Tuesday, November 11, 2014

படிப்பதினால் மட்டும் அறிவு வருவதில்லை

 


படிப்பதினால் மட்டும் அறிவு வருவதில்லை
படிப்பதினால் அறிவு பெற்றோர் ஆயிரம்,
பாடம் படிக்காத மேதைகளும் ஆயிரம் உண்டு !..............
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை;
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை...!

       பல மனிதர்கள் இயற்கையாகவே பள்ளி கல்லூரி சென்று நன்கு படித்து, அறிவாளியாகி நன்கு முன்னேறிவிடுவர். அவர்களுக்கு நல்ல தொழில்முறை திறமையும், வாதத்திறமையும் ,அழகு, கலை, அறுசுவை ஆகியவற்றை கொள்கை பிடிப்போடு ரசிக்கும் தன்மையும் எல்லா திறமைகளூம் ஒருசேரப் பெற்றவராக இருந்தாலும், ஏதேனும் ஒரு விஷயத்தில் சரியான முடிவெடுப்பதற்குள், தட்டுத்தடுமாறி, கடைசியாக தவறான முடிவிற்கே வருவார். இத்தகைய படித்த மேதைகளுக்கு அடிப்படையிலேயே தேவையான பொதுஅறிவு  இல்லாததே காரணமாகும்.

       இவ்வுலகில் இன்னும் சில மனிதர்கள் அவர்களின் மொத்த குடும்பத்தின் சுமைகளையும் சுமந்து கொண்டிருக்கும் சுமைதாங்கிகளாவும், மழைக்கு கூட பள்ளிக்குள் ஒதுங்காதவர்களாகவும் இருப்பர். ஆயினும் அந்த படிக்காத மேதைகளால் கண்டிப்பாக, எந்த விஷயத்தையும் சீர்தூக்கி பார்த்து , அதன் சாதகபாதகங்களையும் அலசி தந்திரமாக சமாளிக்கும் கலைகளை பிரயோகித்து, மிக துல்லியமாக, நிகழ்வுகளுக்கு சரியான முடிவுகளை எடுக்ககூடிய திறமை இருக்கும். அந்த படிப்பறிவில்லாத பாமரனுக்கு படிப்பில்லையெனினும், பொதுஅறிவில் சிறந்தவராக இருப்பதால், இயற்கையாகவே அனுபவத்தால் அது சாத்யமாகிறது . மேலும், எப்படிச் செய்தால், எப்படி முடியும் என்று நன்கு அறிந்திருப்பார். ஆனால், அதிமேதாவிகளுக்கோ, இத்திறமைகள் இருப்பதில்லை. ஏனெனில் எப்போதுமே ஏட்டுச்சுரைக்காய், கறிக்கு உதவுவதில்லை என்ற பழமொழி நாம் அறிந்த ஒன்றே. மேலே குறிப்பிடப்பட்ட பாடல்களும் இதையே விவரிக்கின்றன.

       இப்போது, முடிவெடுக்கும் ,திறமைக்கான, தெளிவான அறிவுக்கான ஜோதிட காரணிகளைப் பார்ப்போம். 

       நினைவுகளூம், முடிவுகளும் மனதிலிருந்து எழுபவை. அந்த மனதுக்கு காரகன் சந்திரன் ஆவான். அதேபோல், எதையும் சீர்தூக்கிப் பார்த்து நல்லது கெட்டதை பகுத்தறிந்து உணரும் தெளிவைத் தருவது புத்தி. இந்த புத்திகூர்மைக்கு காரகன் புதன் ஆவான். எனவே,100% சரியான, நல்ல முடிவெடுக்கும் திறமைக்கு புதனே காரணகர்த்தா. மேலும், முடிவெடுக்கும் திறமைக்கு தர்க்கம் செய்யும் திறமையும் அவசியமாகிறது. செவ்வாயே, தர்க்கதிறமைகளை தருபவன்.

   செவ்வாய், புதனுடனான நல்லுறவு, முக்கியமாக அசுபகிரகங்களால் பதிக்கபடாத தன்மையும், நிழல் கிரகங்களான் ராகு-கேதுக்களின் தாக்கமும் இந்த தர்க்கத் திறமையை கூட்டுகின்றன. ஸ்திரம் மற்றும் நெருப்பு ராசிகளில் ,இருபுறமும் சுபர்கள் புடைசூழ நிற்கும் புதன், தீர்மானமான, அனுபவரீதியான முடிவெடுக்கும் சக்தியை அளிக்கிறான்.

