Sunday, June 1, 2014

கிரகப் பெயர்ச்சி பலன்கள்




2014 – குருஇராகுகேதுபெயர்ச்சி பலன்கள்


சுக்
கேது
சூரி
புத


13 – 6 – 2014
வைகாசி – 30
வெள்ளி
தனுசு=சந்.பகல் 1.39. மணி
கடக குரு=மாலை 5.57 மணி.
குரு


சந்

சனி
இராகு
செவ்

         குருப் பெயர்ச்சி : ஜய வருஷம் வைகாசி மாதம் 30 ஆம் நாள் (13 – 6 – 2014) வெள்ளிக் கிழமை நாழிகை 30 – 08 மாலை மணி 5 – 57 க்கு புனர்பூச நட்சத்திரம் 3 ஆம் பாதம் மிதுன இராசியில் இருந்து புனர்பூசம் 4 ஆம் பாதம் கடக இராசியில் வாக்கியப்படி பிரவேசிக்கிறார்.

சந்
கேது
சுக்
புத
சூரி

21 – 6 – 2014
ஆனி – 7- சனி
மேஷ = சந்.இரவு 1.33. மணி
கன்னி இராகு,மீனக் கேது =பகல்11.12 மணி.
குரு




சனி
இராகு
செவ்

         குரு 2, 5, 7, 9, 11 ஆகிய இராசிகளில் சுப பலன் தருகிறார். மற்ற இராசிகளில் அசுப பலன்களே ஏற்படுகின்றது. “குரு பார்க்கக் கோடி நன்மைஎன்பது சான்றோர் வாக்கு. எனவே, தேவகுருவான , குரு, இருக்கும் இடத்தைக் கெடுத்து, பார்க்கும் இடத்தை வளர்ப்பார், பெருக்குவார் என்பது நாம் அறிந்த ஒன்றே.

           ஒரு ஜாதகருக்குப் பிறப்பு முதல், குரு சுமார் 5 முதல் 7 பரியாயங்கள் வரை வரலாம். குரு, ஜாதகருக்கு, எத்தனையாவது பர்யாயம் என்பதைப் பொருத்து, பலன்கள் மாறுபடும். மேஷம் முதல் மீனம் வரை ஒரு பர்யாயம் எனக் கணக்கிடப்படுகிறது.

           முதல் பர்யாயம் ( முதல் சுற்று ) ; சந்திரா இலக்னத்துக்கு 8 இல் குரு வரும் போது, பலன் மரண பயம் என்றாலும், குழந்தை பிறந்தது முதல் 12 வருடச் சுற்றில் தந்தைக்கு தனலாபம் உண்டாகும். ஒன்பதாவது இராசியில் வரும் போது, மூத்த உடன் பிறப்புக்கு நற்பலன் ஏற்படும்.

          இரண்டாவது சுற்றில்மேஷ, ரிஷப இராசிகளில் பயணிக்கும் போது மங்களம் உண்டாகும்.

          மூன்றாவது பர்யாயத்தில், சந்திரா இலக்னத்தில் இருந்து 1, 4, 5, 7, 9, 10, 11, 12 ஆகிய இராசிகளில் பயணிக்கும் போது சுப பலன்கள் நடக்கும்..

          நான்காவது சுற்றில், ஜன்ம குரு அரசர் மற்றும் அரசு பகையையும், தனபாவத்தில் தன ஆதாயங்களையும், சுக பாவத்தில், சுக சௌக்கியங்களையும், பாக்கிய ஸ்தானத்தில் சகல சம்பத்தையும், 11, 12 இல் சௌபாக்கியங்களையும் தருவார்.

          ஐந்தாவது பரியாயத்தில்ஜன்ம இராசியில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் மனக் கிலேசமும், தன பாவத்தில்தன வரவையும், 3, 4 ஆகிய பாவங்களில் சுப பலனையும் தருவார்.

       இராகுப் பெயர்ச்சி : ஜய வருஷம் ஆனி மாதம் 7 ஆம் நாள் (21 – 6 – 2014) சனிக் கிழமை நாழிகை 13 – 12 பகல் மணி 11 – 12 க்கு சித்திரை நட்சத்திரம் 3 ஆம் பாதம் துலா இராசியில் இருந்து சித்திரை 2 ஆம் பாதம் கன்னி இராசியில் வாக்கியப்படி பிரவேசிக்கிறார்.

          இராகுவின் பலனில் தீமைநிலை மற்றும் உலக இன்ப நாட்டம் அதிகம் காணும்.

       கேதுப் பெயர்ச்சி : ஜய வருஷம் ஆனி மாதம் 7 ஆம் நாள் (21 – 6 – 2014) சனிக் கிழமை நாழிகை 13 – 12 பகல் மணி 11 – 12 க்கு அஸ்வினி நட்சத்திரம் 1 ஆம் பாதம் மேஷ இராசியில் இருந்து ரேவதி 4 ஆம் பாதம் மீன இராசியில் வாக்கியப்படி பிரவேசிக்கிறார்.

         கேதுவின் பலனில் நன்மைகள், தெய்வீக, ஆன்மிக சிந்தனைகள், இம்மை-மறுமை இரண்டையும் வெற்றிபெறச் செய்தல் ஆகிய நன்மைகள் ஏற்படும்.

மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1,2,3,4 பாதங்கள்)

    தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷராசி அன்பர்களே!

         குரு மேஷ இராசிக்கு பாக்கியம் மற்றும் விரய பாவாதிபதியாகி, சுக பாவமான  4 இல் அமர்ந்து, ரஜத மூர்த்தியாகி 25 சதவிகித நற்பலன்களைச் செய்கிறார். “தரும புத்திரர் நான்கிலே வனவாசம் அப்படிப் போனதும் ”- என்றபடி சிலருக்கு வெளியிடத்தில் சென்று வசிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். தந்தை மூலம் ஆதாயம் உண்டு. பங்குச் சந்தை முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. டிசம்பர் மாதத்தில் மட்டும் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு வரலாம். குரு, 8, 10, 12 ஆம் பாவங்களைப் பார்ப்பதால், எதிர்புகள் மறையும். நண்பர்கள் உதவுவர். ஜீவன சுகம், தொழில் மேன்மை, புகழ், கௌரவம் சிறக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். திருச்செந்தூர் முருகனை வழிபடத் திருப்பங்கள் ஏற்படும்.

