம் மற்றும் வாழ்க்கையில் அதிகபட்சமான முன்னேற்றங்களை எட்டுதல், பூமிலாபம், எதிரிகளை வெல்லுதல், நல்ல செயல்பாடுகள் ஏற்படுதல், ஆனால் உடலில் சக்தியை இழத்தல் ஆகியவை சூரிய புக்தியில் ஏற்படும் பலன்கள் ஆகும்.

சந்திர புக்தி – 1 – 4 மாதங்கள்.

முன்னேற்றம் அதிகரிப்பு, அதிகமான கன்னிப் பெண்களுடன் பழக்கம், எதிரிகளை அழித்தல்., தனலாபம், விவசாயத்தில் இலாபம் அதிகரிப்பு, மிக உயர்ந்த புகழ் அடைதல். கடவுளின் மீதான அதீத பக்தி ஏற்படுதல், சொத்துக்கள் சேருதல், நல்ல உலோகங்களைப் பெறுதல், பெண் குழந்தை பிறத்தல், குடும்பத்தில் உள்ள ஆணுக்குத் திருமணம் நடத்தல், குழந்தைகள் மூலமான ஆதாயம் ஆகியவை சந்திர புக்தியில் ஏற்படும்.

செவ்வாய் புக்தி – 11 மாதம் – 6 நாட்கள்.

எதிரிகள் மூலமாக சொத்துச் சேர்க்கை, பூமிலாபம், முக்கிய நபராக உருவெடுத்தல் அல்லது பலம் பெறுதல், புனித பயணங்கள் செல்லுதல், செல்வமும் புகழும் சேருதல், சாதனை புரிதல் மற்றும் உறவுகளிடையே நல்லுறவு ஏற்படுதல் ஆகியவை பலம் மிக்க செவ்வாய் புக்தியில் ஏற்படும்.
செவ்வாய் பாதிப்பு அடைந்து இருந்தால் ஏமாற்றகளையும் கஷ்டங்களையும் எதிர் கொள்ள நேரும். பொருட்கள் திருடு போதல், விடுமுறை அல்லது இடமாற்றம் ஏற்படுதல், நம்பிக்கைகளும், வியாபாரத்திலும் தோல்வி அடைதல், அலைந்து திரிதல், அதிகமான ஜூரம், மூத்த சகோதரனையோ நண்பனையோ இழத்தல், இரணம், காயம், கட்டி போன்ற வியாதிகள் ஏற்படுதல், மன அழுத்தம் ஏற்படல், அபாயகரமான காரியங்களை துணிந்து செய்தல், இழப்புகள் ஆகியவை பாதிக்கப்பட்ட செவ்வாய் தனது புக்தியில் ஏற்படுத்தும்.

இராகு புக்தி – 2 – – 4 – மாதம் – 24 நாட்கள்..

கீழான மக்கள் மூலமாக வருமானம் அடைதல், உறவுகள் மூலமாக துன்பங்கள் அடைதல், அதிகப்படியாக மனக்கவலை கொள்ளுதல், நோய் ஏற்படுதல், திருடர்கள் மூலமாக அபாயங்கள் ஏற்படுதல், குடும்பத்தில் உள்ள இளையவர்களுக்கு அல்லது மூத்தவர்களுக்கு நோய் ஏற்படுதல், அரசாங்கத்தின் மூலமாகவும், உயர் அதிகாரிகள் மூலமாகவும் தொல்லைகள் ஏற்படுதல் ஆகியவையே குரு திசை / இராகு புக்தியில் ஏற்படும் பலன்கள் ஆகும்.


Tuesday, September 29, 2015

இரண்டாம் வீடும், தொழிலை அறிதலும் …….

இரண்டாம் வீடும், தொழிலை அறிதலும் …….