தயை செய்யும் கிரகங்களின் தாக்கங்கள்

        சாதகமான அல்லது தயை புரியும் நிலைகள் யாதெனில், புதன் பலமுடன் திகழ்வதும், சந்திரன் சுபர்களின் ,அதாவது குரு , சுக்கிரனின் தயை தரும் தாக்கம் அல்லது தொடர்பு பெருவது நல்லது. மேலும் அதிக சுபர்களின் தயை பெறும் சந்திரன் இன்னிலைக்கு மிகவும் உதவுபவன் ஆவான். எனவே, சந்திரன் தனது சுயபலத்துடன் இருப்பது அவசியமாகிறது, வளர்பிறை சந்திரனாகவும் இருக்கவேண்டும். 

    மேலும், குருவுக்கோ அல்லது சுக்கிரனுக்கோ திரிகோணத்தில், புதன் இருக்க அல்லது சூரியனுடன் கூடிய புதன் ஆகிய நிலைகளும் நுண்ணறிவைதரும். இத்துடன் கூட ராகுவின் தாக்கத்திலிருந்து லக்னம் சுதந்திரம் பெற்று இருக்க வேண்டும். அதேபோல மிக குறைவான் அளவில் கேதுவின் தாக்கமும் இருக்கவேண்டும். லக்னம் அல்லது சந்திரனுக்கு தாக்கந்தரும் நிழல் கிரகங்கள், அனுகூலமான நல்ல முடிவுகளை                  அளிக்கவல்லது என்றாலும், நினைப்புத்தான் பொழப்பை கெடுக்கும் என்பது போல், ஒருவரின் நினைப்பையும், பகுத்தறிந்து பார்க்கும் சக்தியையும் நாசம் செய்து விடுகின்றன. அவை, ஒருவரிடம், எதையும் மிகைப்படுத்தி கூறும் தன்மையை அதிகரித்தும், எதையும் ஆச்சரியகரமாக பார்க்கும் தன்மையும் கொடுத்து அவர்களின் திறமைகளை முடக்கி , அதன் காரணமாக எதற்கும் சரியான முடிவெடுக்க முடியாத நிலைக்கு அவரை தள்ளிவிடுகிறது. இதன் காரணமாக,அந்த நபர் எந்த முடிவும் எடுப்பதற்கும், தனது விருப்பு வெறுப்புகளே இறுதியானது என்று நம்பிக்கொண்டு, அந்த தவறான் நம்பிக்கையிலேயே திருப்தியடைந்து, காரியத்தைக் கோட்டைவிட்டு விடுவார்கள் என்பதே உண்மை. 

இனி பாவ நிலைகளைப் பற்றி பார்ப்போம்.

       ஐந்தாம் பாவம் புத்திகூர்மையைக் குறிப்பதாகும்.ஒருவருக்கு விவேகமிக்க, அனுபவ பூர்வமான புத்தி அல்லது மனம் எப்போது வருமேனில்........................

1. சுபர் இடம் பெற்ற அல்லது சுபரால் பார்க்கபட்ட, சுப
கிரக ராசியாக ஐந்தாம் பாவம் அமைய.................

2. ஐந்தாம் அதிபதி சுபகர்த்தாரியில் இருக்க அல்லது உச்சம் பெற்றிருக்க........

3. கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ குரு இருக்க............

4. குருவின் அனுகூலமான தாக்கம் ஐந்தாம் பாவத்திற்கு அமைய.................

5. ஐந்தாம் அதிபதி பலம்பெற்று கேந்திரத்திலிருக்க மற்றும் புதன் ஐந்திலிருக்க

6. ஐந்தாம் அதிபதி சுபருடன் கூடி கேந்திரத்தில் இருக்க....................

7. ஐந்தாம் அதிபதி கோபுராம்சம் பெற அல்லது வேறு உயரிய அம்சம் பெற......