         இராகு ஜூலைக்குப் பிறகு நன்மை தருவார். உபரி வருமானங்கள், வேற்று மதப் பெண் தொடர்பு ஏற்படலாம். கேதுசிலருக்கு சந்நியாசம் பெறும் எண்ணம் ஏற்படலாம். மற்ற காலங்களில் இராகு- கேதுவின் தீமைகள் குறைந்து, நன்மைகள் பெருக ஒரு முறை காளஹஸ்தி சென்று வரலாம்மொத்தத்தில் இவ்வருடம் 50 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

ரிஷபம்

( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

   களத்திரகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே!

         இந்த இராசிக்காரர்களுக்கு உலோக மூர்த்தியாக வரும் குரு 15 சதவிகித அளவுக்கு சுமாரான பலன்களைத் தருவார். மங்கள காரியங்கள் நடக்கும், பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கிராம அதிகாரம், அரசு பதவிகள் கிடைக்கும். சிலருக்குக் குறிக்கோளற்ற அலைச்சல்களால் உடல் அசதி அதிகரிக்கும். பிறருக்குக் கட்டளையிடும் அரசு உயர் பதவி கிடைக்கும். நல்ல சந்ததிகள் உருவாகும். 7, 9, 11 ஆம் பாவத்தைப் பார்க்கும் குரு, திருமணத் தடைகள் நீக்கித் திருமண வாழ்வு தருவார். கூட்டுத் தொழில் இலாபம் தரும். புனித யாத்திரை மற்றும் மகான்களின் தரிசனம் கிட்டும். புதிய வீடு, வாகன சுகம் கிடைக்கும். குருமார்கள் மற்றும் ஆசிரியர்களை வணங்கத் துன்பங்கள் குறையும்.

         இராகு அவமானங்களையும், விரோதம் மற்றும் புத்திர தோஷத்தையும் தருவார். ஞான மார்க்கத்தில் ஈடுபாடு தரும் கேது, வியாபாரத்தைப் பெருக்குவார். பதவி உயர்வு மற்றும் அரசாங்கத்தில் அதிக வருமானம் ஆகியவற்றை எதிர் பார்க்கலாம், வாக்குச் சுத்தம் இருக்கும். அரசன் போல் வாழ்வார்மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
மிதுனம்

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

    கல்விக் காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனராசி அன்பர்களே!

         13– 6– 2014 இல் கடகத்துக்கு மாறும் குரு தாமிர மூர்த்தியாகி 75 சதவிகித நற்பலன்கள் தருவார். களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தானாதிபதியான அவர் தன பாவத்தில் அமர்ந்து, இதுநாள்வரை இருந்து வந்த இன்னல்களை நீக்கி இன்பம் தருவார். செல்வம் சேரும். அழகும் பொலிவும் கூடும், வாக்குவன்மை அதிகரிக்கும். புத்தி தெளிவும், அறிவுக் கூர்மையும் ஏற்படும். பெயரும் புகழும் ஓங்கும். வேலை இல்லாது இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு ஆண் சந்ததி ஏற்படலாம். பதவி, அந்தஸ்து உயரும். அவர் 6, 8, 10 ஆம் பாவங்களைப் பார்ப்பதால், ஆரோக்கியம் சீர்படும். எதிர்ப்புகள் மறையும். கஷ்டம் தரும் எட்டைப் பார்க்கக் கஷ்டங்கள் அனைத்தும் பஞ்சாய்ப் பறக்கும். தொழில் மேன்மை அடைவது உறுதி. புதிய வாய்ப்புக்கள் கதவைத் தட்டும். வியாழக்கிழமை விரதம் பலன்தரும்.

         இராகு அதிக செலவுகளையும், தூக்கமின்மையையும், விரோதத்தையும் தருவார். எதிலும் முன்னெச்சரிக்கை தேவை. கேது, பணவரவும் இலாபமும் தருவார். சிலர் போலித் துறவியாவர். வேள்வி மற்றும் யாக காரியங்கள் செய்வர். சிலர் மடாதிபதிகள் அல்லது மதத்தலைவர் ஆகலாம். மொத்தத்தில் 75 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.


கடகம்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

   தாய்க்குக் காரகனான சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக இராசி அன்பர்களே!

         ருண மற்றும் பாக்கிய அதிபாதியான  குரு, ஜன்ம குரு ஆனாலும், சுவர்ண மூர்த்தியாகி  கடகத்தில் பிரவேசிப்பதால் மாறுபட்ட நல்ல பலன்களே ஏற்படும். குரு பார்க்கக் கோடி நன்மையென்பதால், மனைவி மக்களுடன் வாழ்க்கை மகிழ்ச்சியாகக் கழியும். புத்தி சாதுர்யமும், அறிவும் விருத்தியாகும். அரசு மூலம் வெகுமதிகள் கிடைக்கும்சிலர் இராஜ தந்திரத்தால் அரசியலில் உயர் பதவிகளை அடைவர். 5, 7, 9 ஆம் இடங்களைப் பார்வை புரியும் குரு, புத்திர பாக்கியம் தருவார் சிலருக்குப் பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கலாம். வேத, மந்திர உபதேசம் பெறும் உயர்ந்த நிலை ஏற்படும். தடைப்பட்ட திருமணங்கள் நடைபெறும். மகிழ்ச்சிகரமான மண வாழ்க்கை அமையும். உற்ற நண்பர்கள் உறுதுணையாய் இருப்பர். தந்தை, மகனிடையே இருந்து வந்த மனக் கசப்புகள் தீரும். தெய்வ தரிசனம், தெய்வீகப் பயணங்கள் தேடிவரும்.

         இராகுவால், பிரிவினையால் ஏற்பட்ட சோகங்கள் மாறும். இனி தனவரவு ஏற்படும். மனோதைரியம் ஓங்கும். பல வழிகளிலும் சுக சௌக்கியங்கள் ஏற்படும். சிலருக்கு வேற்றுப் பெண் உறவு ஏற்படலாம். புதுப்புது பதவிகள் கிடைக்கலாம். கேது 9 இல் வர பிறர் சூழ்ச்சிக்கு ஆளாக நேரலாம். எச்சரிக்கை தேவை. ஞானத்திலும், தவத்திலும் நாட்டம் ஏற்படும். சிலர் ஏமாற்றும், கபட சந்நியாசியாக மாறலாம்.. நல்ல குரு வாய்க்கப் பெற்று அதனால் ஆன்மிக வழியில் அறிவுத்தெளிவு ஏற்படும்மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
சிம்மம்

( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

    தந்தை காரகனான சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்மராசி அன்பர்களே!