         ஒருவரின் தொழில் நிலை நிர்ணயம் செய்வது ஜோதிடருக்கு சுலபமான வேலையல்ல. ஏனெனில், பெருகிவரும் நவீன தொழில் நுட்பங்களின் காரணமாகத் தொழிலைப் ஏற்படும் போட்டி காரணமாக மாறுபட்ட புதுப்புதுப் பிரிவுகளில் சிறப்புப் பயிற்சி பெறுதல் போன்ற முனிவர்களின் காலங்களில் இல்லாத தொழில்களெல்லாம் உருவாகியுள்ள நிலையில் தற்கால சூழலுக்கு ஏற்ப கிரகங்களுக்கான தொழில் காரகங்களை அனுமானித்து ஜாதகரின் தொழில் நிலை காண ஜோதிடர்கள் புத்தி கூர்மையுடன் பலன் காண வேண்டியது அவசியமாகிறது.   
       பொதுவாக தொழிநிலை என்ற உடன் நம் கண்கள் 10 ஆம் இடம் மற்றும் அதன் அதிபதியை மட்டுமே நோக்கிச் செல்லும். ஆனால் அனுபவத்தில் 10 ஆம் பாவம்மற்றும் அதன் அதிபதியை மட்டும் கொண்டு தொழில்நிலையை நிர்ணயம் செய்யாமல் இரண்டாம் இடத்தையும், அதன் அதிபதியையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
       இரண்டாம் இடம் பொதுவாக ஜாதகரின் பொரிளாதார நிலையை சீர்தூக்கிப் பார்க்க உதவுகிறது. ஜாதகரின் வருமானத்திற்கான வழிமுறைகளையும் 2 ஆம் இடம் மற்றும் அதன் அதிபதி மூலமாக அறிய முடியும். எனவே, தொழில் நிலையைக் காண 2 ஆம் இடத்தையும் இணைத்துப்பார்பது அவசியமாகிறது.
       10 ஆம் பாவம் மற்றும் அதன் பலம் தொழிலில் ஒருவரின் உயர் நிலையையும், கௌரவத்தையும் குறிகாட்டுகிறது. உதாரணமாக, ஜாதகர் ஆசிரியத் தொழில் மூலம் வருமானம் அடைவாரென்று 2 ஆம் வீடு காட்டினாலும் 10 ஆம் இடமே அவர் ஆரம்பப் பாடசாலை ஆசிரியரா ? கல்லூரிப் பேராசிரியரா ? – என்பதை நிர்ணயிக்கிறது.
        10 ஆம் இடத்தின் , அதிபதியின் பலம், இலக்னாதிபதி பலம் இவற்றைப் பொருத்தே அவர் தலைமை ஆசிரியரா ? பேராசிரியரா ? துணைவேந்தரா ? – என்பதை நிர்ணயிக்க முடியும். ஆனாலும், ஆசிரியத் தொழில் மூலமாக வருமானம் அடைவாரா ? – என்பதை நிர்ணயிப்பது     2 ஆம் இடமே ஆகும்.
       ஜாதக பாரிஜாதத்தில் கூறியுள்ளபடி ; - சூரியன், புதன், குரு மற்றும் சனி ஆகியோர் பல்வேறு தொழில் காரகராகிறார்கள். சூரியன் = அரசர், அரசியல்வாதிகள், புதன் = வணிகம், வங்கி, தொழிற்சாலை, குரு = விவசாயம், பக்தி மார்க்கம், மதம் மற்றும் கற்பித்தல், சனி = சேவை மற்றும் யாசித்தல் ஆகும். ஆனால், எப்படி இத் தொழில்களுக்கான சரியான காரகரைக் கண்டறிவது ? ஜாதகர் உத்தியோகம் செய்வாரா ? வியாபாராமா ? அல்லது விவசாயமா ? – இந்தக் கேள்விகளுக்கான முடிவுகள் இந்த நான்கு காரகர்களையும் ஒன்றாகக் கலந்து முடிவுக்கு வர இயலாது. இது குழப்பத்தையே உண்டு பண்ணும்எனக் குறிப்பிடுகிறது.
       இரண்டாம் வீடு ; செத்து மற்றும் வருமானம் வரும் வழிகளைக் குறிகாட்டுகிறது. ஏனெனில், 11 ஆம் வீடு 2 ஆம் வீட்டுக்கு 10 ஆம் வீடு ஆகும். காலபுருஷனுக்கு 2 ஆம் வீட்டு அதிபதி சுக்கிரன் ஆவார். எனவே, சுக்கிரனே பிரதான காரகர் ஆவார். 10 மற்றும் 11 க்கு உரியவர் சனி ஆவார். அவர் கர்மகாரகரும் ஆவார், சனி, சந்திரன் இணைவு எண்ணங்களில் நிலையற்ற தன்மையையும், உணர்ச்சி வசப்படுதலையும், கவலைகளுக்கும் காரணமாகின்றன. வெவ்வேறு இராசிகளில் சனியின் நிலை அந்த இராசியின் இயற்கை குணம், அதன் அதிபதியின் குணத்தைப் பொருத்தும் மாறுபடுகிறது.