8. இந்த அனைத்து நிலைகளிலும், புதனும், சந்திரனும் நல்ல நிலை பெறுவதே மிக முக்கியமானதாகும்.
எனவே, எந்த செயலுக்கும், குழப்பங்களுக்கும் இறுதி முடிவளிக்கும் திறமையை மனிதனுக்கு அளிப்பது மனமும், புத்தியுமாகிய சந்திரனும், புதனும்தான்  என்பது  நிதர்சனமன்றோ !.

வல்லமை தாராயோ பராசக்தி-இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே.

Sunday, November 9, 2014

அரசியல் தலைவர்களின் அநியாயப் படுகொலைகள்



அரசியல் தலைவர்களின் அநியாயப் படுகொலைகள்


            நம் நாட்டிலும்,அயல் நாடுகளிலும் சதிகாரர்களால் நிகழ்த்தப்பட்ட,திட்டமிட்ட,அரசியல் தலைவர்களின் படுகொலைகள்,   கொடூரமானது மற்றும் வெறுக்கத்தக்க ஒன்றாகும். இப்படி நாட்டைப்பற்றிய ஜோதிடம்,அரசியல் நிலைகள்பற்றிய,நிகழ்வுகள்பற்றியபற்றிய  ஜோதிடம்   முண்டேன்  அஸ்ட்ராலஜி   ஆகும்.  இது பெராசிரியர். பீ. சூரிய நாராயணராவ்  மற்றும்  அவரது பேரனும்,  அவரைப்போலவேயான,   ஜோதிட மேதை பெ.வி.இராமன்  ஆகியோரால்  துல்லியமாக   கையாளப்பட்டு,  கணிக்கப்பட்டுகடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்க்கப்பட்டது.   அன்னை பாரத பிரதமர் மறைந்த இந்திராகாந்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இக் கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்

                    ஜாதகம்  1



 குரு
 (வ)





இராகு



ஜான்.எப். கென்னடி
அரசியல் கொலை
நிகழ்ந்த நாள்:
22  11 1963
பகல் 12  20
அமாவாசை
16  11 --1963


 சனி
லக்

   கேது

செவ்
சுக்,புத
 சூரி
சந்






                                                                               

அவர்கள் வழியில்,கயவர்களால்,தீட்டப்பட்ட சதியால் கொடூரமாகம் கொலையுண்ட
               1. அமெரிக்க ஜனாதிபதி-  ஜான்.எப்.கென்னடி,   
               2. வங்கதேச ஜனாதிபதி   ஷேக்  முஜிபிர் ரஹ்மான்,
               3. எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத்,
               4. இந்திய   பிரதமர்களான   இந்திரா  காந்தி மற்றும்
               5. இராஜீவ் காந்தி ஆகிய
ஒப்புயர்வற்ற, உன்னத தலைவர்களின் படுகொலைகள் நிகழ்ந்தற்கு முந்தைய
அமாவாசை அன்றைய கிரக நிலைகளைக் கொண்டு ஆராய்வோம்.


ஜாதகம் -- 2.





 குரு

செவ்





ஷேக் முஜிபிர் ரஹ்மான்
17  27 மாலை
அமாவாசை
 8 - 1975
சனி
சூரி
சந்,புத 
லக்

சுக்

  