         சிம்மத்திற்கு 12 ஆம் இடத்தில்  ரஜத மூர்த்தியாகப் பிரவேசிக்கும் குரு 25 சதவிகித நற்பலன்களைத் தருவார். பூர்வ பண்ணியம் மற்றும் ஆயுள் ஸ்தானாதிபதி குரு விய பாவத்தில் அமர்வு. இதனால் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். 8 ஆம் அதிபதி 12 இல் அமர விபரீத இராஜ யோகமும் ஏற்படுகிறதுசிலருக்குப் பெண்ணால் அவமானம் நேரலாம். வெளிநாட்டுப் பயண வாய்ப்புக்கள் ஏற்படலாம். 4, 6, 8 ஆம் பாவத்தின் மீதான பார்வை, தாய்க்கு ஆரோக்கியத்தைத் தரும். பழைய வீடுகள் வாங்க, விற்கச் சரியான நேரமிது. எல்லாவற்றிலும் அச்ச உணர்வும், தயக்கமும் ஏற்படும். தேவையென்று வரும்போது கையிலிருக்கும் பணம் கூட உதவாமல் போகும். தான தர்மமெனக் கைப் பணம் கரையும்.

         இராகு, குடும்பத்தில் குழப்பங்களைத் தருவார். ஏவல், செய்வினை போன்ற தொல்லைகள் எழலாம். கேது ஆரோக்கியக் குறைவைத் தருவார். ஒழுக்கக் குறைவு ஏற்படும்.காளகஸ்தி சென்றுவரக் கவலைகள் குறையும். மனைவியின் அரவணைப்பு ஆறுதல் தரும். மொத்தத்தில் இவ்வருடம் 50 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

கன்னி

( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

    புத்தி காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட கன்னிராசி அன்பர்களே!

         தங்கள் இராசிக்கு குருவின் பொதுப்பலனுடன் உலோகமூர்த்தி பலனும் இணைந்து 75 சதவிகித நற்பலன்களைத் தருகிறார். சுக மற்றும் களத்திர ஸ்தானாதிபதியான குரு இலாப ஸ்தானத்தில் அமர்வு. இதன் காரணமாக அரசியல் அதிகாரம், அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும். பாக்கியம் பெருகும். பெரும்புள்ளிகள் சிலர் அறிமுகமாகி அதனாலும் முன்னேற்றமடைவர். சொகுசு கார் போன்ற வாகனங்கள் கிடைக்கும். பல வழிகளிலும் பணம் வந்து சேரும். வங்கி சேமிப்புக்கள் உயரும். குரு 3, 5, 7 ஆம் இடங்களைப் பார்ப்பதால், காரிய வெற்றியும், சகோதரர்களிடம் மதிப்பும் உண்டாகும். தைரியமும், தன்னம்பிக்கையும் உயரும். குழந்தைகள் மூலமாக நன்மைகள் ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமணம் நடக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகள் ஏற்படும். மனைவியால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டுத் தொழில் சிறக்கும். சங்கரன்கோவில் சென்றுவரச் சங்கடங்கள் தீரும்
         
         ஜன்ம இராகு பெற்றோருக்கு ஆரோக்கிய குறைவையும், களத்திரபாவ கேதுவால், சிலருக்கு முறைமீறிய காதல் ஏற்பட்டு, கட்டாயத் திருமணத்தில் முடியலாம்.  குணம் கெட்ட பெண்ணுடன் தொடர்பு ஏற்படும். மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.


துலாம்

(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

அசுர குருவான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாராசி அன்பர்களே!

         குருவின் தசம கேந்திர பிரவேசத்தால் மரியாதைக் குறைவு, பொருள் இழப்பு, இடமாற்றம், உயர் அதிகாரிகளின் அதிருப்தி என மாறுபட்ட பலன்களாகவே அமைந்தாலும், தனது உச்ச இராசிப் பிரவேசத்தால் இப் பலன்கள் மட்டுப்படும். மேலும் துலாராசிக்குரிய பொதுப்பலன் பூஜ்யமாகி, அவர் தாமிர மூர்த்தியாகி வருவதால் சுமார் 12 சதவிகித பலன்களை மட்டுமே அளிக்கிறார். சகோதர மற்றும் ருண பாவாதிபதி குரு கர்ம பாவத்தில் அமர்ந்தால், பிறர் தயவை எதிர் பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். குரு பார்வை செய்யும் இடங்களான 2, 4, 6 ஆம் இடங்கள் தரும் பலனால், சுப காரியங்கள் இனிதே நடக்கும். வாக்குவன்மை மேன்மை அடையும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கல்வி நிலை உயரும். உயர் படிப்புக்கான வாய்ப்புக்கள் அமையும். உறவுகளால் நன்மை உண்டு. வம்பு, வழக்குகளில் வெற்றி கிட்டும். மதுரை மீனாட்சி கோவில் குருவை வணங்க மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

         இராகு, கன்னியில் கால் பதிக்கும் காலத்தில் ஜாதகருக்கு மறைபொருள் விஞ்ஞானத்தில் ஆர்வத்தையும், அதனால் இலாபத்தையும் அளிக்கிறார். சயன சுகம் கெடும். ஆனால் கேதுவின் மாற்றம் குடும்பக் குழப்பத்தையும், வழக்கு வியாஜ்யங்களயும் அதன் காரணமாக அதிகரிக்கும் செலவினங்களையும் தந்தாலும், குருவின் பார்வை அவற்றை மட்டுப் படுத்தும் என்றால் மகிழ்ச்சிதானே ! மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

விருச்சிகம்

( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

         தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக இராசி அன்பர்களே!