       இவ்வாறாக இலக்னத்தில் இருந்து 2 ஆம் இடமும் ஜாதகரின் தொழில் மீதான கட்டுப்பாட்டையும் காலபுருஷனுக்கு 2 – 10 ஆம் அதிபதிகளான சுக்கிரன் மற்றும் சனியும் வாழ்வாதாரத்திற்கான காரகராகிறார்கள். ஜாதகத்தில் 10 ஆம் வீடு ஒருவரின் தொழில் நிலையை  காண மிக முக்கியமான பாவகமாகும். ஆனால், தனத்தைக் குறிக்கும் 2 ஆம் வீட்டை ஒதுக்கிவிடக் கூடாது.
       ஜோதிட மாணவர்கள் தொழில்நிலையைக் காண்பதற்கான கீழ்க்கண்ட விஷயங்களை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
1.   தொழிலா ? சேவையா ? வியாபாரமா ? என ஒவ்வொரு கிரகாத்தாலும், இராசியாலும் குறிகாட்டப்படுகிறது.
2.   தன யோகத்தின் பலமானது ஒருவரின் தொழிலின் கௌரவத்தை நிச்சியிக்கும். 10 இல் செவ்வாய் பலமிக்க தன யோகத்துடன் இருக்க ஜாதகர் இராணுவ ஜெனரலாக, காவல்துறை உயர் அதிகாரியாக அல்லது அத் துறை மந்திரியாக இருப்பார். அதுவே, பலமற்ற தன யோகமானால், அவர் ஒரு சிப்பாயாகவோ, காவலராகவோ மட்டுமே பணிபுரிவார். தனயோகத்தை நிர்ணயிக்க 2, 11, 5, 9 ஆகிய பாவகங்கள், அதன் அதிபதிகள், அவர்களின் இணைவுகள், பார்வைகள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆகியவை காணப்பட வேண்டும். தரித்திர யோகத்தைத் தரக்கூடிய  கிரகம் ஜாதகரை பிச்சை எடுக்கக் கூட வைத்துவிடும். தனயோகமோ ஒருவரை அரசனாகவோ அதற்கு இணையானவராகவோ ஆக்கிவிடும்.
3.    ஒரு கிரகத்தை மட்டும் வைத்துத் தொழிலை நிர்ணயம் செய்ய முடியாது. ஒரு கிரக குழுக்களின் தாக்கம் மற்ற கிரகங்களுடனான இணைவு மற்றும் தொடர்பே அதைத் தீர்மானிக்கும். பாவங்களும் இதில் முக்கியப் பங்கு வகிக்கும். உதாரணமாக, குரு , புதன், சுக்கிரன் ஆகியோர், குறிப்பிட்ட பாவகங்களுக்குத் தங்கள் தாக்கத்தைத் தரவேண்டும். ஒரு வக்கீலின் ஜாதகத்தில், தர்க்கம், வாதத்திறமைக்குக் காரகனான புதனின் தாக்கம் இருக்க வேண்டும். சுக்கிரன்துலாராசியின் அடையாளம் தராசு, நீதிக்கும் நேர்மைக்கும் காரகர்குரு நியாயத்திற்கும், உண்மைக்கும் காரகர் ஆவார். 5 மற்றும் 6 ஆம் பாவங்களும் இங்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. 6 ஆம் வீடு வழக்கு விவகாரங்களையும், 5 ஆம் வீடு சாதுர்யத்தையும், அறிவு பூர்வமாக வாதிடும் திறமையையும், தந்திரமாக உண்மையைத் திரித்துப் பேசும் திறமையையும் குறிக்கிறது. நவீன காலத்தில், ஒவ்வொரு கிரகமும் பல தொழில்களுக்கான காரகங்களைக் கொண்டுள்ளன. எனவே, தொழிலைத் தீர்மானிக்க பல காரணிகளைக் கருத்தில் கொள்ளவேண்டும். அவையாவன ;-
1.   2 மற்றும் 10 ஆம் அதிபதியின் இராசிகள் மற்றும் அவை நவாம்சத்தில் இருக்கும் இராசிகள்.
2.   காரகர்கள்- சுக்கிரன் மற்றும் சனியைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
3.   2 மற்றும் 10 ஆம் பாவத்தைப் பார்க்கும் கிரகங்கள். அந்த பாவங்களின் அதிபதிகள் நிற்கும் இடங்கள்.
இவை அனைத்தையும் ஒருவரின் தொழில்நிலை காண அலசி ஆராயப்பட வேண்டிய காரணிகள் ஆகும்.