 இராகு





இதற்கு  பல    காரணிகள் இருந்தாலும்,  பாதிக்கப்பட்ட  குருவின், எதையும் அடக்கும் தன்மையே  காரணமெனலாம்.   ஆம், பாதிக்கப்பட்ட   குரு அமைதியான குணத்தைக் கெடுத்து,தேசிய  அரசியலில் சிலரின் நல்மனசாட்சியைக் கெடுத்து,நன்நடத்தை மற்றும் நியாயவுணர்வைக் கெடுத்துஇதன் காரணமாக தலைவர்களின் மீதான கொடுரக்கொலை கள் நிகழ்த்த  தூண்டுகோல் ஆகிவிடுகிறான். இத்தகைய அரசியல் கொலைச் சதிகளை ஊக்கப்படுத்தக்  கூடிய போக்கினை யூகிக்க முதன்மையாக கருதவேண்டிய காரணிகள்
1).  லக்னம் மற்றும் லக்னாதிபதி ------ நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் ஆரோக்கிய
நிலையை நிச்சியிக்கும் காரணிகள்.
2).  ஒளிக்கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரன் ------ ஆட்சி அதிகாரத்தையும்
தலைமை மற்றும் ஆட்சியாளர்களை குறிகாட்டுவன
   3).  குரு  பாதிப்படைய  நல்லொழுக்கம் மற்றும் நாகரீக நடத்தைகளை
       கெடுப்பதின் காரணமாகவும்.
   4).  10 மிடம் மற்றும் 10 ம் அதிபதி  நாட்டின் தலைமையை நிலைநிறுத்தும்
         காரணிகள்.
   5).   8 மிடம் மற்றும் அதன் அதிபதி  தேசத்தில் துக்கம் அனுசரிக்கும் காலம்
        மற்றும் இறப்பு போன்ற சோக முடிவுகளுக்குக் காரணிகள் ஆகும்.
   6).   சந்திரமான வருடம்  மற்றும் மாதத்தின் ஆரம்பநாள்--- அமாவாசை.

மேற்கண்ட 6 நிலைகளில் ஏற்படும் பாதிப்புகள் , இத்தகைய    கொலைகளை நிகழ்த்து
கின்றன எனலாம்.

ஜாதகம்  3























அன்வர்சதாத்
எகிப்திய அதிபர்
09  37
காலை, அமாவாசை
நாள்,28  9 - 1981
இராகு
செவ்
கேது





சுக்,புதன்
லக்,சூரி
சந்,சனி
குரு


பாதிக்கப்பட காரணங்கள்
1. இவைகளின் அசுபஸ்தானங்களில் இருத்தல்.
2.. இயற்கை அசுப கிரகங்களுடனான இணைவு மற்றும் அசுபஸ்தானாதிபதிகளின்
   இணைவும்,பரிவர்த்தனையும்கூட.                                                                                                                    
3. அசுபஸ்தானாதிபதி மற்றும் இயற்கை அசுபர்களின் பார்வை.
4. இரு அசுபகிரகங்களுக்கிடையே நசுக்கப்படுதல். ஆகியவையாகும்


                                              ஜாதகம் -- 4







 லக்

இராகு





பாரத பிரதமர்
இந்திரா காந்தி-நாள்
31  10 1984.
அமாவாசை
24  10 1984
மாலை 05 - 38





 குரு
செவ்


 சுக்
கேது


 சனி,புத
சூரி,சந்





 இங்கே இந்த வீடுகளின் பாதிப்பைக் காட்டிலும், அதன் அதிபதிகளுக்கான
பாதிப்பு, மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் ஆட்சி மற்றும் தலைமைப்
பதவிக்கு காரணியான     ஒளிகிரகங்களின்  பாதிப்பும்,குருவின் பாதிப்பு ஆகியவற்றை
பார்க்கும் போது.இவற்றின் மூலமாக காரணத்தை யூகிப்பது சுலபமாகிவிடுகிறது.
பாதிப்புக்கான அட்டவணை :-

ஜாதக எண்
லக்
லக்னாதிபதி
8-8ம் அதிபதி
10-10ம் அதிபதி
சூரி
சந்
குரு
1.
0
பாதிப்பு
பாதிப்பு
பாதிப்பு
பா
பா
பா
2.
பா
பாதிப்பு
பாதிப்பு
பாதிப்பு
பா
பா
பா
3.
பா
பாதிப்பு
0
பாதிப்பு
பா
பா
பா
4.
பா
பாதிப்பு
பாதிப்பு
0
பா
பா
பா
5.
பா
பாதிப்பு
0
பாதிப்பு
பா
பா
பா

இந்த அட்டவணையில்  பா - என குறிப்பிடப்பட்டது பாதிப்பு என்றும், 0 பாதிப்பில்லை
என்று எடுத்துக்கொண்டால் பாதிப்புகளே அதிகம் இருப்பதைக் காணலாம்.

ஜாதகம்  5










 புத
சூரி
சந்


சுக்

கேது
செவ்



பாரத பிரதமர்
இராஜீவ்காந்தி.
22.1991.
அமாவாசை
14 05  1991
காலை 10.06.
லக்,குரு 
  சனி



இராகு