         அலைச்சல் மிக்க பயணங்களையும், பாதக நிலைகளையும் அளித்துக் கொண்டிருந்த குரு, தனம் மற்றும் புத்திர பாவாதிபதி ஆகி, பாக்கிய பாவமாகிய கடகத்திற்கு மாறும் காலத்தில் இதுநாள் வரை இருந்து வந்த இன்னல்களை நீக்கி எல்லா முன்னேற்றங்களையும் தந்து இன்பமுறவும், ஈடு இணையற்ற புகழை அடையவும், வீட்டில் இன்பமும் மகிழ்ச்சியும் பொங்கி வழியவும் ரஜத மூர்த்தியாகி அருள்பாலிக்கிறார். மூர்த்தி நிர்ணயபலன் 25 சதவிகிதமும், குருவின் பொதுப்பலனாக 50 சதவிகிதமும் இணைந்து 75 சதவிகித பலன் தந்து விருச்சிகத்தாருக்கு ஏற்றம் தருகிறார். இதன் காரணமாக இராஜ தந்திரத்தால் அரசியலில் நல்ல பதவிகள் கிடைக்கும். ஆசாரம் மற்றும் ஒழுக்கம் கூடும். இராஜயோகம் உண்டாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மற்றவர்கள் இவர் கட்டளைக்கு அடிபணியும்படியான அதிகார பதவிகள் வந்து சேரும். 1, 3, 5 ஆகிய பாவங்களின் மீதான பார்வை தரும் பலன், தங்கள் மதிப்பு மரியாதை உயரும். வாழ்க்கையில் எதிர்பார்த்த நல்ல முன்னேற்றங்கள் சாத்தியமாகும். பயணங்களால் நன்மை உண்டு.

         இராகு, மூத்த சகோதரரால் மற்றும் நெருங்கிய நண்பர்களால் ஆதாயம் தருகிறார். நல்ல சுவையான உணவு வகைகளை உண்டு மகிழ்வர். பணவரவு பல வழிகளிலும் மேலும் பெருகும். மனைவி, மக்களின் ஆரோக்கியம் பெருகி, புதுப் பொலிவுடன் திகழ்வர். கேது துவக்கத்தில் வேலை மூலமாக, தொழிலாளர் மூலமாக மற்றும் உதவியாளர் மூலமாக இலாபம் தருகிறார். பின்னர் சில பெண்களுக்குக் கருச்சிதைவை ஏற்படுத்திவிடுகிறார். ஞானகாரகன் ஆவதால் புத்தி தெளிவையும், செயல் திறனையும் அதிகமாக்குவார். மொத்தத்தில் இவ்வருடம் 70 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
தனுசு

 ( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் –1,2 பாதங்கள்)

தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட தனுர் இராசி அன்பர்களே!

         தனுசு இராசி அன்பர்களுக்குப் பொதுப்பலன் பூஜ்யமாக இருந்தாலும், சுவர்ண மூர்த்தியாகி 50 சதவிகித பலன்களைத் தரவல்லவர் குரு. இலக்னம் மற்றும் சுக பாவாதிபதியாகி, ஆயுள் பாவத்தில் அமர்ந்துள்ளார்சத்துருக்களை நாசம் செய்த வாலியே, இராசிக்கு 8 இல் குரு வந்த போது கோதண்ட இராமனின் அம்புக்குப் பலியானார்.  ஆரோக்கியத்தில் அலட்சியம் கூடாது. பணிபுரியும் இடத்தில் கடமை தவறாது நடத்தல் அவசியம். நல்ல நண்பர்களின் தொடர்பு நலம் பயக்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைத்தல் அரிது. அரசு மூலம் வெகுமதிகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும். பின்னர் கீழ்நிலையில் உள்ளவர்கள் உடனான சினேகத்தால் அவமரியாதை ஏற்படும். 12, 2, 4 ஆம் பாவாத்தின் மீதான குருவின் பார்வையால், வீண் விரையச் சுபச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். வாக்குவன்மை உயரும். தாயாரின் ஆரோக்கியம் சிறப்படையும். வீடு, நிலம் வாங்க, விற்க அனுகூலமான காலமாகும். ஆலங்குடி குருவைத் துதிக்க அனைத்தும் சுபமே.

         இராகு பலவகையில் புகழ் மற்றும் சுகத்தை அதிகரிக்கிறார். காசியாத்திரை செல்லலாம். கேது சூதாட்டத்தில் பொருள் இழப்பைத் தருவார். தொடைப் பகுதியில் உபாதைகளைத் தருவார். வீண்பயம், சந்தேகம், பாதத்தில் ரோகம் ஆகியவை ஏற்படும். சிலருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டுத் துறவு நிலை ஏற்கும் எண்ணம் ஏற்படும். மொத்தத்தில் இவ்வருடம் 55 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

மகரம்

( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

கர்மகாரகனான சனியை அதிபதியாகக் கொண்ட மகரராசி அன்பர்களே!

      குரு, விய மற்றும் தைரிய பாவாதிபதி ஆகி, களத்திர பாவமான கடகத்தில்  உலோக மூர்த்தியாகப் பிரவேசிக்கும் காலத்தில் பொதுவான பலனும், மூர்த்தி நிர்ணய சிறப்பு பலமும் இணைந்து 60 சதவிகிதம் நற்பலன்களை அளிக்கிறார். இதன் காரணமாக மனைவி மூலமாக பூரண சுகம் கிடைக்கும். அரசு மூலம் வெகுமானம் கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி உண்டாகும். கணவனுக்கு அடங்கிய மனைவியாக இருப்பாள். அரசு மூலம் பரிசுகள் கிடைக்கும். பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். அதிகமாக செல்வம் சேரும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். 11, 1, 3 ஆம் இடத்தின் மீதான பார்வையால் இலாபம் பெருகும். அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வுகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். பயணங்கள் நன்மை தரும். திருவானைக்காவல் குருவை வணங்க தீராத வினைகள் தீரும்.

         இராகு முயற்சிகளைத் தடை செய்வார். பிரிவுகளால் மன அமைதி கெடும். மாந்த்ரீகம், பில்லி, சூனியம் போன்ற வித்தைகளில் ஈடுபாடு ஏற்படும். கேது எல்லாவற்றிலும் வெற்றி தருவார். பணவரவு அதிகரிக்கும். அரச வாழ்வு வாழும் நிலை ஏற்படும். சொன்ன சொல் தவறமாட்டார். மொத்தத்தில் இவ்வருடம் 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
கும்பம்

( அவிட்டம் – 3,4 பாதங்கள்சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

கர்ம பாவ காரகனான சனியை அதிபதியாகக் கொண்ட கும்பராசி அன்பர்களே!