       முந்தைய பதிவில் ஒரு ஜாதகரின் தொழில்நிலை காண அலசி ஆராயப்பட வேண்டிய காரணிகள் பற்றி அறிந்தோம். இனி, ஜாதகரின் தொழில் பற்றி அறிய சில ஜாதகங்களை ஆராய்வோம்.

ஜாதகம் -1
     இந்த ஜாதகர் கம்பீரமான, சக்திமிக்க. தைரியம் மிக்க பெரிய தொழில் அதிபர் ஆவார். இவரது ஆண்டு வருமானம் சுமார் ஒரு நூறு கோடிக்கும் மேலாகும். இவர் ப்ளாஸ்டிக் பிலிம்ஸ், பாலித்தின், லேமினேஷன் ஆகியவை தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வந்தார்.  
    இவரது ஜாதகத்தில் தனாதிபதி செவ்வாய், சுக்கிரனின் ஆட்சி வீடான துலா லக்னத்தில் உள்ளார். கர்ம ஸ்தானத்தில், இலாபாதிபதி சூரியன், இலக்னாதிபதி மற்றும் கேதுவுடன் அமர்வு. கர்மாதிபதி சந்திரன் பாக்கிய பாவமான புதனின் வீட்டில் உள்ளார். யோக்காரகன் சனி சுக்கிரனின் நவாம்சத்தில் உள்ளார். இங்கு புதனின் தாக்கம் ஜாதகரை ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் ஆக்கியது. இலாபாதிபதி சூரியன் 10.81 ரூப பலத்துடன் சக்தி வாய்ந்தவராக கர்ம பாவத்தில் இருப்பது இவரை மிகப்பெரிய தொழில் அதிபர் ஆக்கியது.


குரு


சந்




 செவ் கேது
புத

சனி




இராசி
சூரி, கேது .சுக்
சந்

நவாம்சம்


இராகு
புத

 லக்//

 சூரி






லக்//
செவ்
 சனி


குரு

சுக்

இராகு


பிறந்த தேதி 20- 07 – 1952 பிறந்த நேரம் – 12- 45 பகல்
      தனாதிபதி  செவ்வாய் சுக்கிரன் வீட்டிலும், சுக்கிரன் கர்ம பாவமான சந்திரன் வீட்டிலும் இருப்பதின் காரணமாக பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட தொழிலைக் குறிகாட்டுகிறது. ஜாதகர் கார்மண்ட்ஸ், பாலித்தின் பிலிம் தயாரிப்பு, கண்ணாடி வேலைகள், பேப்ரிக்ஸ், ரப்பர், வாக்ஸ், பி. வி ஸி பைப்புக்கள் தயாரிப்பு என அனைத்துத் தொழில்களையும் செய்தார். சுக்கிரன் சுய நவாம்சத்தில், நவாம்ச இலக்னத்துக்குப் 10 ஆம் இடத்தில் சர இராசியில் உள்ளார். இது சுய தொழிலுக்கு அதிபதி சந்திரன் 7.65 ரூப பலத்துடன் 11 ஆம் அதிபதி சூரியனுடன் பலமான இணைவில் உள்ளார். 11 ஆம் வீடு 12.8 பாவ ரூப பலத்துடன், ஒரு சாதாரண ஆசிரியரின் மகனாகப் பிறந்த இவரை, மிகப் பெரிய செல்வந்தர்  ஆக்கியது.  
ஜாதகம் – 2
     இது பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவர்களின் ஜாதகம். கும்ப இலக்கினம். தனாதிபதி குரு இராசியில் உச்சநிலை மற்றும் நவாம்சத்தில் வர்கோத்தமத்தில் உள்ளார். கர்மாதிபதி செவ்வாய் ஆயுள் பாவத்தில் உள்ளார். அவர் கடக நவாம்சத்தில் உள்ளார். அது செவ்வாயின் நீச நவாம்சமாகும். யோக காரகன் சுக்கிரன் இராசியில் நீசம் பெற்று, சுய நவாம்சத்தில் உள்ளார். கர்ம பாவத்தை மட்டும் வைத்து இவரது நடிப்புத் தொழிலை நிர்ணயிக்க முடியாது. ஏனெனில் கர்மாதிபதி செவ்வாய் கன்னி இராசியில், நவாம்சத்தில் நீசமாக உள்ளார். கர்ம பாவம் குருவின் பார்வை மற்றும் வக்ர சனியின் பார்வையையும் பெறுகிறது. இது மட்டுமே, ஒரு சூப்பர் நடிகரின் தொழிலை நிர்ணயிக்கப் போதுமானதல்ல.