          தன மற்றும் இலாப பாவாதிபதி ஆகி ருண பாவ சஞ்சார காலத்தில் வெற்றி ஸ்தானத்தில் பொதுப்பலன் குறைந்து, சுவர்ண மூர்த்தி பலத்துடன் 50 சதவிகித நற்பலன்களைத் தருகிறார் குரு. சிலருக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். ஏமாற்றங்கள், மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை, கணவன் மனைவிக்கிடையேயான ஊடல்கள் ஆகியவை தவிர்க்கமுடியாத நிகழ்வுகளாகும். ஆயினும் குரு சுவர்ணமூர்த்தியாக இருப்பதால் பாதக பலன்கள் மட்டுப்பட்டு சாதக பலன்களாக அமையும். 10, 12, 2 ஆகிய பாவங்களின் மீதான குருவின் பார்வை, தொழில் தடைகளை அகற்றி முன்னேற்றம் தரும், தேங்கிய பொருட்கள் விற்பனையாகி வருமானம் பெருகும். காரிய வெற்றி, அரசால் இலாபம் ஏற்படும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். வீடு, நிலம், வாகனம் ஆகியவை அபிவிருத்தி ஆகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் உயரும். கல்வியில் உயர்வு உண்டு. திருக்கடையூர், அமுதகடேஸ்வரர் ஆலயத்தில் குருவை வணங்க நன்மை பயக்கும்.

         இராகுவால் அவமானம், பிரிவு ஏற்படும். கேதுவால் தரங்கெட்ட உணவு உட்கொள்ள நேரும்மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்

மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

    தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே!

          குரு, இராசி மற்றும் கர்ம பாவாதிபதி ஆகி புத்திர பாவத்தில் அமரும் காலங்களில் மனைவி மக்களுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழியும்வீட்டில் மங்கள சுபகாரியங்கள் இனிதே நடந்து மகிழ்ச்சி நிலைத்திருக்கும். குரு தாமிர மூர்த்தியாகி பிரவேசிப்பதால் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் நட்பு ஏற்படும். புகழ் அதிகரிக்கும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். சிலருக்கு அரசு உத்தியோகம் கிடைக்கலாம். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். 9, 11, 1 ஆகிய பாவங்களின் மீதான பார்வை, உத்தியோக உயர்வு, விரும்பிய இடத்திற்கு இடமாற்றம், மதிப்பு மரியாதை கூடுதல், தீர்த்த யாத்திரைகள், தொழில் முன்னேற்றம், எதிர்பார்த்ததைவிட அதிக இலாபம் ஆகியவை ஏற்படும். இராமேஸ்வர புனித யாத்திரை இன்பத்தைப் பெருக்கும்.

         இராகுவால் பரதேச வாசம் ஏற்படும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். வயதில் மூத்த பெண்கள் நட்பு ஏற்படலாம். கேதுவால் அவதிகள் அதிகமாகும். விபத்தைத் தரலாம். உஷ்ண சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம். எனவே எச்சரிக்கை தேவை. கேதுவால், பக்தியால் ஞானம் மேலிடும். மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.


                 --- ஜோதிட ப்ரவீணா. எட்டயபுரம். எஸ். விஜயநரசிம்மன்.
                                           எம். எஸ்ஸி. (அப்ளைடு அஸ்ட்ராலஜி).





0

Saturday, May 17, 2014

அறுவை சிகிச்சைக்கான, அனுகூலமான முகூர்த்தம்.






அறுவை சிகிச்சைக்கான, அனுகூலமான முகூர்த்தம்.

      கடவுளின் புகழ் இந்த பிரபஞ்சத்தில், சூரியக் குடும்பத்தின் மூலமாகப் பிரதிபலிக்கப்படுகிறது. மனித வாழ்க்கை மீதான, சூரியன், அதன் உபக்கிரகங்கள், கிரகங்கள் மற்றும் நட்சத்திரக் கூட்டங்களின் கண்காணிப்பில், அவற்றின் அசைவுகள் மற்றும் தாக்கங்கள் மூலமாக, இறைவன் நடத்தும் நாடகமே மிக மாயா வினோதமானது.

      மனித குலத்தின் நன்மைக்காக, உலகத்தில் எவராலும் நம்பமுடியாத, தங்களின் ஞான திருஷ்டியால் உணர்ந்த பிரபஞ்ச சக்தியை, நமது முன்னோர்களாகிய, முனிவர்கள், ஜோதிடம் என்னும் பேரறிவின் மூலமாக உலகுக்கு அளித்தார்கள்.

      நாளடைவில், அவர்களால் அளிக்கப்பட்ட இப் பொக்கிஷங்கள், காலப்போக்கில் சிறிது சிறிதாகக் காணாமல் போயிருந்தாலும், பல துல்லியமான தகவல்கள்இந்த ஜோதிடக் கலையில் மிக்க ஆர்வம் உள்ளவர்களாலும் மற்றும் அதன் காரண காரிங்களை அலசி ஆராய முற்பட்டவர்களாலும் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டது என்றால் மிகையாகாது.

      இந்தக் கட்டுரையில் நாம், வெற்றிகரமாக அறுவை சிகிச்சைகள் முடிந்து, ஆரோக்கிய வாழ்க்கையை அடைவதற்கான, சரியான நல்ல நேரத்தை, சிறந்த முகூர்த்தத்தை அறியும் நுணுக்கங்களைப் பற்றிய, தகவல்களை அலசுவோம்.

      அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவதற்கான முகூர்த்தத்தைக் குறித்துத் தருவதோடு மட்டுமன்றி, அவர்கள் விரைந்து குணமாவதற்குத் தேவையான பரிகார முறைகளையும் கூறுவது ஜோதிடரின் கடைமையாகிறது.

      முதலில், நாம் ஒருவன் ஆரோக்கியத்தைப் பாதிக்கக் கூடிய, கிரக நிலைகள் என்ன ? அதற்கான காரணிகள் என்ன ?, அது அறுவை சிகிச்சை வரைக் கொண்டு செல்லுமா ? – என்பதை எல்லாம் ஆராய வேண்டும். ஒரு நோயாளியைக் குணப்படுத்த சாதாரணமாக வேறு வழியின்றிப் போகும் போது, கடைசியாக எடுக்கப்படுவதே அறுவை சிகிச்சைக்கான முடிவாகும்.

      ஒருவருக்கு வரக்கூடிய நோயின் தன்மை மற்றும் அதன் பாதிப்புகள் அனைத்தும், எந்த அளவுக்கு அவரின் ஜாதகத்தில் உள்ள குறிப்பிட்ட இராசி அல்லது இராசிகள் மற்றும் அதிலுள்ள கிரகங்கள் பாதிப்பு அடைந்துள்ளன என்பதைப் பொருத்தே அமைகிறது

       “ பிரஹத் ஜாதகத்தில்ஒளிக்கிரகங்களான, சூரிய, சந்திரர்களில் இருந்து     7 ஆம் வீட்டை எப்போது, செவ்வாயும், சனியும் அலங்கரிக்கிறார்களோ அப்போது ஜாதகருக்கு நோயால் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த இரு அசுபக் கிரகங்களும், ஒளிக்கிரகங்கள் மீது தங்கள் தாக்கத்தை அதிகரிக்கும் போது, அத்தகைய ஜாதகருக்கு, இறப்பு விரைவிலேயே நிகழும்எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

        இலக்னத்தின் மீதான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அசுபக் கிரகங்களின் ஒன்றிணைந்த, அவற்றின் இணைவு அல்லது பார்வைகள் மூலமான தாக்கம் காரணமாக, ஜாதகரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோயை உற்பத்தி செய்யக்கூடிய தன்மை அதிகரிக்கிறது.

        இலக்னத்தில் இருந்து ஆறாம் வீடு, முக்கியமாக ஜாதகரின் ஆரோக்கிய நிலையை குறிகாட்டுகிறது. கிரகங்களின் இயற்கைத் தன்மை மற்றும் இராசியிலும், நவாம்சத்திலும் அது இடம்பெற்றுள்ள நிலை, ஆகியவையே, ஜாதகரின் நோயின் வகை, அளவு மற்றும் அதைக் குணப்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கின்றன. மேலும், துல்லியமாக அறிய, அவற்றின் தசா, புத்தி மற்றும் கோசார நிலைகளின் தொடர்பு ஆராயப்பட வேண்டும்.

        இத்தகைய விம்சோத்ரி தசா,புத்தி மற்றும் கோசார ஆய்வு, ஜாதகருக்கு, அறுவை சிகிச்சை தேவைப்படுமா ? அதன் பிறகு அவரின் ஆரோக்கியம் சீராகி, உடல்தேறி நல் வாழ்வு வாழ்வாரா ? – என்பதற்கான அறிகுறிகளைத் தெளிவுபடுத்தும்.

        இலக்னத்தோடு இணைந்த, பார்த்த மற்றும் தொடர்புடைய அசுபக் கிரகங்கள், ஜாதகருக்கு நோய் மட்டுமன்றி, விபத்து மற்றும் அதன் காரணமாக வாழ்க்கையில் ஏற்படும்  பின்னடைவுகள் தரும், தீவிர மன உளைச்சல் ஆகியவற்றையும் தருகிறது. இந்த மன உளைச்சல்கள் அனைந்தும் ஓன்றிணைந்து, அவரின் நோயை அதிகரிக்கச் செய்கிறது. ஏனெனில், மனமே நம் முழு உடலையும், கண்காணித்துக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு அறையாகும்.

       முக்கியமாக, அசுப இராசிகளில் இடம்பெற்றுள்ள அசுபக் கிரகங்களின், கெடுதல் செய்யும் தசாக் காலங்கள், ஜாதகருக்கு இன்னல்களை அளித்து, வைத்தியச் செலவுக்கான, பொருள் இழப்பையும் ஏற்படுத்துகிறது. செவ்வாய், சனி மற்றும் இராகு போன்ற தற்காலிக அசுபக் கிரகங்களே நோயை உருவாக்கும் மையங்களாகின்றன.  7½ சனி மற்றும் அஷ்டமச் சனி போன்ற காலங்களில் அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பு ஏற்படலாம் என்று பலன் காணலாம்.

       மேலே சொல்லப்பட்ட அசுபக்கிரகங்களின், ஒரு இராசியின் மீதான இணைந்த தாக்கங்கள் ட்யூமரை ஏற்படுத்துவதோடு, அது கடைசியில் தீவிரமாகும் போது புற்றுநோயாக மாறி, அந்தக் கட்டிகளை அகற்ற, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலைக்குக் கொண்டு செல்கிறது.

       இராகு மற்றும் செவ்வாய் போன்ற அசுபக் கிரகங்களின் தசா அல்லது புத்தி நடைபெறும் காலங்களில், அறுவை சிகிச்சைக்கான வாய்ப்புக்கள் உருவாகின்றன. சந்திரன் மற்றும் சுக்கிரனின் தீவிர பாதிப்புக்கள், பெண்களுக்கு கற்ப சம்பந்தமான பிரச்சனைகள், ரத்தப் போக்கு போன்ற பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சைக்கான நிலையை ஏற்படுத்தலாம்.

       இரண்டாம் வீடு பாதிப்பு அடையும் போது முகத் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட, ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.

       சில நேரங்களில் 12 மற்றும் 6 ஆம் பாவங்களில் அமர்ந்த கிரக தசா ஆரம்பமாகும் போது, ஏற்படும் மருத்துவச் செலவு போன்ற விரயச் செலவுகள் ஏற்படும் முன், ஜாதகரை வீடு வாங்குதல் அல்லது கட்டுதல் போன்ற செலவுகளை செய்யச் சொல்லி, ஆலோசனை அளித்து, ஜோதிடர்கள்  அவர்களைக் காக்கலாம்.

       செவ்வாய் மற்றும் சுக்கிரனின் ஈடுபாடு, சில நேரங்களில் விபத்தைத் தந்து அதன் காரணமாக பாதிக்கப் பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையை உருவாக்கலாம். இது போன்ற அவசர சூழ்நிலைகளில், அறுவை சிகிச்சைக்கான நல்ல நேரத்தைத் தீர்மானிக்க இயலாது. முன்னரே ஜாதகத்தைக் காட்டி ஆலோசனை கேட்டிருந்தால், விபத்து ஏற்படும் நிலையைக் கூறி எச்சரித்து இருக்க முடியும்.