சனி ()



லக்//

சுக்


 ராகு சனி

லக்//
கேது


  ,uhrp
குரு



ethk;rம்
 குரு செவ்


ராகு

 சந்
சூரி புத



சந்

சூரி புத()
செவ்
சுக்

கேது





பிறந்த நாள் – 11 – 10 – 1942 பிறந்த நேரம் 16 – 00 மணி.
     தற்போது. தனபாவம் மற்றும் தனாதிபதியைக் கருத்திற் கொள்ள வேண்டும். தனாதிபதி குரு உச்சமாகி ருணபாவத்தில் உள்ளார். அவர் வர்கோத்தம நிலையில் உள்ளார். தனபாவத்தை சுக்கிரன், சூரியன், செவ்வாய் ஆகியோர் பார்க்கின்றனர். குருவின் பார்வையும் அந்த பாவத்தின் மீது விழுகிறது. இது பல்வேறுபட்ட வழிகளில், மாறுபட்ட பல வேலைகளைச் செய்யும்போது ஜாதகருக்கு வருமானம் வருவதைக் குறிகாட்டுகிறது.
       சுக்கிரன் சுய நவாம்சத்திலும் சனி இராசிக் கட்டத்தில் சுக்கிரனின் இராசியிலும் உள்ளனர். இவ்வாறாக, சந்திரன் மற்றும் சுக்கிரனின் தாக்கம் இவரை ஓர் உன்னதமான முன்னணி நடிகராக்கியது. அநேக கிரகங்களின் புதனின் மீதான தாக்கம் இவரை ஒரு சிறந்த வியாபாரியாகவும் ஆக்கியது
ஜாதகம் – 3
          இது ஒரு தலைமை மருத்துவ அதிகாரியின் ஜாதகம் ஆகும். இவர் ஒரு திறமை மிக்க பல்கலை நிபுணரும் ஆவார். மருத்துவத்துறையில் பலமகத்தான சாதனைகளைப் புரிந்தவர். இவரது ஜாதகத்தில், செவ்வாய் மற்றும் சூரியன் 10 இல் உள்ளனர். அவர்களை சனி பார்க்கின்றார். இந்த இணைவு மருத்துவத் தொழிலைக் குறிகாட்டுகிறது. கர்மாதிபதி குருவின் நவாம்சத்தில் இருப்பது இதை மேலும் உறுதி செய்கிறது. தனாதிபதி சூரியன் கர்மபாவத்தில் உள்ளார். இது ஜாதகரின் தொழிலை பலமாக ஆமோதிக்கிறது. பொதுவாக சூரியன், குரு, செவ்வாய் இணைவு ஒருவரை மருத்துவராக்குகிறது.
பிறந்த தேதி – 10 – 04 – 1953 – 11 – 32 முற்பகல்.
சுக்
பு

சூரி செவ்

குரு

சந்


 சந் சுக்


சூரி
ராகு



இராசி
லக்// கேது
 

 நவாம்சம்

லக்//
ராகு
  

குரு




னி


செவ்

கேது

சனி

புத


கர்மகாரகன் உச்சம் பெற்று, வர்கோத்தமும் ஆகி அதன் தாக்கம் இவரது தொழிலுக்கு உதவுகிறது. சனி வியாதிகளையும், தீராத நெடுநாளைய நோய்களையும் குறிக்கிறது. குரு, அவற்றை குணப்படுத்தும் சக்தியையும், செவ்வாய் உடலிலுள்ள தசைப் பிரிவுகளையும், இரத்தத்தையும் குறிக்கின்றன. சூரியன் உலக வாழ்க்கையையும், சக்தியையும், ஆன்மாவையும் குறிக்கிறது.
தொழிலுக்கான முக்கிய காரணிகள் --
1.   தனம் மற்றும் கர்மாதிபதியைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
2.   இராசி மற்றும் நவாம்சத்தில் 2 மற்றும் 10 ஆம் அதிபதிக்கு இடம் கொடுத்தவர் நிலையறியவும்.
3.   தனம் மற்றும் கர்மா பாவத்தில் உள்ள கிரக நிலைகளைக் காணவேண்டும்.
4.   தனம் மற்றும் கர்மா பாவத்தைப் பார்க்கும்  கிரக நிலைகளைக் காண வேண்டும்.
5.   சுக்கிரன் மற்றும் சனியின் நிலை அறிய வேண்டும்.
6.   தனம் மற்றும் கர்மா பாவத்திபதிகள், காரக கிரக  நிலைகளை அறிய வேண்டும்.
7.   இயற்கை குணம், மூலம், இராசியின் குணம், கிரகங்களின் குணம் காண வேண்டும்.
8.   தசாம்சக் கட்ட கிரக நிலைகளையும் ஆராய வேண்டும்.
9.   தொழிலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஏற்ற இறக்கங்களை அறிய நடப்பு தசா / புத்திகளுக்கான பலன் காணவேண்டும்.
 மேற்படி, காரணிகளைக் கொண்டு தொழில் நிலை அறியலாம்.