        இராகு திசை அல்லது மாரக கிரக திசைகளில் கோசார இராகு, சனி மற்றும் செவ்வாய் ஆகிய இவற்றின், ஒன்றிணைந்த ஜனன ஜாதகப் பாதக நிலையில் இருந்து அவரைக் காப்பாற்ற அல்லது கஷ்டங்களைக் குறைக்க அறுவை சிகிச்சைக்கான சூழலை உருவாக்கி விடுகிறது
 
        மற்றபடி சாதாரண காலங்களில், அறுவை சிகைச்சை வெற்றி பெறுவதற்கான நல்ல முகூர்த்தத்தை மருத்துவரின் ஆலோசனைப் படியும் குறிப்பது நல்லது. சில மருத்துவர்கள், பாதிக்கப்பட்டவரையே அறுவை சிகைச்சைக்கான அனுகூலமான நேரத்தைக் குறித்து வரக் கேட்டுக் கொள்வதும் உண்டு. அப்படிக் கேட்கப்படும் போது நல்லநேரம் குறிக்கப் பார்க்க வேண்டிய, அடிப்படை விஷயங்களாவன ----

1.   ஜன்ம நட்சத்திரத்திற்கும், அன்றைய நட்சத்திரத்திற்கும் உரிய தாராபலம் பார்க்க வேண்டும்.
2.   சந்திர பலம் பார்க்க வேண்டும்.

3.   பஞ்சகம்பார்க்கப்பட வேண்டும்.

4.   அறுவை சிகிச்சைக்கு முக்கியமாக மிருத்தியு பஞ்சகம் மற்றும் ரோக பஞ்சகம் கூடாது. ஏனெனில் இந்த நேரங்கள் மரணத்தைத் தரவோ அல்லது சிகிச்சைக்குப் பிறகு சுகம் பெறக் காலதாமதத்தையும் ஏற்படுத்தலாம்.

5.   திதிபௌர்ணமி திதி கூடாது. ஏனெனில் அன்று இரத்த ஓட்டம் அதிகரிப்பதன் காரணமாக, இரத்த விரயம் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால் மேலை நாட்டவர்கள் இந்த நாளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்துக்கள் அமாவாசை நாளை நல்ல நாளாகக் கருதுவது இல்லை.

6.   ஆயுதங்களையும், அறுவை சிகிச்சை நிபுணரையும் குறிக்கும் செவ்வாய் மற்றும் திறமையாக நோயைக் கண்டு கொள்ளும் திறன், தகவல் தொடர்பு ஆகியவற்றைக் குறிக்கும் புதன்இருவரும் வக்கிர நிலை அடையும் போது அறுவை சிகிச்சை செய்வதை தவிர்க்க வேண்டும்.

7.   பௌர்ணமிபிரதமை, அமாவாசைபிரதமை மற்றும் துவாதசிஏகாதசி ஆகிய திதிகளுக்கு இடையேயான இரண்டு விநாழிகைகள், அபாயத்தையும், மிகுந்த கெடுதலையும் தரும் காலம் ஆகும்.

8.   சிசேரியன் மூலமான பிரசவத்திற்கு, ஜோதிடரிடம் நேரம் குறித்துக் கேட்கும் போது அவர் எப்படிப்பட்ட பிரசவம் ஏற்படும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். “ஜாதக தத்துவாஎனும் நூலில், இலக்னத்தில் இருந்தோ அல்லது சந்திரா இலக்னத்தில் இருந்தோ 4 மற்றும் 7 ஆம் பாவங்களில், அசுபக் கிரகங்கள் இடம்பெற, ஜாதகிக்கு சுகமான பிரசவம் ஏற்படாதுஎனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

9.   பிரசவத்தின் போது, 4 ஆம் வீட்டில் செவ்வாயின் அமர்வு பாதிப்பதால், இரு உயிர்களுக்கும் கண்டம் ஏற்படலாம். ஆனால் இலக்னத்துக்கும், சந்திரனுக்கும் சுபர் தொடர்பு இருந்தால் பிரச்சனை இல்லை.

10.  தாய்க்கு நீண்ட ஆயுள் இருந்தாலும், பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்று இருந்தாலும், இராகு 11 இல் இருந்தாலும் தாய்க்கும், குழந்தைக்கும் உயிர் பயம் நீங்கும்

        தாயின் ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் இருந்து, கரப்பம் தரிப்பதற்கு முன் அதற்கு பரிகாரம் செய்யாவிடில், குழந்தைக்கு மரண ஆபத்து ஏற்படலாம்.

        கணவன் அல்லது மனைவியின், இலக்னத்துக்கு அல்லது சந்திரனுக்கு   5 ஆம் வீட்டின் மீது, செவ்வாய், சனி மற்றும் இராகு ஆகியோரின் தாக்கம் இருக்க, பிரசவத்தின் போது தாய்க்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மேலும் இக் கிரகங்களின் தசா புத்திகள் நடந்தால் கேட்கவே வேண்டாம்

        பிரசவ நேரத்தில், சந்திரன் மிருத்யு பாகைகளில் இருந்தால்  அது குழந்தையை பாதிக்கும். ( ஜாதக பாரிஜாதத்தின் படி மேஷத்திலிருந்துமீனம் வரையிலான மிருத்யு பாகைகள் முறையே 8° 25° 22° 22° 21° 1° 4° 23° 18° 20° 20° 20° ஆகும்ஆனால் சந்திரன் புஷ்கராம்சத்தில் இருக்க அந்த நேரத்தில் பிரசவத்தை வைத்துக் கொள்வது மிகுந்த அனுகூலமான நேரமாகக் கருதப்படுகிறது. ( புஷ்கராம்சப் பாகைகள் மேஷம்மீனம் முறையே 21° 14° 18° 8° 19° 9° 24° 11° 23° 14° 19° 9° ஆகும்.)

       “பிரஹத் ஜாதகத்” தின் படி, மேஷ இராசி முதல் மீன இராசி வரை காலபுருஷ தத்துவத்தின்படி ஒவ்வொரு இராசிக்கும், உடலின் ஒவ்வொரு பாகம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அவை முறையே தலை, முகம், மார்பு, இதயம், வயிறு, இடுப்பு, அடி வயிறு, ரகசிய உறுப்புக்கள், தொடைகள், முழங்கால், பட்டக்ஸ் மற்றும் பாதம் ஆகும்.

       உதாரணமாக, சந்திரன் மேஷத்தில் இருக்கும் போது மிக்க அவசியம் ஏற்பட்டாலன்றி, மூளை சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்யக் கூடாது. அதுவே கோசாரச் சந்திரன், ஜனனச் சந்திரனைச் சந்திக்கும் போது, அபாயத்தின் அளவு அதிகமானதாக இருக்கும். இதே போன்று அந்தந்த  பாகத்தை குறிக்கும் இராசிகளில் சந்திரன் இருக்க, அப் பாகத்தில் அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

உடலின்பாகம்
நட்சத்திரங்கள்
கிழமை
தலை
கார்த்திகை, விசாகம், அனுஷம்,பரணி.
சனிக்கிழமை
கண்கள்
ரோஹிணி, சுவாதி, கேட்டை, அஸ்வினி
வெள்ளிக்கிழமை
கழுத்து
மிருகசிரீடம், சித்திரை, மூலம், ரேவதி.
வியாழக்கிழமை
தோள்ப்பட்டை
திருவாதிரை, ஹஸ்தம், பூராடம், உத்திரட்டாதி
புதன் கிழமை
கைகள்
புனர்பூசம்,உத்திரம், உத்திராடம்,பூரட்டாதி,
செவ்வாய்கிழமை
வயிறு
பூசம், பூரம், அபிஜித், சதயம்.

திங்கள்க் கிழமை
பாதம்
ஆயில்யம், மகம், திருவோணம், அவிட்டம்
ஞாயிற்றுக்கிழமை

       மேற்கண்ட அட்டவணைப்படி உள்ள நட்சத்திரத்தன்று, ஜன்ம நட்சத்திரம் வந்தால் அந்த நாளில், அந்த உடல் பாகத்தில் ஆப்ரேஷன் செய்யக் கூடாது.

       அதே போன்று, உடலின் பாகத்திற்கு உரிய நட்சத்திரம், ஜாதகரின் ஜன்ம நட்சத்திரத்தைத் தொடும் அந்த நாளில் அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தைத் தரும். உதாரணமாக, ஜாதகரின் ஜன்ம நட்சத்திரம் பூசம் ஆனால், திங்கள்க் கிழமையன்று வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அன்று செய்யும் ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடியாது.

       இலக்னம் , இராசி மற்றும் நட்சத்திர சந்திகளில், அறுவை சிகிச்சை செய்யக் கூடிய இலக்ன நேரம் அமையக்கூடாது. ( கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய இராசி சந்திகள், ரிக்ஷசந்தி எனப்படும். ( ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி ஆகிய நட்சத்திரத்தின் 4 ஆம் பாதம் ரிக்ஷசந்தி ஆகும். ) இந்த நேரத்தில் பிறந்த குழந்தை உயிர் இழக்கும். ஆனால் இலக்னத்துக்கு சுபர் தொடர்பு இருக்கப் பிழைத்துக் கொள்ளும்.

     அடுத்து கண்டாந்த நேரத்திலும் பிரசவத்தை வைத்துக் கொள்ளக் கூடாது. ( நீர் இராசியின் கடைசியும், நெருப்பு இராசியின் முதல்யும் கண்டாந்தமாகும். கண்டாந்த காலத்தில் ஆப்ரேஷன் செய்வதும் ஆபத்தாகும்.

     இலக்ன சந்தி, இராசி சந்தி மற்றும் நட்சத்திர சந்தி ஆகிய காலங்களில் பிரசவத்தை வைத்துக் கொள்ளக் கூடாது. அதுவும் குரு நீசமாக அல்லது செவ்வாயின் இராசியில் அவர் இடம் பெற்றிருக்கக் கூடாதுஎன சர்வார்த்த சிந்தாமணி” குறிப்பிடுகிறது.

     சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரம் முன்பும், அஸ்தமனத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பும் பிறக்கும் குழந்தையின் இலக்னத்துக்கு 8 இல் அசுபக் கிரக பாதிப்பு இருந்தால் குழந்தை மரணிக்கும்.


கிழமைகளில், வெற்றிகளைத் தரும் அனுகூலமான நட்சத்திரங்கள் --

கிழமை
வெற்றிக்கு அனுகூலமான நட்சத்திரங்கள்
ஞாயிறு
அஸ்வினி, பூசம், உத்திரம், ஹஸ்தம், மூலம், உத்ராடம், உத்திரட்டாதி.
திங்கள்
திருவோணம், பூசம், ரோஹிணி, மிருகசிரீடம்.
செவ்வாய்
அஸ்வினி, ஆயில்யம், கார்த்திகை, உத்திரட்டாதி
புதன்
ரோஹிணி, ஹஸ்தம், மிருகசிரீடம், கார்த்திகை, அனுஷம்.
வியாழன்
அஸ்வினி, பூசம், ரேவதி, புனர்பூசம், அனுஷம்.
வெள்ளி
அஸ்வினி, ரேவதி, புனர்பூசம், அனுஷம்.
சனி
திருவோணம், ரோஹிணி, சுவாதி.

“ஜாதக பாரிஜாதம்” சொல்வது என்ன ?

1.   சந்திரன் பாதிப்பு மற்றும் இலக்னத்துக்கு 8 இல் அசுபக் கிரகங்கள் இருக்க தாய், மகவு இருவருக்கும் மரணம்.

2.   இலக்னத்துக்கு சுபர் தொடர்பு மற்றும் இயற்கை சுபர்கள் கேந்திரங்களில் இடம்பெற அந்த நாள், நேரம் மிகவும் சிறப்பானது ஆகும்.

3.   ஜனன ஜாதகம் அவரின் உடல் (அக) நிலையையும், கோசார நிலையானது புற நிலையையும் குறிகாட்டுகின்றன. மெதுவாகச் செல்லும் கிரகங்களின் தாக்கத்தால்  அது குறிக்கும் உறுப்புக்கான ஆப்ரேஷன் மருத்துவர் இல்லாதது மற்றும் பல காரணங்களால், தள்ளிப் போகலாம், தாமதம் ஆகலாம்.

       முகூர்த்தங்களுக்கு உண்டான தோஷங்களுக்கு ஒரு முடிவில்லை. எந்த ஒரு குறையுமின்றி ஒரு நல்ல நேரத்தை தேர்ந்தெடுப்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றாகும். எனவே, இலக்னமானது இயற்கை சுபர்களான சுக்கிரன், குரு மற்றும் புதன் ஆகியோரின் தொடர்புடன் இருந்தால், பல இலட்சம் தோஷங்கள் மறைத்துவிடும் எனப் பழைய நூல்களில் சொல்லப் பட்டுள்ளது. சூரியனின் 11 ஆம் இட அமர்வு அனைத்து தோஷங்களையும் அகற்றிவிடுகிறது.
          
       --- ஜோதிடகலாநிதி.எஸ்.விஜயநரசிம்மன்.எம்.எஸ்ஸி